பு. உ. சின்னப்பா

பு. உ. சின்னப்பா

bookmark

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:

சின்னப்பா புதுக்கோட்டையில் நொண்டி வாத்தியார் பள்ளிக்கூடத்தில் நான்கைந்து ஆண்டுகள் படித்தார். சின்னப்பாவுக்கு இசையில் பெரும் ஆர்வம் இருந்தது. தகப்பனார் மேடையில் பாடும் பாடல்களைக் கேட்டுத் தானும் பாடுவார். கோவில்களில் நடக்கும் கூட்டு வழிபாடுகளில் பாடுவதற்கு இவரை அழைப்பார்கள். இதனால் இவருக்கு படிப்பில் ஆர்வம் செலுத்தவில்லை. பள்ளிக்கூடத்தை விட்டு விலகி, சிலம்பம், மல்லு, குஸ்தி ஆகியவையும் பழகினார். குடும்ப நிதி நிலை மோசமடையவே, சின்னப்பா நூல் கடை ஒன்றில் பணியில் அமர்ந்தார். சில நாட்களில் அவ்வேலை பிடிக்காமல், நாடக நிறுவனமொன்றில் சேர முயற்சி செய்தார்.

திரைப்படத்துறையில் அவரின் பயணம்:

ஆரம்பக் காலத்தில் அவர் டி. டி. சங்கரதாஸ் சுவாமிகளின் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா என்ற நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்தார். அப்பொழுது சின்னப்பாவிற்கு சிறு சிறு வேடங்களே கொடுக்கப்பட்டன. மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி அப்போது புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரங்கில் தங்கள் நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தனர். பிரகதாம்பாள் தியேட்டரின் முதலாளி நாராயணன் செட்டியார் சின்னப்பாவின் பாடல்களைக் கேட்டிருக்கிறார். அவரின் சிபாரிசில் பாய்சு கம்பனி முதலாளி பழனியப்பா பிள்ளை சின்னப்பாவை 15ரூபாய் சம்பளத்தில் தனது நாடகக் கம்பனியில் சேர்த்துக் கொண்டார். அவர்களின் நாடகங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கினார். மிக விரைவிலேயே ராஜபார்ட் போன்ற வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். அவருடன் அப்போது நாடகங்களில் நடித்தவர்களில் பி. ஜி. வெங்கடேசன், ம. கோ. இராமச்சந்திரன், எம். கே. ராதா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

முதன் முதலில் ஜூபிட்டரின் சவுக்கடி சந்திரகாந்தாமூலம் திரைப்படத்துறையில் புகுந்தார் சின்னப்பா. சுண்டூர் இளவரசனாக அவர் நடித்தார். அத்திரைப்படத்தில் அவர் சின்னசாமி பெயரிலேயே நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 1938ஆம் ஆண்டில்பஞ்சாப் கேசரி, அனாதைப் பெண், யயாதி போன்ற படங்களில் நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் சின்னப்பாவை 1940 இல் தனதுஉத்தம புத்திரன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தார். தமிழில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த பெருமைக்குரியவர் இவரே. படம் பெரும் வெற்றி பெற்றது. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் மனோன்மணி (1942) வசூலில் பெரும் வெற்றியடைந்தது.

ஜகதலப்பிரதாபன் பிரதாபனாகத் தோன்றி ஐந்து இசைக்கருவிகளை வாசித்து அமர்க்களப்படுத் மங்கையர்க்கரசியில் மூன்று வேடங்களில் நடித்தார். இப்படத்தில் அவர் பாடிய காதல் கனிரசமே. பாடல் இன்றும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகிறது.

இறப்பு:

சின்னப்பா 1951 செப்டம்பர் 23 அன்று இரவு தனது 35ஆவது வயதில்புதுக்கோட்டையில் காலமானார். இறப்பதற்கு முன் இவர் நடித்து வெளிவந்த படம் வனசுந்தரி. கடைசியாக இவர் நடித்துக்கொண்டிருந்த படம் சுதர்சன் இவர் இறந்த பின்னர் வெளிவந்தது.