எழுச்சிப் படலம் - 865
சுண்ணமும் தூசியும் நிறைதல்
தூளி எழுந்து நிறைய யாவரும் செல்லுதல்
865.
எண்ண மாத்திரமும் அரிதாம் இடை.
வண்ண மாத் துவர் வாய். கனி வாய்ச்சியர்.
திண்ணம் மாத்து ஒளிர் செவ் இளநீர். இழி
சுண்ணம் ஆத்தன; தூளியும் ஆத்தவே.
எண்ணம் மாத்திரமும் - நினைக்கவும் கூட; அரிது ஆம் -
அரிதாகிய; இடை - இடையையும்; வண்ண மாத் துவர்வாய் - சிறந்த
பவளம் போன்ற அழகிய வாயையும்; கனி வாய்ச்சியர் - கனிகளின்
சுவை போன்ற இனிமையான சொற்களையுடைய மாதர்களின்;
திண்ணம் ஆத்து - (வாரால்) உறுதியாகக் கட்டப்பெற்று; ஒளிர் -
விளங்குகின்ற; செவ் இளநீர் - செவ்வு இளநீர் போன்ற
தனங்களிலிருந்து; இழி சுண்ணம் - உதிர்ந்த நறுமணப் பொடிகளும்;
ஆத்தன - எங்கும் நிறைந்தன; தூளியும் - (சேனையால்
எழுப்பப்பட்ட) தூசியும் நிறைந்தன.
பெண்களின் நறுமணப் பொடியும் சேனைகள் எழுப்பிய புழுதியும்
எங்கும் நிறைந்தன என்பது. சுண்ணம். தூளி இரண்டும் ஆத்தன
என்ற ஒரு பொதுத் தன்மையைத் தனித்தனி பெற்று வந்தது - தொடர்
முழுது உவமையணி. ஆத்து- யாத்து என்பதன் மரூஉ. 49
