ஜான் மில்டன்

bookmark

ஜான் மில்டன் (John Milton) புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர். ஆங்கில உலகத்தில் ஷேக்ஸ்பியர் அவர்களுக்கு அடுத்த படியாக போற்றப்படுபவர் .அவர் தன்னுடைய இளம் வயதிலேயே கவிதைகளை எழுத ஆரம்பத்து விட்டார். தன்னுடைய கவித்திறன் மூலம் இங்கிலாந்து மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்டி மன்னராட்சி மகுடத்தை வீழ்த்துவதற்கு துணை புரிந்தவர் மில்டன். டிசம்பர் 9, 2008 மில்டனின்400வது பிறந்த தினம். உலகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்களுக்கு மில்டனின் கவித்திறன் ஆதர்சமாய் விளங்குகிறது. மில்டனின் இலக்கிய சுவை மட்டுமல்ல; அவரது எழுத்து நடையும் உலக மக்களிடம் பிரசித்தி பெற்றது. 'மில்டனைப் போல் எழுதுகிறாயே!'என்று பிற எழுத்தாளர்களை பாராட்டும் அளவிற்கு அவரது எழுத்தாற்றல் புலமை வாய்ந்தது.

மதவாதிகளும், பழமைவாதிகளும்,கொடுங்கோல் ஆட்சியாளர்களும் மனித சமூகம் முன்னேறும் போதெல்லாம், அந்த வரலாற்று சக்கரத்தை பின்னுக்கு இழுத்தவர்கள். மில்டனின் எழுத்து மக்களை கவ்வியபோது,அவரது எழுத்துக்களை 'தீ' நாக்குகளுக்கு உணவாக்கி மகிழ்ந்தனர் ஆட்சியாளர்களும்,பிற்போக்கு கிருத்துவ மதவாதிகளும். இவர்கள் மட்டுமா? கல்வியாளர்களும் கூடத்தான்; அவர் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் கூட முதல் இடத்தை பிடித்த மாணவர்கள் பட்டியலில் இருந்த 'ஜான் மில்டனின்' பெயரை 300 ஆண்டுகளுக்கும் மேலாக கருப்பு மையிட்டு மறைத்தது. மில்டன் மட்டுமல்ல; 'குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தவனே மனிதன்' என்று உண்மையை கண்டுரைத்த சார்லஸ்டார்வினையும் மறைத்தார்கள் என்பதையும் இந்நேரத்தில் குறிப்பிட வேண்டியுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சீப்சைட், பிரட் ஸ்ட்ரீட்டில் டிசம்பர் 9, 1608 இல் வசதியான குடும்பத்தில் பிறந்தார் ஜான் மில்டன். அவரது தந்தை அன்றைக்கு தோன்றிய தூய்மைவாத (Puritanism) இயக்க ஆதரவாளராக இருந்ததோடு, கலை - இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்; இது மில்டனின் இளம் வயதில் தாக்கத்தை உண்டாக்கியது என்பதை சொல்லத் தேவையில்லை. செயின்ட் பால் பள்ளியில் படிப்பைத் துவங்கி, கிருத்துவ கல்லூரியில் பயின்று, 1632 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயின்று எம்.ஏ. பட்டம் பெற்றார் மில்டன். அத்துடன் லத்தீன், எபிரேயம்,இத்தாலிய மொழிகளில் நல்ல புலமை பெற்றிருந்தார் மில்டன்.

உலக மகாகவி என்று போற்றப்படும் சேக்ஸ்பியரின் மீது மில்டன் அளவற்ற காதல் கொண்டிருந்தாலும், அவரது எண்ணமெல்லாம் பாதிரியாராக மாற வேண்டும் என்றே இருந்தது. அந்த அளவிற்கு கிறித்துவத்தையும் - பைபிளையும் நன்கு பயின்றிருந்தார். இந்த பயிற்சிதான் பின்னாளில் அவரது உலப் புகழ் பெற்ற படைப்புகளான 'இழந்த சொர்க்கத்தையும்', 'மீண்ட சொர்க்கத்தையும்' எழுதுவதற்கு கருவானது. கல்வி பயணத்தை மில்டன் முடித்துக் கொண்டாலும், உடனடியாக வேலை எதற்கும் செல்லவில்லை. மாறாக, வீட்டிலிருந்த படியே பல்வேறு அரும்பெரும் நூல்களை கற்றுத் தேர்ந்தார்.

அக்காலத்தில் கத்தோலிக்க கிருஸ்தவர்கள் மக்கள் பலரை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார் மில்டன். அதற்குப் பழிவாங்க அவர் எழுதிய “ paradaise lost” என்ற கவிதைக்கு கடுமையான எதிர்ப்பை (அக்காலத்து கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் அவர்களது திருச் சபை ) காட்டினார்கள். அதிகாரம் அனைத்தும் கத்தோலிக்க மடங்களின் கைகளில் இருந்ததால், ஜான் மில்டனாள் எதுவுமே செய்ய முடியவில்லை. அதன் விளைவு “ paradaise lost” கவிதைகளின் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்கவே வழியில்லாமல் நின்றது. மில்டன் போட்ட பணம் அத்தனையும் முடங்கியது.அக்கவிதையில் ,“ (paradaise lost) மில்டன் சைத்தானை உயர்வாக எழுதி உள்ளார் என்று மக்களிடையே கருத்து பரப்பப் பட்டதுதான் இதற்குக் காரணம் .சில காலம் மில்டன் இதனால் வறுமையில் வாடினார். அவரது முதல் மனைவி அவரை விட்டு சென்று விட்டார்கள். பல காலம் கழித்து அவர் செய்து கொண்ட இரண்டாவது திருமணமும் தோல்வியில் முடிந்தது.

அறிவுத் தாகமெடுத்த மில்டன் 1633-ஆம் ஆண்டு வெளியுலக பயணத்தை துவக்கினார். பிரான்ஸ்,இத்தாலி உட்பட பல்வேறு நகரங்களுக்கு இக்காலத்தில் பயணம் செய்தார். அவர் இத்தாலிக்கு சென்றிருந்த போது, டெலஸ்கோப் வழியாக உண்மையை கண்டறிந்து, 'உலகம் உருண்டையானது - சூரியனைச் சுற்றிதான் இந்த புவிக் கோளம் இயங்குகிறது' என்ற பேரூண்மையை சொன்ன உலகமகா அறிவியல் விஞ்ஞானி கலிலியோவை கண்டு அவருடன் உரையாடினார். இந்த சந்திப்பை தனது வாழ்நாளில் முக்கியமான ஒன்றாக கருதினார் மில்டன்.

பிறகு மிகவும் வயதான காலத்தில் பார்வை மங்கிப் போன மில்ட்டனை அவரது பிள்ளைகள் சரியாக கவனித்துக் கொள்ளாமல் வெறுப்பை காட்டினார்கள். அப்போது தன் மேல் அன்பு கொண்ட ஒரு நல்ல பெண்ணை திருமணம் செய்து கொண்டார் மில்டன். அதுவும் அவரது பிள்ளைகளுக்கு வெறுப்பை தான் தந்தது." இந்த வயதில் தந்தைக்குத் திருமணம் தேவையா? " என்ற ரீதியில் பேசினார்கள் அவரது மகள்கள். ஆனால் , மில்டனின் அந்தப் புது மனைவி மில்டனின் மீது அன்பைப் பொழிந்தாள்.அவரது பார்வை ஒட்டு மொத்தமாகப் பறிபோன நிலையிலும், அவளது அன்பு தொடர்ந்தது.

தனது பார்வை பறிபோன நிலையை நினைத்து மில்டன் இவ்வாறு எழுதுகிறார் " பருவங்கள் வருடந்தோறும் வந்து போகின்றன ; எனக்கோ வசந்தத்தின் மொட்டோ , கோடையின் ரோஜாவோ வருவதே இல்லை. விலங்கு மந்தைகள் ,மங்காத ஒளி ததும்பும் மனிதர்களின் முகங்கள் எதுவுமே எனக்குத் தெரியவில்லை. கரு மேகங்கள் மட்டுமே என்னை சூழ்ந்து இருக்கிறது. எங்கும் இருட்டு, இருட்டு, இருட்டு மட்டுமே.வாழ்வின் பாதிப் பொழுது பேரிருளில் மறைந்து போனது எனக்கு. என் வெளிச்சத்ததை எப்படி வெளியிட்டேன் நான்? என் அறிவை அழிக்க வருகிறதா மரணம் .

எனக்கான வெளிச்சம் ஏன் மறைக்கப் பட்டது இறைவா என்று கேட்கிறேன். அதற்கு இறைவன் பதிலளிக்கிறார், “ நான் இதனைச் செய்ய வில்லை, மேலும் சுமைகளை சுமப்பவர்கள் பேறு பெறுகிறார்கள்.நீ பேறு பெறப் பிறந்தவன் அதனால் தான் நீயும் சுமக்கிறாய் என்று."