நகர் நீங்கு படலம் - 1840

மரவுரி பெற்ற இலக்குவன் அன்னையை வணங்குதல்
1840.
அன்னான், அவர் தந்தன,
ஆதரத்தோடும் ஏந்தி,
இன்னா இடர் தீர்ந்து, “உடன்
ஏகு” என, எம்பிராட்டி
சொன்னால், அதுவே துணை ஆம்’
என, தூய நங்கை
பொன் ஆர் அடிமேல் பணிந்தான்;
அவளும் புகன்றாள்;
அன்னான் - அந்த இலக்குவன்; அவர் தந்தன - அவ் ஏவல்
மகளிர் கொடுத்தனவாகிய மரவுரியை; ஆதரத்தோடும் ஏந்தி - அன்போடு
பெற்றுக்கொண்டு ; ‘இன்னா இடர் தீர்ந்து - துன்பத் துயரம் நீங்கி;
உடன் ஏகு’ என - இலக்குவ! இராமனுடன் நீயும் துணையாக வனம்
செல்க என்று; எம்பிராட்டி சொன்னால் - என் தாய்சுமித்திரை
சொல்வாளாயின்; அதுவே துணை ஆம்’ - அதுவே எனக்குப் பற்றுக்
கோடாகஆகும்; என - என்று நினைத்து; ***தூய மனம் உடைய
சுமித்திரையின்; பொன் ஆர்அடி மேல் - பொன் போலப் பொலிந்த
பாதத்தின் மேல்; பணிந்தான் -வணங்கினான்; அவளும் புகன்றாள் -
அவளும் சில சொற்கள் கொன்னாள்;
தாயின் உத்தரவு பெற்று இராமனுடன் செல்லும் ஆசையால் அவள்
வாயாலேயே முதலில் அச்சொல்வரவேண்டும் என எதிர்பார்த்துப்
பணிகிறான் இலக்குவன். மரவுரிமை ஏற்ற இலக்குவன்குறிப்பறிந்து தாயும்
அவனைப் பார்த்துச் சொன்னாள். 145