எழுச்சிப் படலம் - 837
ஊடிய மகளிர் செல்லுதல்
ஊடிய மகளிரின் போக்கு
837.
ஊடிய மனத்தினர். உறாத நோக்கினர்.
நீடிய உயிர்ப்பினர். நெரிந்த நெற்றியர்;
தோடு அவிழ் கோதையும் துறந்த கூந்தலர்;
ஆடவர் உயிர் என அருகு போயினார்.
ஊடிய மனத்தினர்- (தம் கணவர்மீது) பிணக்கு கொண்ட
மகளிரும்; உறாத நோக்கினர் - (தம் கணவர்மீது) கண்பார்வையைச்
செலுத்தாதவர்களும்; நீடிய உயிர்ப்பினர் - பெருமூச்சு விடுபவர்களும்;
நெரிந்த நெற்றியர் - (கோபத்தால்) புருவம் நெரிந்த
நெற்றியையுடையவர்களும்; தோடு அவிழ் கோதையும் - இதழ் விரிந்த
மலர் மாலையையும்; துறந்த கூந்தலர் - துறந்த கூந்தலம்
உடையவர்களாகிய மகளிர்; ஆடவர் உயிரென - ஆண்களது உயிர்
பெண்ணுருக் கொண்டதுபோல என்று சொல்லுமாறு; அருகு - (அந்த
ஆடவரின்) பக்கத்திலே; போயினார் - சென்றார்கள்.
முன்பு ஊடின பெண்கள் இராமனது திருமணச் செய்தி
கேட்டவுடன். அவ் ஊடல் நீங்கித் தத்தம் கணவரோடு அவர்களின்
உயிர்போலச் சென்றனர் என்பது. தன்மை நவிற்சியணி. 21
