நகர் நீங்கு படலம் - 1828

இராமன் மொழி (1828-1829)
இராமன் மறுத்து உரைத்தல்
1828.
வரதன் பகர்வான்; ‘வரம்
பெற்றவள்தான் இவ் வையம்
சரதம் உடையாள்; அவள், என்
தனித் தாதை, செப்பப்
பரதன் பெறுவான்; இனி, யான்
படைக்கின்ற செல்வம்
விரதம்; இதின் நல்லது
வேறு இனி யாவது?” என்றான்.
வரதன் - இராமன்; பகர்வான் - கூறுவான்; ‘வரம் பெற்றவள்
தான்- (அரசனுக்குச் சாரதியாய் இருந்து ) வரம் வாங்கிக் கொண்டவளாகிய
கைகேயியை; இவ்வையம் சரதம் உடையாள் - இவ் வுலக ஆட்சியை
மெய்யாகப் பெறுதற்கு உரிமை உடையவளாவாள்; அவள், என் தனித்
தாதை செப்பப் பரதன் பெறுவான் - அவளும், என்ஒப்பற்ற
தந்தையாகிய தயரதனும் சொல்லப் பரதன் (இவ்வரசாட்சியைப் ) பெறுவான்;
இனி- அடுத்து; யான் படைக்கின்ற செல்வம் - நான் பெறுகின்ற
செல்வம்; விரதம் - தவம் ஆகும்; இதின் நல்லது - இத்தவத்தினும்
நன்மையானது; இனி வேறு யாவது?- இனி வேறு என்ன உள்ளது;’
என்றான் -.
நான் இதனை நல்லது என்றும், இதற்கு மேலாக, நன்மை
வேறில்லை என்றும்எண்ணுகிறபோது, என்னையே தாயும் தந்தையும் ஆகக்
கருதும் நீ என்னுடைய நன்மையைக் கெடுக்கமுயற்சிக்கலாமா? என்பது
குறிப்பு. 133