வரைக்காட்சிப் படலம் - 950
950.
கை என மலர வேண்டி
அரும்பிய காந்தள் நோக்கி.
பை அரவு இது என்று அஞ்சி.
படைக் கண்கள் புதைக்கின்றாரும்;
நெய் தவழ் வயிரப் பாறை
நிழலிடைத் தோன்றும் போதை.
‘கொய்து இவை தருதிர்’ என்று.
கொழுநரைத் தொழுகின்றாரும்;
கை என மலரவேண்டி - (பெண்களின்) கை போல மலர வேண்டி;
அரும்பிய காந்தள் - அரும்பிய காந்தளை; நோக்கி - பார்த்து; இது
பை அரவு - இது படத்தையுடைய பாம்பு; என்று அஞ்சி - என்று
கருதி அச்சப்பட்டு; படைக் கண்கள் - (தம்) வேல் போன்ற
கண்களை; புதைக்கின்றாரும் - (கைகளால்) மூடிக் கொள்பவரும்; நெய்
தவழ் வயிரப்பாறை - வெண்ணெய் போல விளங்கும் வயிரப்
பாறைகளின்; நிழலிடைத் தோன்றும் - ஒளியிலே தோன்றுகின்ற;
போதை - மலரை (உண்மையான மலரென்று மயங்கி); இவை கொய்து
- இம் மலர்களைப் பறித்து; தருதிர் என்று - தாருங்கள் என்று;
கொழுநரைத் - (தம்) கணவரை; தொழுகின்றாரும் - வணங்கிக்
கேட்பவரும் (பெண்களும்).
காந்தள் மலர்வது கை போல் இருக்கும் காந்தள் அரும்பைப்
படமுடைய பாம்பாகவும். வயிரப் பாறையில் நிழலாகத் தோன்றும்
மலரை உண்மையான பூவாகவும் கொண்டு மகளிர் மயங்கினர் என்பது
- மயக்கவணி. 23
