ஜலகண்டபுரம் கண்ணன்
அரசியல் வாழ்க்கை:
பெரியார் ஈ. வே. இராமசாமி. தோற்றுவித்த சுயமரியாதை இயக்கத்தில் இவர் தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1946ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சி என்ற தென்னிந்திய நலவுரிமைச் சங்கமும் ஒன்றிணைக்கப்பட்டு திராவிடர் கழகம் தொடங்கப்பட்ட பொழுது, அதில் உறுப்பினர் ஆனார். அண்ணாதுரை தலைமையில் திராவிடர் கழகத்தைவிட்டுப் பிரிந்த பலர் ஒன்றிணைந்து 17.9.1949ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். அப்பொழுது கண்ணனும் தி.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
அவரின் படைப்பும் தொழிலும்:
இவர் சிறுகதைகள், வானொலி நாடகங்கள், மேடை நாடகங்கள், நெடுங்கதைகள், கட்டுரைகள், திரைப்பட உரையாடல்கள், இசைப்பாடல்கள் என பல்வேறு வடிவங்களில் படைப்புகளை உருவாக்கி இருக்கிறார். எழுத்தாளர், நடிகர், அச்சக உரிமையாளர், இதழாளர், பதிப்பக உரிமையாளர் எனப் பல தொழில்களைச் செய்திருக்கிறார்.
அவரின் படைப்புகள் சில:
வானொலி நாடகங்கள்
-
பொன்னப்பன் மகன் (17.1.1949ஆம் நாள் திருச்சி வானொலியில் ஒளிபரப்பானது)
-
கன்னியின் சபதம்
-
நந்திவர்மன் (26.7.1954ஆம் நாள் திருச்சி வானொலியில் ஒளிபரப்பானது)
-
மேடை நாடகங்கள்
-
புரட்சிப்பாடகன்
-
மின்னொளி (நவம்பர் 1949)
-
குன்றுடையான் - அண்ணன்மார் கதை (6.3.1968)
-
பகைமை வென்றான்
-
தமிழ்வாழத் தலைகொடுத்தான்
-
பாண்டிய மகுடம்
-
மான மறவன்
-
வீரவாலி
-
நந்திவர்மன் (நவம்பர் 1968)
-
பதினாறும் பெறுக!
-
இசைப்பாடல்கள்
-
குறள் நெறி இசையமுது - முதற் பகுதி (ஏப்ரல் 1967)
-
குறள் நெறி இசையமுது - இரண்டாம் பகுதி (டிசம்பர் 1967)
-
இதழ்:
15.1.1951 ஆம் நாள் பகுத்தறிவு என்னும் திங்களிதழைத் தொடங்கினார். 13.7.1956 முதல் இவ்விதழைக் கிழமை இதழாக வெளியிட்டார். 1951- 52ஆம் ஆண்டுகளில் நாவலர் இரா. நெடுஞ்செழியன் மொழிபெயர்த்த இராபர்ட் இங்கர்சால் ஆங்கிலத்தில் எழுதிய சமுதாய விடுதலை என்னும் நூல் இவ்விதழில் தொடர் கட்டுரையாக வெளிவந்தது. பாவலரேறு பெருஞ்சித்திரனார் தன்னுடைய இயற்பெயரான துரை மாணிக்கம் என்னும் பெயரில் எழுதிய வெம்புலியே வாளெடு! என்னும் கவிதையும் இவ்விதழில் வெளிவந்திருக்கிறது.
கண்ணன், செந்தமிழ் அச்சுக்கூடம் என்னும் அச்சகத்தையும் தென்றல் நூற்பதிப்புக் கழகம் என்னும் பதிப்பகத்தையும் நடத்தியிருக்கிறார்.
