மிதிலைக் காட்சிப் படலம் - 607
607.
தழங்கிய கலைகளும். நிறையும். சங்கமும்.
மழுங்கிய உள்ளமும். அறிவும். மாமையும்.
இழந்தவள் - இமையவர் கடைய. யாவையும்
வழங்கிய கடல் என - வறியள் ஆயினாள்.
தழங்கிய கலைகளும் - ஒலிக்கின்ற மேகலை அணிகளையும்;
நிறையும் - மனவுறுதியையும்; சங்கமும் - சங்கு வளையல்களையும்;
மழுங்கிய உள்ளமும் - வாட்டம் அடைந்த மனத்தையும்; அறிவும் -
அறிவையும்; மாமையும் - மேனியின் நிறத்தையும்; இழந்தவள் -
(அப்பொழுது காதல் நோயால்) இழந்துநின்ற சீதை; இமையவர்
கடைய - தேவர்கள் கடலைக் கடைந்தபொழுது; யாவையும்
வழங்கிய - (தன்னிடமுள்ள சிறந்த பொருள்கள்) எல்லாவற்றையும்
கொடுத்துவிட்ட; கடல் என - கடல் போல; வறியள் ஆயினாள்
- எந்த ஒரு சிறந்த பொருளும் தன்னிடம் இல்லாதவள் ஆனாள்.
பெண்களுக்குச் சிறந்த அணிகளாகிய மேகலை முதலியவற்றையும்.
குணங்களான நிறை முதலானவற்றையும் சீதை இழந்ததால் ‘வறியள்
ஆயினாள்’ என்றார். மேகலைகள் எட்டுக் கோவைகள் உள்ளமைபற்றி
கலைகள் என்றார். இமையவர்: கண் இமையாதவர்: இமையில் சிறப்பு
உள்ளவர். 44
