நகர் நீங்கு படலம் - 1712

கோசலையும் வனத்திற்கு வருவேன் எனல்
கோசலை வேண்டுகோள்
1712.
‘ஆகின், ஐய! அரசன்தன் ஆணையால்
ஏகல் என்பது யானும் உரைக்கிலென்;
சாகலா உயிர் தாங்க வல்லேனையும்,
போகின் நின்னொடும் கொண்டனை போகு’ என்றான்.
‘ஐய! - இராமனே!; ஆகின் - அப்படியானால்; அரசன்தன்
ஆணையால் -அரசன் இட்ட கட்டளை என்பதால்; யானும் ஏகல்
என்பது உரைக்கிலென் - நானும் நீ வனம் போகாதே என்பதைச்
சொல்லவில்லை; போகின் - (நீ) வனம் போவதாயின்; சாகலா உயிர்
தாங்க வல்லேனையும் - சாகாத இவ்வியிரத் தூக்கமாட்டால்
சுமக்கின்றவளாகிய என்னையும்; நின்னொடும் கொண்டனை போகு’ -
உன்னோடு அழைத்துக்கொண்டு போவாயாக;’ என்றான் -.
‘அரசன் கட்டளையைக்குடிமகன் மறுத்தல் கூடாது; ஆகையால்,
அதை நான் மறுக்கவில்லை,உன்னைப் பிரிந்து உயிரைச் சுமந்து என்னால்
வாழ முடியாது; உயிர்போகவும் போகாது; ஆகையால்உன்னோடு
என்னையும் காட்டிற்கு அழைத்துச் செல்’ என்றாள் கோசலை. ‘பரதன்
அரசளாளுதல், இராமன் வனம்போதல்’என்ற இரண்டையும் கோசலை
ஏற்றுக்கொள்ளச் செய்வதில் இராமன் வெற்றிஅடைந்தான் என்பது இதனால்
போதரும். 18