பூஞ்செடி தழைக்கலையே

bookmark

பிறவியிலேயே குழந்தை நோயுற்றிருந்தால் அவள் நோய் தீர்க்கச் செய்த முயற்சிகள் வீணாயின. பிள்ளை இறந்து போனான். இளம் தாய் பாடும் ஒப்பாரி இது.

தங்கக் குடமெடுத்து
தாமரைக்குத் தண்ணிகட்டி
தாமரை தழைக்க லையே
தங்கக் கொடி ஓடலையே
பொன்னுக் குடமெடுத்து
பூஞ்செடிக்கு நீர் பாய்ச்ச
பூஞ்செடி தழைக்க லையே
பொன்னாக் கொடி ஓடலையே

சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர்,சேலம் மாவட்டம்.
-------------