வகர வருக்கம்
வல்லமை பேசேல்
- உன்னுடைய வலிமையை நீயே புகழ்ந்து பேசாதே
வாது முற்கூறேல்
- முந்திக்கொண்டு வாதிடாதே
வித்தை விரும்பு
- கல்வியாகிய நற்பொருளை விரும்பு
102. வீடு பெற நில்
- முக்தியை பெறுவதற்கான சன்மார்க்கத்திலே வாழ்க்கையை நடத்து
உத்தமனாய் இரு
- உயர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ்.
ஊருடன் கூடி வாழ்
- ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்
வெட்டெனப் பேசேல்
- யாருடனும் கடினமாகப் பேசாதே
வேண்டி வினை செயேல்
- வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே
வைகறைத் துயில் எழு
- விடியற்காலையில் தூக்கத்திலிருந்து எழு
- நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு
ஒன்னாரைத் தேறேல்
- பகைவர்களை நம்பாதே
ஓரஞ் சொல்லேல்
- நம்மைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றி பிறரிடம் குறை சொல்லக் கூடாது
- அடுத்தவரைப் பற்றிப் புறம் (தவறாகப்) பேசக் கூடாது
- எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாகப் பேசாமல் நடுநிலையுடன் பேசு.
- திருக்குறள் அதிகாரம் 19 - புறங்கூறாமை
