ஹோ சி மின் - 1

ஹோ சி மின் - 1

bookmark

ஹோ சி மின் வியட்நாமின் புரட்சித் தலைவராக இருந்தவர், பின்னர் வடக்கு வியட்நாமின் பிரதமராகவும் (1946–1955), அதிபராகவும் (1946–1969) இருந்தவர். பல சோதனைகளைக் கடந்து நாட்டை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்ற ஒரு நிஜத் தலைவன். ஹோ வியட் மின் விடுதலை இயக்கத்தை 1941 இலிருந்து முன்னின்று நடத்தி, 1954 இல் பிரெஞ்சுப் படையினருடன் சண்டையிட்டு வெற்றி பெற்றார். அவ்வெற்றி அவருக்கு கம்யூனிச நாடாக வடக்கு வியட்நாமை அமைக்க உதவியது. வியட்நாம் போரை அவரது இறப்பு வரையில் முன்னின்று நடத்தினார். ஆறு ஆண்டுகளின் பின்னர் வட வியட்நாமின் வெற்றியுடன் போர் முடிவுக்கு வந்ததுடன் இரண்டு வியட்நாம்களும் ஒன்றிணைந்தன. தெற்கு வியட்நாமின் தலைநகராயிருந்த சாய்கோன் (Saigon) நகரம் ஹோவின் நினைவாக ஹோ சி மின் நகரம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பிரான்சு நாட்டிடமும் பின்னர் ஜப்பானிடமும் அடிமைப்பட்டுக்கிடந்த வியட்நாமை அடிமைத் தளையிலிருந்து போராடி விடுவித்த மகத்தான தலைவர் ஹோசிமின். அமெரிக்காவுக்கே தண்ணிகாட்டி, அதோட மூக்கை உடைத்தவர் இவர் ? மொத்தத்தில் யார் இந்தப் புரட்சி வீரன்? இவரது வாழ்க்கை வரலாற்றைக் காண்போம் வாருங்கள்.

தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடாதீர்கள்.... இந்த வாக்கியம் நம்மில் பலருக்கும் தெரியும் ஆராம்பத்தில் எதிரிகளால் இப்படி தவறாக மதிப்பிட பட்ட பலர் பின்னாட்களில் வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார்கள். அவர்களில் ஹோசி மின் அவர்களும் ஒருவர். மெலிந்த தேகம், குறுந் தாடி, குறு குறுக்கும் பார்வையுடன் இருப்பார் ஹோசி மின்

இவர் 1890ம் ஆண்டு தன் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சிங்சுங். பிறகு ஹோசி மின் என்ற பெயர் இவருக்கு எப்படி வந்தது என்று நினைக்கின்றீர்களா? ‘ஹோசிமின்’என்ற பெயருக்கு ‘ஒளி தந்தவர்’ என்பது பொருள். இருண்டு கிடந்த வியட்நாம் நாட்டுக்கு ஒளி தந்தவர் என்பதால் மக்கள் வைத்த பெயர் அது. அதுவே காலப்போக்கில் நிலைத்து விட்டது என்றால் அப்போது எந்த அளவுக்கு அவர் மக்களின் தலைவராக இருந்திருக்க வேண்டும். ஜனாதிபதியாக ஆகும் வரை இவர் தலைமறைவில் வாழ்ந்து வந்தார். சுமார் ஐம்பதுக்கும் மேல் வித்தியாசப்பட்ட இரகசிய பெயர்கள் இவருக்கு உண்டு என நம்பப்படுகிறது.

ஹோ சி மின் மத்திய வியட்னாமில் அமைந்துள்ள சிறிய மாகாணத்தில் பிறந்திருக்கலாம். பிற்பாடு தனது பிறப்பு சான்றிதழில் வித்தியாசப்பட்ட தகவலைக் கொண்டு தலைமறைவில் வாழ்ந்து வந்தார். 1894-1903 காலப்பகுதிகளைத் தனது பிறப்பு ஆண்டாகப் பத்திரங்களில் கொடுத்தாலும், அதிகாரப்பூர்வமாக 1890 எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சில ஆய்வாளர்களால் ஒத்துக்கொள்ளபடுவது இல்லை.

அவரின் பிறந்த நாளும்கூட சரிவரத் தெரியவில்லை. பொதுவாக வியட்னாம் உருவாக்கப்பட்ட மே 19 ஆம் தேதி அவரின் பிறந்த நாள் என நம்பப்டுகிறது. கிராமப்புறத்தில் பிறப்புத் தகவல் சேமிப்பு இல்லாதபடியால் ஹோ சி மின் தனது பிறப்புத் தேதி தெரியாதவராக இருந்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆசிய நாடுகளில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு கட்டப்படவேண்டும், ஒரு கம்யூனிஸ்ட் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான அரிச்சுவடி ஹோசிமின்னிடம் இருந்துதான் கற்க முடியும். ஏனெனில், ஹோ-சி-மின்னின் புரட்சி வாழ்க்கை மார்க்ஸியத்தை அடிப்படையாகக் கொண்டது. முரணற்றது. மார்கஸியம் ஹோசிமின்னின் எளிமையான தூய வாழ்வு மூலம் புதிய பரிணாமத்தை அடைந்தது.

வியட்நாம், 1911 ஆம் ஆண்டின் ஒரு நள்ளிரவு. நிகே அன், பிராந்தியத்தின் சின்னஞ்சிறு விவசாய கிராமமான கிம்லியன் தூங்கிக்கொண்டிருந்தது. இந்தோ சீன பகுதியை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆக்கிரமித்திருந்த நேரம் அது.

பிரெஞ்சு போலீஸ் லாரி ஒன்று புழுதியை கிள்ளப்பிக்கொண்டு ஊருக்குள் நுழைந்து ஒரு வீட்டின் சுவற்றில் மோதி நின்றது. அந்த வீட்டின் உரிமையாளரான ஆசிரியரையும் அவரின் மொத்த குடும்பத்தையும் லாரிக்குள் அள்ளி வீசியது. பிரெஞ்சு அரசுக்கு எதிராக கலகம் செய்தார் என்பது அந்த ஆசிரயர் மீதான குற்றச்சாட்டு. கடைசியாக அந்த ஆசிரியரின் ஒரு மகன் மட்டும் லாரிக்கு வெளியில் நின்று கொண்டிருந்தான். உயராமாக மிகவும் மெலிந்து காணப்பட்ட பரிதாபத்திற்குரிய தோற்றம் கொண்ட சிறுவன் அவன்.

" தானே சாவப்போற புழுவை நாம ஏண்டா அடிச்சு கொல்லனும், இவனை ஏத்த, உள்ள வேற இடம் இல்லை" என்று ஏளனம் செய்து விட்டு போலீசார் லாரியில் ஏறிக்கொண்டு ஊரை விட்டு வெளியேறி இருளில் மறைந்தனர். அந்த சிறுவன் அத்தோடு அவன் குடும்பத்தை மீண்டும் காணவில்லை.

கப்பல் ஒன்றில் உதவியாளனாக சேர்ந்து நாட்டை விட்டு வெளியேறினான். தன் தாய் நாட்டின் நலனை குறித்தும் தன்னை போலவே பலர் தொலைத்துவிட்ட குடும்பங்களை குறித்தும் சிந்திக்கலானான்.

பிரான்ஸ் தனக்கு தோதானவர்களை வியட்நாம் அரசில் அமர்த்தி விட்டு அவர்களை வைத்து பொம்மலாட்ட அரசியல் நடத்திக் கொண்டு இருந்தது. அதை எதிர்த்துப் போரிட்ட கொரில்லாப் படைக்கு தகவல்களைக் கொண்டு சேர்கிற வேலையைத்தான் சிறுவனாக இருந்த ஹோசிமின் செய்தார். உயிருக்கே ஆபத்தான இந்த வேலையச் செய்யும் போது நாட்டின் விடுதலைக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற அழுத்தமான விதை இவர் மனதில் இருந்தது மட்டும் நிச்சயம். இளைஞனானதும் அவர் பிரான்ஸை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினார். பிரான்ஸ் அரசாங்கத்தோட சர்வ வல்லமைக்கு முன்னாள் ஒன்றும் செய்ய முடியவில்லை. பிறகு பிரான்ஸுக்கே போய், பாரிசில் ஒரு தபால் நிலையத்தில் வேலை பார்த்துக் கொண்டே பிரெஞ்சுப் புரட்சிய எப்படி சாதித்தார்கள் என்பதில் இருந்து பிரான்ஸ் பற்றிய பல தகவல்களை சேகரித்தார்.