வரைக்காட்சிப் படலம் - 941
941.
சாந்து உயர் தடங்கள்தோறும்
தாதுராகத்தின் சார்ந்த
கூந்தல் அம் பிடிகள் எல்லாம்
குங்குமம் அணிந்த போலும்;
காந்து இன மணியின் சோதிக்
கதிரொடும் கலந்து வீசச்
சேந்து. வானகம். எப்போதும்
செக்கரை ஒக்கும் அன்றே.
சாந்து உயர் தடங்கள் தோறும் - சந்தன மரங்கள் ஓங்கியுள்ள
மலைச் சாரல்கள் தோறுமுள்ள; தாது ராகத்தின் சார்ந்த - காவிக்
கற்களின் செந்நிறத்தோடு பொருந்திய; கூந்தல் அம் பிடிகள்
எல்லாம் - புறமயிருள்ள பெண்யானைகள் எல்லாம்; குங்குமம்
அணிந்தபோலும் - குங்குமக் குழம்பு அப்பியவற்றை ஒத்துள்ளன;
காந்து இன மணியின் சோதி - ஒளி விடுகின்ற பதுமராகக் கற்களின்
செந்நிற ஒளியானது; கதிரொடும் கலந்து பூச - சூரியன் கதிர்களோடு
சேர்ந்து செந்நிறத்தைப் பூச; வான் அகம் எப்போதும் - வானமானது
எப்பொழுதும் செந்நிறமடைந்து; செக்கரை ஒக்கும் - செவ்வானத்தைப்
போலும்.
செவ்வானம் மாலைக் காலத்தில்தான் தோன்றும். ஆனால்.
மலையிலுள்ள பதுமராக மணியொளி சூரியக் கதிர்களோடு
மேலிடமெங்கும் பரவியிருப்பதால் பகலிலும் அச் செவ்வானம்
தோன்றுவதாயிற்று என்பதாம். தாதுராகம்: காவிக்கல்லின் செந்நிறம்.
காவிக் கற்களில் சார்வதால் கரிய யானைகள் குங்குமக் குழம்பு பூசப்
பெற்றார்போலத் தோன்றும் என்பது. பிறிதின் குணம் பெறலணியும்.
உவமையணியும் சேர்ந்து வந்துள்ளன. 14
