எழுச்சிப் படலம் - 855

bookmark

பிடியின்மேற் சிந்தரும் போதல்

சிந்தர்தம் செலவு
 
855.    

வாம மேகலையாரிடை. வாலதி
பூமி தோய் பிடி. சிந்தரும் போயினார் -
காமர் தாமரை நாள்மலர்க் கானத்துள்.
ஆமைமேல் வரும் தேரையின் ஆங்குஅரோ.
 
காமர் தாமரை- அழகிய தாமரையின்; நாள் மலர்க்  கானத்துள்-
அன்று   பூத்த  பூங்காட்டில்;  ஆமைமேல்  வரு  -  ஆமை  மேல்
வருகின்ற;  தேரையின்  -  தேரையைப் போல; வாலதி பூமி தோய்-
வால்கள்  பூமியில்  படியக்கூடிய; பிடி - பெண் யானைகளில்;  வாமம்
மேகலையாரிடை - அழகிய மேகலையணிந்த பெண்களோடு; சிந்தரும்
போயினார் - சிந்தரும் சென்றார்கள்.

தாமரைக்     காடு மகளிர்க்கும். ஆமை பெண் யானைக்கும். தேரை
சிந்தர்க்கும்  உவமையாயின என்பது.   சிந்தர்:  மூன்றடி உயரமுள்ளவர்
-   அந்தப்புரத்தில்  மெய்க்காப்பாளராவார்.   பெண்யானைக்கு   வால்
பூமியில் தோய்தல் உத்தம இலக்கணமாகும்.                      39