உண்டாட்டுப் படலம் - 1077
ஒருத்தி யாது செய்வேன் என அயர்தல்
1077.
தோடு அவிழ் கூந்தலாள் ஒருத்தி. ‘தோன்றலோடு
ஊடுகெனோ? உயிர் உருகு நோய் கெடக்
கூடுகெனோ? அவன் குணங்கள் வீணையில்
பாடுகெனோ?’ எனப் பலவும் பன்னினாள்.
தோடு அவிழ் கூந்தலாள் ஒருத்தி - மலர் இதழ்கள் மலரப்பெற்ற
கூந்தலையுடையாள் ஒரு மங்கை; தோன்றலோடு ஊடுகெனோ? -
(பிரிந்துள்ள என் கணவன் வரப்பெற்றால்) அவனோடு நான் (பிரிவுத்
துயர் தந்ததற்காக) ஊடல் கொள்வேனா; உயிர் உருகும் நோய்கெடக்
கூடு கெனோ? - என் உயிரை உருக்கிக் கொண்டுள்ள காமநோயைத்
தீர்த்துக் கொள்ள (உடனே அவனைக்) கூடுவேனோ?; அவன்
குணங்கள் வீணையில் பாடுகெனோ? - (அவனுக்கு உவகை மிகுமாறு)
அவன் குணங்களை வீணையில் இசைத்துப் பாடுவேனோ? என்று
பலவும் பன்னினாள் - (அவன் வந்தவுடன் செய்ய வேண்டியவை
எவை எவை) என்று (இவ்வாறு) பலவழிகளை (மனத்துள்) ஆராய்ந்து
கொண்டிருந்தாள்!
கொண்டானை மகிழ்விக்கத் திட்டமிடத் திண்டாடும் மகளிர் உயர்
பண்பு கூறியபடி. “புலப்பன் கொல்; புல்லுவேன் கொல்லோ; கலப்பென்
கொல்; கண்ணன்ன கேளிர்வரின்” திருக்குறள் (1267). 31
