நிம்பபுரம்

பாடல் 754
ராகம் - ஸிம்மேந்திர மத்யமம்
தாளம் - ஆதி
தந்ததன தான தந்ததன தான
தந்ததன தான ...... தனதான
அஞ்சுவித பூத முங்கரண நாலு
மந்திபகல் யாது ...... மறியாத
அந்தநடு வாதி யொன்றுமில தான
அந்தவொரு வீடு ...... பெறுமாறு
மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர்
மங்கைதனை நாடி ...... வனமீது
வந்தசர ணார விந்தமது பாட
வண்டமிழ்வி நோத ...... மருள்வாயே
குஞ்சரக லாப வஞ்சியபி ராம
குங்குமப டீர ...... வதிரேகக்
கும்பதன மீது சென்றணையு மார்ப
குன்றுதடு மாற ...... இகல்கோப
வெஞ்சமர சூர னெஞ்சுபக வீர
வென்றிவடி வேலை ...... விடுவோனே
விம்பமதில் சூழு நிம்பபுர வாண
விண்டலம கீபர் ...... பெருமாளே.