பெர்னார்ட் ஷா - 1
ஜார்ஜ் பெர்னாட் ஷா ஒரு அயர்லாந்து நாடக ஆசிரியராவார். இசை மற்றும் இலக்கிய விமர்சனமே அவரது முதல் இலாபத் தன்மை கொண்ட எழுத்துப் படைப்புகள் ஆகும். அதில் தனது திறனைக் கொண்டு மிக நேர்த்தியான பத்திரிகைப் படைப்புகள் பலவற்றை எழுதினார்.நக்கல், நய்யாண்டி ,சமூகத்தைப் பற்றிய பார்வை என்று பின்னி எடுத்த அவரின் வாழ்க்கை வெகு சுவாரஸ்யமானது.வறுமை தான் ஆரம்பக் கால வாழ்க்கையில் அவருக்கு இருந்த பரிசு.அவர் மேடை ஏறி பேசவும் முயற்சிகள் செய்தார், ஒரு முறை திக்கித் திக்கி பேசி விட்டு மேடையை விட்டு இறங்கினார். பின்னர் கண்ணாடி முன்னாள் நின்று பேசிப் பார்த்தார். இதன் பயனாய் நாடகத்தில் எளிதாக நடிக்கும் திறமையைப் பெற்றார்.மேலும், அவரது பிரதான திறமை நாடகமே ஆகும். அவரே 60 க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட அவரது அனைத்து எழுத்துப் படைப்புகளும் சமூகத்தில் பெருவாரியாக நிலவிவரும் சிக்கல்களைப் பற்றியதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மிக முக்கிய கருப்பொருள்களை மிகவும் மனதால் ஏற்றுக்கொள்ளும் படி மாற்றுவதற்கு அவற்றில் ஒரு நகைச்சுவை அம்சமும் இழையோடியபடி இருக்கும். கல்வி, திருமணம், மதம், அரசாங்கம், உடல்நலம் மற்றும் சாதிப்பாகுபாடு ஆகிய அனைத்தையும் பெர்னாட் ஷா ஆராய்ந்தார்.
உழைக்கும் வர்க்கத்தினர் சுரண்டப்படுவதை உணர்ந்து அவர் மிகுந்த கோபம் கொண்டார். மேலும் அவரது பெரும்பாலான படைப்புகள் அந்த சுரண்டலைக் கடுமையாகத் தாக்கி விமர்சனம் செய்தன. ஒரு தீவிர சமூகவாதியாக ஃபேபியன் சொசைட்டிக்காக (Fabian Society) பெர்னாட் ஷா பல சிற்றேடுகளை எழுதி சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். விரைவில் அதற்குக் காரணமாக விளங்கும் ஆணுக்கு சமமான பெண்ணுரிமையைப் பெறுதல், உழைக்கும் வர்க்கத்தினர் சுரண்டப்படுவதை ஒழித்தல், உற்பத்தி நிலங்களின் தனியார் உரிமையை மீட்டல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பரப்புதல் ஆகியவை தொடர்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தும் சொற்பொழிவாளரானார்.
பெர்னாட் ஷா, சார்லோட் பாய்னெ-டௌன்செண்ட் (Charlotte Payne-Townshend) என்ற சமூக சீர்திருத்தவாதியை திருமணம் செய்துகொண்டு அவருடனே வாழ்ந்தார். அவர்கள் ஷா'ஸ் கார்னர் (Shaw's Corner) என்று இன்று அழைக்கப்படும் ஆயோட் செயிண்ட். லாரன்ஸில் (Ayot St. Lawrence) உள்ள வீட்டில் வசித்துவந்தனர். இன்னும் அந்த வீடு பெர்னார்ட் ஷா வாழ்ந்ததற்கு அடையாளமாக உள்ளது.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1925) மற்றும் ஆஸ்கார் (1938) விருது ஆகிய இரண்டையும் பெற்றவர் இவர் ஒருவரே. அவர் இவ்வெகுமதிகளை முறையே இலக்கியத்திற்கான அவரது பங்களிப்புக்காகவும் பிக்மேலியன் என்னும் திரைப்படத்தின் பணிக்காகவும் பெற்றார். பொது வெகுமதிகளுக்கான ஆசை தனக்கு இல்லை என்பதால் பெர்னாட் ஷா உடனடியாக நோபல் பரிசை நிராகரிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் அவரது மனைவியின் வேண்டுகோள் படி ஏற்றுக்கொண்டார்: அவரது மனைவி அதை அயர்லாந்துக்கு கௌரவம் எனக் கருதினார். பரிசுத் தொகையை அவர் நிராகரித்து அதை ஸ்வீடிஷ் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கான நிதியாகப் பயன்படுத்திக்கொள்ளக் கோரினார். இவ்வளவு பெருமைகளைப் பெற்ற அந்த பெர்னார்ட் ஷா யார்? வாருங்கள் பார்ப்போம்.
டப்ளினில் உள்ள சிஞ்ச் ஸ்ட்ரீட்டில், 1856 ஆம் ஆண்டு ஜார்ஜ் கார் ஷா (1814–85) என்பவருக்கு ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்தார். அவர் நட்டத்தில் வியாபாரத்தை நடத்திக்கொண்டிருந்த ஒரு தானிய வியாபாரியாவார். சில நேரங்களில் குடிமைப் பணியாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். இவரது தாய் லூசிண்டா எலிசபெத் ஷா. நீ கர்லி (1830–1913) என்னும் தொழில்முறைப் பாடகியாவார். அவருக்கு இரண்டு சகோதரிகள் இருந்தனர். அவர்கள் லூசிண்டா ஃப்ரேன்சிஸ் (1853–1920) என்னும் நகைச்சுவை இசைப் பாடகர் மற்றும் லைட் ஓப்பெரா (light opera) கலைஞர் மற்றும் எலினார் ஏக்னஸ் (1855–76) ஆகியோராவர்.
