உண்டாட்டுப் படலம் - 1088

bookmark

ஒருத்தி தூதனுப்ப பாங்கியைக் குறிப்பால் நோக்குதல்

1088.

சோர் குழல் ஒருத்தி தன் வருத்தம் சொல்லுவான்.
மாரனை நோக்கி. ஓர் மாதை நோக்கினாள்;
காரிகை இவள். அவள் கருத்தை நோக்கி. ஓர்
வேரி அம் தெரியலான் வீடு நோக்கினாள்.
 
சோர்  குழல் ஒருத்தி - தாழ்ந்த கூந்தலையுடையாள் ஒருத்தி; தன்
வருத்தம்  சொல்லுவான் - தனது வருத்தத்தைச் சொல்லும் பொருட்டு;
மாரனை நோக்கி ஓர் மாதை நோக்கினாள் - சித்திர கூடத்திலிருந்து
மன்மதனின்   ஓவியத்தைப்   பார்த்து.   தன்  தோழியை நோக்கினாள்;
காரிகை   இவள்.  அவள் கருத்தை நோக்கி  -  அத்தோழி.  தான்
மன்மதன்  கணையால் வருந்தும்  எனும்  கருத்தை.  (குறிப்பால்) அவள்
உணர்த்துகிறாள்  என்பதை  தன்  (குறிப்பால்  அறிந்து);  ஓர்வேரியந்
தெரியலான்   வீடுநோக்கினாள்  - தேனுடைய  மாலையை  யணிந்த
அவள் கணவன் இருக்கும் மனையை நோக்கி நடக்கலுற்றாள்.

“தாம்   உறு காமத்தன்மை தாங்களே உரைப்பது என்பது அருங்குல
மகளிர்க்கு    ஆகாது”    (கம்ப.    2776)    ஆதலின்.   குறிப்பால்
உணர்த்தியவாறு.  சொல்லுவான்  -  வினையெச்சம்.  காரணப்பொருட்டு.
மன்மதனை  நோக்கியது;  அவனால்  படும்  வருத்தம் உரைக்க. மாதை
நோக்கியது:  அவ்வருத்தம்  உன்னால்   தான்   களையப்படவேண்டும்
என்பது   குறிக்க....   தோழி.   இவள்    வருத்தம்   போக்க.  அவன்
வரவேண்டும்    எனும்   குறிப்புணர்ந்து    கணவன்    இருக்குமிடம்
நோக்கினாள்.   “குறிப்பிற்   குறிப்புணர்   வாரை  உறுப்பினுள்  யாது
கொடுத்தும் கொளல்” (திருக். 703).                            42