உண்டாட்டுப் படலம் - 1087
மாலையாற் கட்டுண்ட தோளின் மாண்பு
1087.
ஏலும் இவ் வன்மையை என் என்று உன்னுதும்-
ஆலை மென் கரும்பு அனான் ஒருவற்கு. ஆங்கு. ஒரு
சோலை மென் குயில் அனாள் சுற்றி வீக்கிய
மாலையை நிமிர்ந்தில. வயிரத் தோள்களே?
ஆலைமென் கரும்பு அனான் ஒருவற்கு - ஆலையில் அரைபட்ட
மெல்லிய கரும்பு போலப் (பிரிவுத் துயரால்) வருந்திய ஒரு வீரனுக்கு;
ஆங்கு ஒரு சோலைமென் குயில் அனாள் - அங்கு. சேலையில்
உள்ள மெல்லிய குயில் போன்ற குரல் உடையாள் ஒருத்தி; சுற்றி
வீக்கிய மாலையை - (அவனைச்) சுற்றிக் கட்டிய (மலர்) மாலையை;
வயிரத் தோள்கள் நிமிர்ந்தில - அவ்வீரனுடைய வயிரம் போன்ற
வலிய தோள்கள் மீறி நிமிர்ந்தெழ இயலவில்லை; ஏலும்
இவ்வன்மையை என் என்று உன்னுதும்? - அவனைக் கட்டியுள்ள
இம் மாலையில் அமைந்துள்ள வலிமையை என்னென்று கருதுவோம்?
காதலின் வலிமையை மாலையின் மேலிட்டுக் கூறியவாறு.
வயிரதத்தோள்கள் அவனுடையவை - ஆனால். மாலையை அறுக்க
மாட்டாத வயிரத்தோள்கள் என வியந்தார். மாலையால் காதலரை
மங்கையர் கட்டுதல்: “எல்லியம்போது இனிதிருத்தல் இருந்ததோர்
இடவகையில். மல்லிகைமா மாலை கொண்டு அங்கு ஆர்த்தமோர்
அடையாளம்” (பெரியாழ். திரு. 3: 10 :2) ; “கங்குல் பால் புகுந்த
கள்வன் இவன் எனக் கதுப்பில் தாழ்ந்த தொங்கலால் முன்கை
யாத்து” (சீவக. 1988) என வருதல் காண்க. 41
