நகர் நீங்கு படலம் - 1857
இராமன் மாற்றம்
இராமன் வசிட்டனுக்கு உரைத்த மறுமொழி
1857.
‘அன்னவன் பணி தலை ஏந்தி ஆற்றுதல்
என்னது கடன்; அவன் இடரை நீக்குதல்
நின்னது கடன்; இது நெறியும்’ என்றனன் -
பன்னகப் பாயலின் பள்ளி நீங்கினான்.
பன்னகப் பாயலின் பள்ளி நீங்கினான் - ஆதிசேடனாகிய
படுக்கையில் அறிதுயில்செய்தல் நீங்கி அயோத்தி வந்த இராமன்
(முனிவனை நோக்கி); ‘அன்னவன் -தயரதனது; பணி தலை ஏந்தி
ஆற்றுதல் என்னது கடன் - கட்டளையைச் சிரமேற் கொண்டுசெய்தல்
எனது கடமையாகும்; அவன் இடரை நீக்குதல் நின்னது கடன் -
அத்தயரதனது துன்பத்தைப் போக்கி ஆற்றுவித்தல் உனது கடமையாகும்;
இது நெறியும்’ - இது நீதியும்ஆகும்;’ என்றனன் -.
அவதார நோக்கம் கானகம் செல்வது, அதற்காகவே வந்தவன்
என்பதை அறிவிக்க, ‘பன்னகப்பாயலின் பள்ளி நீங்கினான்’ என்றார். 162
