எழுச்சிப் படலம் - 860
படைகளின் ஒலியால் உரை கேளாமை
860.
குரைத்த தேரும். களிரும் குதிரையும்.
நிரைத்த வார் முரசும். நெளிந்து எங்கணும்
இரைத்த பேர் ஒலியால். இடை. யாவரும்
உரைத்த உணர்ந்திலர்; ஊமரின் ஏகினார்.
குரைத்த தேரும்- ஒலித்த தேர்களும்; களிறும் - யானைகளும்;
குதிரையும் - குதிரைகளும்; நிரைத்த வார் முரசும் - வரிசையான
நீண்ட முரசு வாத்தியமும்; எங்கணும் - எல்லா இடத்தும்; நிமிர்ந்து
இரைத்த - மிகுந்து ஒலித்த; பேரொலியால் - பேரொலியால்; இடை
- (அந்த) இடத்திலே (செல்லுகின்ற) ; யாவரும் - எவரும்; உரைத்த
உணர்ந்திலர் - (ஒருவர் சொல்ல மற்றவர்) அறிய மாட்டாதவராகி;
ஊமரின் ஏகினார் - ஊமைகள் போலப் பேசாமல் சென்றார்கள்.
தேர் முதலியன செல்வதாலும். முரசு முழங்குவதாலும் மிகப்
பேரொலி தோன்றுகிறது. அவ்வோசையால் ஒருவர் சொல்வது
மற்றொருவர்க்குக் கேட்கவில்லை. ஆதலால். ஒருவரோடு ஒருவர்
பேசுவதை ஒழித்து ஊமையர்போலச் சென்றார்கள் என்பது. 44
