எழுச்சிப் படலம் - 841
ஒரு காதலியின் கடைக்கண்நோக்கச் சிறப்பு
841.
பாண்டிலின் வைத்த ஓர் பாவைதன்னொடும்
ஈண்டிய அன்பினோடு ஏகுவான். இடைக்
காண்டலும். நோக்கிய கடைக்கண் அஞ்சனம்.
ஆண்தகைக்கு இனியது ஓர் அமுதம் ஆயதே!
பாண்டிலின் வைத்த- வண்டியில் ஏற்றப்பட்ட; ஓர் பாவை - ஒரு
பெண்; ஈண்டிய அன்பினோடு - நெருக்கமான அன்பு கொண்டவனாகி;
தன்னொடும் ஏகுவான் - தன்னோடு ஓடி வருகின்ற இளையவனை;
இடை காண்டலும் - இடை வழியிலே தன் பார்வையைச் செலுத்தவும்;
நோக்கிய - (அவனை) பார்த்த; கடைக்கண் - அந்தக்
கடைக்கண்ணினது; அஞ்சனம் - மையானது; ஆண் தகைக்கு - (அப்
பெண்ணால் பார்க்கப் பெற்ற) அந்த ஆடவனுக்கு; இனியது -
இனிமையான; ஓர் அமுதம் - சிறந்த அமுதம்; ஆயது - ஆயிற்று.
ஓர் ஆண்மகன் ஒருத்தியை வண்டியில் ஏற்றிவிட்டு
அதன்பின்னாலே ஓடிவருகிறான்; அவன் மேல் அவள் தன்
கடைக்கண் பார்வையைச் செலுத்துகின்றாள்; அவன் அப்
பார்வையைக் கண்டது அவனுக்கு அமுதத்தை உண்டதுபோன்று
இருந்தது என்றார். 25
