பொதுப் பங்கு வெளியீடு

பொதுப் பங்கு வெளியீடு

bookmark

இந்தியாவில் பங்கு முதலீட்டு பழக்கத்தை பரவலாக்கிய பெருமை திருபாய் அம்பானிக்கு உரியது. 1977-ஆம் ஆண்டில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து 58,000 க்கும் அதிகமான சிறு முதலீட்டாளர்கள் ரிலையன்ஸின் தொடக்கப் பொதுப் பங்கு வெளியீட்டை வாங்கினர். தனது நிறுவனத்தின் பங்குதாரர்களாவது லாபகரமானது என்று குஜராத்தின் கிராமப் பகுதிகளின் ஏராளமான சிறு முதலீட்டாளர்களை திருபாயால் நம்பச் செய்ய முடிந்தது.

ஆண்டுப் பொதுக் கூட்டங்களை விளையாட்டு அரங்கங்களில் நடத்திய முதல் தனியார் துறை நிறுவனம் ரிலையன்ஸ் குழுமம் தான். 1986-ஆம் ஆண்டில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் கிராஸ் மெய்டன், மும்பையில் நடந்தது. இதில் 35,000 க்கும் அதிகமான பங்குதாரர்களும், ரிலையன்ஸ் குடும்பத்தாரும் கலந்து கொண்டனர்.

முதல்முறையாக முதலீடு செய்யும் பெரும் எண்ணிக்கையிலான சில்லறை முதலீட்டாளர்கள் ரிலையன்ஸில் முதலீடு செய்யும் வகையில் திருபாய் அம்பானியால் நம்பிக்கையேற்படுத்த முடிந்தது.

1980களின் ஆரம்பத்தில் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டது.