மிதிலைக் காட்சிப் படலம் - 609

bookmark

சேடியர் சீதாபிராட்டியைச் சீதமலரமளிச் சேர்த்தல்

609.

காதொடும் குழை பொரு கயற் கண் நங்கைதன்
பாதமும் கரங்களும் அனைய பல்லவம்
தாதொடும் குழையொடும் அடுத்த. தண் பனிச்
சீத நுண் துளி. மலர் அமளிச் சேர்த்தினார்.
 
காதொடும்      - காதுடன்; குழைபொரு - குண்டலங்களையும்
முட்டுகின்ற; கயல்கண் - கயல்மீன்போல் பிறழும் கண்ணினையுடைய;
நங்கைதன் - சீதையின்; பாதமும்  கரங்களும்  - திருவடிகளையும்
கைகளையும்; அனைய  பல்லவம்  -  ஒத்துள்ள  பல்லவம்  என்று
சொல்லப்படுகின்ற; குழையொடும் - செந்தளிர்களுடனும்; தாதொடும்
-  பூந்தாதுகளுடனும்;    அடுத்த  -  பொருந்தியதும்;  தண்பனிச்
சீதம்  நுண்துளி  -   மிகக்   குளிர்ந்த  நுட்பமான  பனித்துளிகள்
தெளிக்கப் பட்டதுமான;    மலர்   அமளி  -  பூக்காளல்  ஆகிய
படுக்கையில்;  சேர்த்தினர் - (சீதையைத் தோழியர்) கொண்டுபோய்ச்
சேர்த்தார்கள்.

பல்லவம்:     மென்மையான  தளிர்.  மலர்  அமளி:   சீதையின்
வெம்மையைத்  தணிவிக்கப்  பூந்தாதுகளையும்  தளிர்களையும்  கீழே
இட்டு  மலர்  பரப்பிய  படுக்கை.  தண் சீதப்  பனி  நுண்துளி  என
மாற்றுக.                                                46