மனுவை இழந்தவள்

(கணவனை இழந்தவளின் ஒப்பாரி பாடல்)
மண்ணெக் கொளப்பி-ஒரு
மணக் கரும்பு நாத்துமிட்டு
மனு வெல்லாம் அந்தப் புரம்
மணிக்கரும்பு இந்தப் புரம்
சேத்தை கலக்கி-ஒரு
செங்கரும்பை நாத்து மிட்டு
சேனை யெல்லாம் அந்தப் புரம்
செங்கரும்பு இந்தப் புரம்
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: சேலம் மாவட்டம்.
----------