போய் விடுவேன்

ஆடு மேய்க்கும் காதலியை, மலையில் மாடு மேய்க்கும் காதலன் இரவு தங்கிப் போகச் சொல்லுகிறான். அவள் மறுக்கிறாள். “மலைக்கும் ஊருக்கும் இடையில் ஓடும் ஆற்றில் வெள்ளம் வந்து விட்டால் என்ன செய்வாய்?” என்று கேட்கிறான். அப்பாவிடம் செல்லி கப்பல் வரவழைப்பேன் என்கிறாள். திருமணம் செய்து கொள்ளாமல் அவனோடு இணங்கியிருப்பது தமிழ் மரபல்ல என்று அவனுக்கு நினைவூட்டுகிறாள். தந்தையின் சம்மதத்தைப் பெற்று மணம் செய்து கொள்ள வேண்டுமென்பதைத்தான் உடனே அப்பாவிடம் சொல்லி கப்பல் செய்யச் சொல்லுவேன் என்று குறிப்பாகச் சொல்லுகிறாள்.
மாடு மேய்ப்பவன் : ஆத்துக்கு அந்தப் பக்கம்
ஆடு மேய்க்கும் சின்னப்புள்ளா
ஆத்தில தண்ணி வந்தா
அப்பொழுது என் செய்வா?
ஆடு மேய்ப்பவள் : ஆத்திலே தண்ணி வந்தா
அப்பாவிடம் சொல்லியல்லோ
அப்பொழுதே கப்பல் செய்து
அக்கரையே போய் விடுவேன்.
சேகரித்தவர் : M.P.M. ராஜவேலு
இடம் : மீளவிட்டான்,தூத்துக்குடி வட்டாரம், நெல்லை மாவட்டம்.
-------------