மிதிலைக் காட்சிப் படலம் - 595
595.
‘கொல்லும் வேலும் கூற்றமும்
என்னும் இவை எல்லாம்
வெல்லும் வெல்லும்’ என்ன
மதர்க்கும் விழி கொண்டாள்;
சொல்லும் தன்மைத்து அன்று அது;
குன்றும். கவரும். திண்
கல்லும். புல்லும். கண்டு உருக.
பெண் கனி நின்றாள்.
கொல்லும் வேலும் - கொலைத் தொழிலில் வல்ல வேலும்;
கூற்றமும் - இயமனும்; என்னும் இவை எல்லாம் - என்ற
இவை எல்லாவற்றையும்; வெல்லும் வெல்லும் என்ன - வெற்றி
கொள்ளும் என்று சொல்லுமாறு; மதர்க்கும் - களிப்பு அடையும்;
விழி கொண்டாள் - கண்களைப் பெற்றுள்ளாள் (சீதை) ; அது -
சீதையின் அந்த நிலைமை; சொல்லும் தன்மைத்து அன்று -
(யாவராலும் சிறப்பித்து) சொல்லி முடிக்கக்கூடிய தன்மையுடையதாக
இல்லை; பெண்கனி - (ஏனெனில்) பெண்வடிவு கொண்ட கனி
போன்ற அச்சீதை; குன்றும் - பெருந் தோற்றமுடைய மலைகளும்;
சுவரும் திண்கல்லும் - (சிறிய) சுவர்களும் வலிய கற்களும்; புல்லும்
- (மெல்லிய) புற்களும்; கண்டு உருக . (இப்படிப்பட்ட
அசையாத பொருள்களும்) தன் அழகைப் பார்த்து உருக்கம்
அடையுமாறு; நின்றாள் - நின்றிருந்தாள்.
வெல்லும் வெல்லும் - அடுக்கு. துணிவுப் பொருள் தருவது. 32
