மிதிலைக் காட்சிப் படலம் - 614
சீதாபிராட்டி நிலைகண்ட செவிலியர்
முதலியோர் செயல்
தாதியர் செய்த பரிகாரம்
614.
தாதியர். செவிலியர். தாயர். தவ்வையர்.
மா துயர் உழந்து உழந்து அழுங்கி மாழ்கினர்;
‘யாதுகொல் இது?’ என. எண்ணல் தேற்றலர்;
போதுடன் அயினி நீர் சுழற்றிப் போற்றினர்.
(சீதையின்) தாதியர் - பணிப் பெண்களும்; செவிலியர் -
செவிலியர்களும்; தாயர் - ஐந்துவகைத் தாய்மார்களும்; தவ்வையர் -
தமக்கை முறையினரும்; மாதுயர் உழந்து உழந்து - (சீதை அடைந்த
நோயால்) கடுந் துன்பத்தை மிக அடைந்து; அழுங்கி - பெரிதும்
வருந்தி; மாழ்கினர் - மனம் கலங்கினவர்களாகியும்; இது யாது
கொல்என - இந்த நோய் எந்த நோயோ என; எண்ணல் தேற்றலர்
- ஆலோசித்து அறியமாட்டாதவர்களாகியும்; போதுடன் அயினிநீர்
- பல பூக்களோடு கூடிய ஆலத்தி நீரை; சுழற்றிப் போயினர் -
சுற்றி (அவளுக்குக் கண்ணூறு கழித்து) வாழ்த்தினார்கள்.
சீதையின் காமநோயை அறியாமல் தோழியர் முதலோர்
கண்ணூறெனக் கருதி அதற்குப் பரிகாரம் தேடினர்; அயினிநீர்.
செஞ்சோற்றுடன் கூடிய நீர். கண்ணூறு அச்சம் ஆகியவற்றால்
உண்டாகிய குற்றம் களைவது.
தாயர் ஐவர்: 1.ஆட்டுவாள் 2. ஊட்டுவாள் 3. ஒல் உறுத்துவாள்
4. நொடி பயிற்றுவாள் 5. கைத்தாய். செவிலியர்: வளர்க்கும் தாயர். 51
