கார்முகப் படலம் - 766
766.
‘உழுகின்ற கொழு முகத்தின்.
உதிக்கின்ற கதிரின் ஒளி
பொழிகின்ற. புவி மடந்தை
திரு வெளிப்பட்டென. புணரி
எழுகின்ற தெள் அமுதோடு
எழுந்தவளும். இழிந்து ஒதுங்கித்
தொழுகின்ற நல் நலத்துப்
பெண் அரசி தோன்றினாள்.
உழுகின்ற - (அவ்வாறு) உழுது வந்த; கொழு முகத்தின் -
கொழுவின் முனையில்; உதிக்கின்ற கதிரின் ஒளி - உதிக்கும்
கதிரவனின் ஒளியை; பொழிகின்ற - வீசுகின்ற; புவி மடந்தை திரு -
பூமி தேவியின் திருவுருவம்; வெளிப்பட்டென - வெளிப்பட்டாற்
போல; புணரி எழுகின்ற- பாற்கடலில் தோன்றிய; தெள் அமுதோடு-
தெள்ளிய அமுதுடன்; எழுந்தவளும் - பிறந்த இலக்குமியும்;
இழிந்து - (தன்னழகு) தாழ்ந்து; ஒதுங்கி - ஒதுங்கி நின்று;
தொழுகின்ற - (கை கூப்பி) வணங்குகின்ற; நன்னலத்து - மிக்க
பேரழகு படைத்த; பெண் அரசி -பெண்களின் தலைவியான;
தோன்றினாள் - இவள் (இந்தச் சீதை) தோன்றினாள்.
சீதை கொழுமுகத்தில் தோன்றினாள் என்றார். சீதையின் திருமேனி
பொன்னிறமாதலால் ‘உதிக்கின்ற கதிரின் ஒளி பொழிகின்ற
புவிமடந்தை’ என்றார் - தன்மைத் தற்குறிப்பேற்ற அணி. சீதா -
உழுபடை சால். இலக்குமியும் தாழ்ந்து வணங்கத்தக்க பேரழகு
படைத்தவள் சீதை என்பது. 17
