வரைக்காட்சிப் படலம் - 954
954.
பேர் அவாவொடு மாசுணம் பேர. வே
பேர. ஆவொடு மா சுணம் பேரவே!
ஆர ஆரத்தி னோடும் மருவியே
ஆர வாரத்தின் ஓடும் அருவியே!
மாசுணம் - பெரும் பாம்புகள்; பேர் அவாவொடு - (இரையை
விரும்பியதனால்) மிகு விருப்புடன்; பேர - பெயர்ந்து செல்வதனால்;
வே பேர - மூங்கில்கள் அடி பெயர்ந்து இற்றுவிழ; ஆவொடு மா
சுணம் பேர - (அது கண்டு அஞ்சிய) காட்டுப் பசுக்கள் ஓடவும்.
(அதனால் எழுந்த) பெரும் புழுதி பறக்கவும் (ஆயின) ; அருவி -
(அம்மலையில் உள்ள) நீரருவிகள்; ஆர ஆரத்தினோடும் -
மிகுதியான முத்துக்களோடும்; மருவி- கலந்து; ஆரவாரத்தின் ஓடும் -
பேரொலியுடன் ஓடிக் கொண்டிருக்கும்.
மலையின் ஒருபுறத்தில் புழுதி பறக்கின்றது. மற்றொரு புறத்தில்
அருவி ஓடுகின்றது. இவ்வாறு மலையின் சிறப்புக் கூறப்படுகிறது. வே:
மூங்கில். சுணம்: சுண்ணம். புழுதி. 27
