மிதிலைக் காட்சிப் படலம் - 596
596.
வெங் களி விழிக்கு ஒரு
விழவும் ஆய். அவர்
கண்களின் காணவே
களிப்பு நல்கலால்.
மங்கையர்க்கு இனியது ஓர்
மருந்தும் ஆயவள்.
எங்கள் நாயகற்கு. இனி.
யாவது ஆம்கொலோ?
வெங்களி விழிக்கு- (பார்க்கும் ஆடவர்களின்) விரும்பத்தக்க
களிப்பையுடைய கண்களுக்கு; ஒரு விழியும் ஆயவர் - சிறந்த ஒரு
திருவிழாக் காட்சி போன்று உற்சாகம் தருகின்ற மகளிர்; கண்களில்
காணவே - (தத்தம்) கண்களால் (தன்னைக்) காணுந்தோறும்; களிப்பு
நல்கலால் - (அப் பெண்களுக்கும்) உள்ளக் களிப்பைத் தருவதால்;
மங்கையர்க்கு - அம் மங்கையர்க்கெல்லாம்; இனியது ஓர் மருந்தும்
- இனிய சுவையைத் தரக் கூடிய அமுதம் போன்ற; ஆயவள்
- சீதையானவள்; இனி எங்கள் நாயகற்கு - இனிமேல் எங்கள்
தலைவனான இராமனுக்கு; யாவது ஆம் கொலோ - எத்தகைய
பொருளாவாளோ?
ஆடவர்களின் கண்களுக்குக் களிப்பு தருகின்ற பெண்களும் கூடச்
சீதையின் அழகைக்கண்டு களிப்படைகின்றார்கள். அப்படியிருக்க
ஆண்களில் அழகனாகிய இராமனுக்கு இவளது அழகு
எத்தன்மையதாக இருக்குமோ? கனியான சீதை இங்கு அமுதமாகிறாள்;
ஏனெனில் சீதை அமுதினும் இனியவள் ஆதலின். 33
