பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) பாடல்கள்

1. திருவேகம்பமாலை
அறந்தா னியற்று மவனிலுங்கோடி யதிகமில்லந்
துறந்தான், அவனின் சதகோடி யுள்ளத்துறவுடையோன்;
மறந்தா னறக்காற் றறிவோடிருந்திரு வாதனையற்று
இறந்தான் பெருமையையென் சொல்லுவேன் ? கச்சியேகம்பனே ! 1
கட்டியணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்
வெட்டிமுறிக்கு மரம்போற் சரீரத்தை வீழ்த்திவிட்டாற்
கொட்டிமுழக்கி யழுவார்; மயானங் குறுகியப்பால்
எட்டி யடிவைப்ப ரோ? யிறைவா ! கச்சியேகம்பனே. 2
கைப்பிடி நாயகன் தூங்கையிலே யவன்கையெடுத்து
அப்புறங்தன்னி லசையாமல் முன்வைத் தயல்வளவில்
ஒப்புடன்சென்று துயில்நீத்துப் பின்வந் துறங்குவளை
எப்படிநான் நம்புவேன்? இறைவா ! கச்சியேகம்பனே ! 3
நன்னாரில் பூட்டிய சூத்திரப்பாவை நன்னார்தப்பினால்
நன்னாலுமாடிச் சலித்திடுமோ அந்தத் தன்மையைப்போல்
உன்னால்யானுந் திரிவதல்லால் மற்றுனைப் பிரிந்தால்
என்னாலிங் காவதுண்டோ? இறைவா ! கச்சியேகம்பனே ! 4
நல்லா ரிணக்கமும், நின்பூசை நேசமும், ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ? அகமும், பொருளும்
இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவா, கச்சியேகம்பனே ! 5
பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின்திருவடிக்கன்பு
இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் ! கச்சியேகம்பனே ! 6
பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே ! 7
அன்னவிசார மதுவேவிசாரம் அதுவொழிந்தால்
சொன்ன விசாரந் தொலையா விசாரம் நல்தோகையரைப்
பன்னவிசாரம் பலகால் விசாரமிப் பாவிநெஞ்சக்கு
என்னவிசாரம் வைத்தாய் இறைவா, கச்சியேகம்பனே ! 8
கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே. 9
மாயநட் போரையும் மாயா மலமெனும் மாதரையும்
வீயவிட்டோடி வெளியே புறப்பட்டு மெய்யருளாம்
தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயைமறந்
தேயும தேநிட்டை, யென்றா னெழிற் கச்சியேகம்பனே. 10
வரிக்கோல வேல்விழியார் அநுராக மயக்கிற்சென்று
சரிக்கோதுவேன் எழுத்தஞ்சுஞ் சொலேன், தமியேனுடலம்
நரிக்கோ? கழுகுபருந்தினுக்கோ? வெய்யநாய் தனக்கோ?
எரிக்கோ? இரையெதற்கோ? இறைவா, கச்சியேகம்பனே. 11
காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டியென் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிவிட்ட
தூதென் றெண்ணாமற் ககமென்று நாடுமித் துர்ப்புத்தியை
ஏதென் றெடுத்துரைப்பேன்? இறைவா, கச்சியேகம்பனே. 12
ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே. 13
சீறும்வினையது பெண்ணுரு வாகித் திரண்டுருண்டு
கூறுமுலையு மிறைச்சியு மாகிக் கொடுமையினால்
பீறுமலமு முதிரமுஞ் சாயும் பெருங்குழிவிட்டு
ஏறுங்கரைகண்டி லேன், இறைவா, கச்சியேகம்பனே. 14
பொருளுடை யோரைச் செயலினும் வீரரைப் போர்க்களத்தும்
தெருளுடை யோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
அருளுடை யோரைத் தவத்திற் குணத்தி லருளிலன்பில்
இருளுறு சொல்லினுந் காணத்தகுங் கச்சி யேகம்பனே. 15
பருத்திப் பொதியினைப்போலே வயிறுபருக்கத் தங்கள்
துருத்திக்கு அறுசுவை போடுகின்றார், துறந்தோர்தமக்கு
வருத்தி யமுதிடமாட்டார், அவரையிம் மாநிலத்தில்
இருத்திக் கொண்டேனிருந்தா யிறைவா! கச்சியேகம்பனே. 16
பொல்லா விருளகற் றுங்கதிர் கூகையென் புட்கண்ணினுக்கு
அல்லா யிருந்திடு மாறொக்குமே அறிவோ ருளத்தில்
வல்லா ரறியார் தமக்கு மயக்கங் கண்டாய்,
எல்லாம் விழிமயக் கேயிறைவா, கச்சி யேகம்பனே. 17
வாதுக்குச் சண்டைக்குப் போவார், வருவார் வழக்குரைப்பர்;
தீதுக் குதவியுஞ் செய்திடுவார், தினந்தேடி ஒன்று
மாதுக் களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர் பிறந்தார்? இறைவா, கச்சியேகம்பனே. 18
ஓயாமற் பொய்சொல்வர், நல்லோரை நிந்திப்பர், உற்றுப்பெற்ற
தாயாரை வைவர், சதியாயிரஞ் செய்வார், சாத்திரங்கள்
ஆயார், பிறர்க்குபகாரஞ் செய்யார், தமையண்டி னர்க்கொன்
றீயா ரிருந்தென்ன போயென்னகாண் கச்சி யேகம்பனே. 19
அப்பென்றும் வெண்மையதாயினும் ஆங்கந்நிலத்தியல் பாய்த்
தப்பின்றியே குணவேற்றுமை தான்பல சார்தலினால்
செப்பில் அபக்குவம் பக்குவமாயுள்ள சீவரிலும்
இப்படி யே நிற்பன் எந்தைபிரான் கச்சியேகம்பனே. 20
நாயாய்ப் பிறந்திடில் நல்வேட்டை யாடிநயம் புரியும்
தாயார வயிற்றில் நாராய்ப் பிறந்தபின் கம்பன்னராய்க்
காயாமரமும் வறளாங் குளமும் கல்லாவு மன்ன
ஈயாமனிதரை யேன் படைத்தாய்? கச்சி யேகம்பனே. 21
ஆற்றில் கரைத்த புளியாக்கிடாமலென் னன்பை யெல்லாம்
போற்றித் திருவுளம் பற்றுமை யாபுர மூன்றெரித்துக்
கூற்றைப் பணிகொளுந் தாளுடையாய், குன்றவில்லுடையாய்
ஏற்றுக் கொடியுடையாய், இறைவா ! கச்சியேகம்பனே. 22
பெண்ணாகி வந்தொரு மாயப்பி சாசும் பிடித்திட்டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளி என்போதப்பொருள் பறிக்க
எண்ணா துனைமறந் தேனிறைவா ! கச்சியேகம்பனே. 23
நாவார வேண்டு மிதஞ்சொல்லுவார் உனைநான் பிரிந்தாற்
சாவேனென் றேயிருந்தொக்கவுண் பார்கள்கைதான் வறளின்
போய்வாரு மென்று நடுத்தலைக் கேகுட்டும் பூவையர்க்கு
ஈவார் தலைவிதியோ? இறைவா, கச்சியேகம்பனே. 24
கல்லார் சிவகதை, நல்லோர் தமக்குக் கனவிலும்மெய்
சொல்லார், பசித்தவர்க் கன்னங் கொடார், குருசொன்னபடி
நில்லார், அறத்தை நினையார், நின்நாமம் நினைவில்சற்றும்
இல்லா ரிருந்தென்? இறந்தென்? புகல், கச்சியேகம்பனே. 25
வானமு தத்தின் சுவையறி யாதவர் வன்கனியின்
தானமு தத்தின் சுவையெண்ணல் போலத் தனித்தனியே
தேனமு தத்தின் தெளிவாய ஞானஞ் சிறிதுமில்லார்க்
ஈனமு தச்சுவை நன்று அல்லவோ? கச்சியேகம்பனே. 26
ஊற்றைச் சரீரத்தை யாபாசக் கொட்டிலை யூன்பொதிந்த
பீற்றற் து ருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய
காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
யேற்றித் திரிந்துவிட் டேனிறைவா, கச்சியேகம்பனே. 27
சொல்லால் வருங்குற்றஞ் சிந்தனையால் வருந்தோடஞ்செய்த
பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல்
அல்லாத கேள்வியைக் கேட்டிடுந் தீங்குகள் ஆயவுமற்று
எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சியேகம்பனே, 28
முட்டற்ற மஞ்சளை யெண்ணெயிற்கூட்டி முகமினுக்கி
மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தளையோலை விளக்கியிட்டுப்
பட்டப் பகலில் வெளிமயக் கேசெயும் பாவையர்மேல்
இட்டத்தை நீதவிர்ப்பாய் இறைவா, கச்சியேகம்பனே. 29
பிறந்துமண்மீதிற் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை
மறந்து சிற்றின்பத்தின் மேல்மயலாகிப் புன்மாதருக்குள்
பறந்துழன்றே தடுமாறிப்பொன் தேடியப் பாவையர்க்கீந்து
இறந்திடவோ பணித்தாய் இறைவா, கச்சியேகம்பனே. 30
பூதங்களற்றுப் பொறியற்றுச் சாரைம் புலன்களற்றுப்
பேதங்குணமற்றுப் பேராசை தானற்றுப் பின்முன்அற்றுக்
காதங்கரணங்களும் அற்ற ஆனந்தக் காட்சியிலே
ஏதங் களைந்திருப் பேனிறைவா, கச்சியேகம்பனே. 31
நல்லா யெனக்கு மனுவொன்று தந்தருள், ஞானமிலாப்
பொல்லா எனைக்கொன்று போடும்பொழுதியல் பூசைசெபஞ்
சொல்லாநற் கோயில்நியமம் பலவகைத் தோத்திரமும்
எல்லா முடிந்தபின் கொல்லுகண்டாய் கச்சியேகம்பனே. 32
சடக்கடத்துக் இரைதேடிப் பலவுயிர் தம்மைக்கொன்று
விடக்கடித்துக் கொண்டிறுமாந் திருந்து மிகமெலிந்து
படங்கடித் தின்றுழல்வார்கள் தமைக்கரம் பற்றிநமன்
இடக்கடிக்கும் பொழுதேது செய்வார்? கச்சியேகம்பனே. 33
நாறுமுடலை, நரிப்பொதி சோற்றினை, நான்தினமுஞ்
சோறுங் கறியும்நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம்
கூறும்மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில்விழாது
ஏறும் படியருள்வாய் இறைவா, கச்சியேகம்பனே. 34
சொக்கிட்டு அரண்மனைப் புக்குள்திருடிய துட்டர்வந்து
திக்குற்ற மன்னரைக் கேட்பதுபோல் சிவநிந்தைசெய்து
மிக்குக் குருலிங்க சங்கமம்நிந்தித்து, வீடிச்சிக்கும்
எக்குப் பெருந்தவர்க்கென் சொல்லுவேன் ? கச்சியேகம்பனே. 35
விருந்தாக வந்தவர் தங்களுக் கன்னமிகக்கொடுக்கப்
பொருந்தார் வளம்பெற வாழ்வார்நின் நாமத்தைப்போற்றி நித்தம்
அருந்தா முலைப்பங்க ரெண்ணாதபாதகர் அம்புவியில்
இருந்தாவதேது? கண்டாய் இறைவா, கச்சியேகம்பனே. 36
எல்லாம் அறிந்து படித்தே யிருந்தெமக் குள்ளபடி
வல்லான் அறிந்துளன் என்றுணராது மதிமயங்கிச்
சொல்லான் மலைந்துறு சூழ்விதியின்படி துக்கித்துப்பின்
எல்லாம் சிவன்செயலே என்பார்காண் கச்சியேகம்பனே. 37
பொன்னைநினைந்து வெகுவாகத் தேடுவர், பூவையன்னாள்
தன்னைநினைந்து வெகுவாய் உருகுவார், தாரணியில்
உன்னை நினைந்திங் குனைப்பூசியாத உலுத்தரெல்லாம்
என்னையிருந்து கண்டாய் இறைவா; கச்சியேகம்பனே. 38
கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக்குண்டரைக் காமுகரைக்
கொடும்பாவமே செய்யும் நிர்மூடர்தம்மைக் குவலயத்துள்
நெடும்பனைபோல வளர்ந்து நல்லோர் தம்நெறியறியா
இடும்பரை என்வகுத்தாய்; இறைவா, கச்சியேகம்பனே. 39
கொன்றேன் அனேகமுயிரை எலாம்பின்பு கொன்றுகொன்று
தின்றே அதன்றியும் தீங்குசெய்தேன் அதுதீர்கவென்றே
நின்றேன் நின்சன்னிதிக்கே அதனால் குற்றம்நீபொறுப்பாய்
என்றே யுனைநம்பினேன் இறைவா, கச்சியேகம்பனே. 40
ஊரிருந்தென்ன ? நல்லோர் இருந்தென்ன உபகாரமுள்ள
பேரிருந்தென்ன ? பெற்றதாய் இருந்தென் மடப்பெண்கொடியாள்
சீரிருந்தென்ன ? சிறப்பிருந் தென்ன இத்தேயததினில்
ஏரிருந்தென்ன ? வல்லாய் இறைவா கச்சியேகம்பனே. 41
வில்லால் அடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்
கல்லால் எறியப் பிரம்பால் அடிக்கக் களிவண்டுகூர்ந்து
அல்லார் பொழில்தில்லை அம்பலவாணர்க்குஓர் அன்னைபிதா
இல்லாததால் அல்லவோ, இறைவா கச்சிஏகம்பனே. 42
திருவேகம்பவிருத்தம்
அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
மூடனாயடி யேனும றிந்திலேன்,
இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?
என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே?
2. திருத்தில்லை
காம்பிணங்கும் பணைத்தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்
தாம்பிணங்கும் பலஆசையும் விட்டுத்தணித்துச் செத்துப்
போம்பிணம் தன்னைத் திரளாகக்கூடிப் புரண்டினிமேற்
சாம்பிணம் கத்துதையோ ? என்செய்வேன் தில்லைச்சங்கரனே. 1
சோறிடும்நாடு, துணிதருங் குப்பை தொண்டன்பரைக்கண்டு
ஏறிடுங்கைகள் இறங்கிடுந் தீவினை, எப்பொழுதும்
நீறிடும் மேனியர் சிற்றம்பலவர் நிருத்தம்கண்டால்
ஊறிடுங் கண்கள் உருகிடும்நெஞ்சமென் னுள்ளமுமே. 2
அழலுக்குள்வெண்ணெய் எனவே உருகிப் பொன்னம்பலத்தார்
நிழலுக்குள் நின்றுதவம் உஞற்றாமல் நிட்டூரமின்னார்
குழலுக்கிசைந்த வகைமாலை கொண்டு குற்றேவல்செய்து
விழலுக்கு முத்துலை இட்டிறைத்தேனென் விதிவசமே. 3
ஓடாமற் பாழுக்கு உழையாமல் ஓரமுரைப்பவர்பால்
கூடாமல் நல்லவர்கூட்டம் விடாமல் வெங்கோபம்நெஞ்சில்
நாடாமல் நன்மைவழுவாமல் இன்றைக்கு நாளைக்கென்று
தேடாமல் செல்வந் தருவாய், சிதம்பரதேசிகனே. 4
பாராம லேற்பவர்க் கில்லையென்னாமற் பழுதுசொல்லி
வாரமற் பாவங்கள் வந்தணுகாமல் மனமயர்ந்து
பேராமற் சேவைபுரியாம லன்புபெறா தவரைச்
சேராமற் செல்வந்தருவாய், சிதம்பர தேசிகனே. 5
கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்திரங்கோள்கள்
கல்லாமற் கைதவரோ டிணங்காமற் கனவினும்பொய்
சொல்லாமற் சொற்களைக் கேளாமற் றோகையர்மாயையிலே
செல்லாமற் செல்வந் தருவாய், சிதம்பர தேசிகனே. 6
முடிசார்ந்த மன்னரு மற்றமுள்ளோரு முடிவிலொரு
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவதுங் கண்டுபின்னுமிந்தப்
பிடிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லாற்பொன்னினம்பலவ
ரடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென்றே யறிவாரில்லையே. 7
காலையுபாதி மலஞ்சல மாமன்றிக் கட்டுச்சியிற்
சாலவுபாதி பசிதாக மாகுமுன் சஞ்சிதமாம்
மாலையுபாதி துயில்காம மாமிவை மாற்றிவிட்டே
ஆலமுகந்தரு ளம்பலவா, என்னை யாண்டருளே. 8
ஆயும்புகழ்ந்தில்லை யம்பலவாண ரருகிற் சென்றாற்
பாயுமிடபங், கடிக்குமரவம், பின்பற்றிச் சென்றாற்
பேயுங்கணமும் பெருந்தலைப் பூதமும் பின்தொடரும்
போயென்செய்வாய் மனமே ! பிணக்காடவர் போமிடமே. 9
ஓடுமெடுத்தத ளாடையுஞ் சுற்றி, யுலாவிமெள்ள
வீடுகடோறும் பலிவாங்கியே, விதி யற்றவர்போ
லாடுமருட் கொண்டிங்கு அம்பலத்தேநிற்கு மாண்டிதன்னைத்
தேடுங் கணக்கென்னகாண் ? சிவகாம சவுந்தரியே. 10
ஊட்டுவிப்பானு முறங்குவிப்பானுமிங் கொன்றோ டொன்றை
மூட்டுவிப்பானு முயங்குவிப்பானு முயன்ற வினை
காட்டுவிப்பானு மிருவினைப் பாசக் கயிற்றின்வழி
யாட்டுவிப்பானு மொருவனுண் டேதில்லை யம்பலத்தே. 11
அடியார்க் கெளியவ ரம்பலவாண ரடிபணிந்தால்
மடியாமற்செல்வ வரம்பெறலாம், வையம் ஏழளந்த
நெடியோனும் வேதனுங்காணாத நித்த நிமலனருட்
குடிகாணு நாங்களவர்காணு மெங்கள் குலதெய்வமே. 12
தெய்வச் சிதம்பரதேவா, உன்சித்தந் திரும்பிவிட்டாற்
பொய்வைத்த சொப்பனமா மன்னர்வாழ்வும் புவியுமெங்கே?
மெய்வைத்த செல்வமெங்கே? மண்டலீகர்தம் மேடையெங்கே?
கைவைத்த நாடகசாலையெங்கே? இது கண்மயக்கே. 13
உடுப்பானும் பாலன்னமுண்பானு முய்வித்தொருவர் தம்மைக்
கெடுப்பானு மேதென்று கேள்விசெய்வானுங் கெதியடங்கக்
கொடுப்பானுந் தேகியென்றேற்பானும் ஏற்கக் கொடாமனின்று
தடுப்பானு நீயல்லையோ? தில்லையானந்தத் தாண்டவனே. 14
வித்தாரம் பேசினுஞ் சோங்கேறினுங் கம்பமீதிருந்து
தத்தாரவென் றோதிப் பவுரிகொண்டாடினுந் தம்முன்தம்பி
யத்தாசைபேசினு மாவதுண்டோ? தில்லையுண்ணிறைந்த
கத்தாவின் சொற்படியல்லாது வேறில்லை கன்மங்களே. 15
பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும், பிறந்துவிட்டா
லிறவாதிருக்க மருந்துண்டு காணிது வெப்படியோ
அறமார் புகழ்த்தில்லை யம்பலவாண ரடிக்கமல
மறவா திருமனமே, யதுகாணநல் மருந்துனக்கே. 16
தவியாதிரு நெஞ்சமே, தில்லைமேவிய சங்கரனைப்
புவியார்ந் திருக்கின்ற ஞானாகரனைப் புராந்தகனை
அவியாவிளக்கைப் பொன்னம்பலத் தாடியை யைந்தெழுந்தாற்
செவியாமல் நீ£செபித்தாற் பிறவாமுத்தி சித்திக்குமே. 17
நாலின் மறைப்பொரு ளம்பலவாணரை நம்பியவர்
பாலிலொருதரஞ் சேவிக்கொணா திருப்பார்க் கருங்கல்
மேலிலெடுத்தவர் கைவிலங்கைத் தைப்பர், மீண்டுமொரு
காலினிறுத்துவர், கிட்டியுந் தாம்வந்து கட்டுவரே. 18
ஆற்றோடு தும்பை யணிந்தாடும் அம்பலவாணர்தம்மைப்
போற்றாதவர்க்கு அடையாளமுண் டேயிந்தப் பூதலத்திற்
சோற்றாவி யற்றுச்சுகமற்றுச் சுற்றத் துணியுமற்றே
ஏற்றாலும் பிச்சைகிடையாம லேக்கற் றிருப்பார்களே. 19
அத்தனை, முப்பத்து முக்கோடி தேவர்க் கதிபதியை
நித்தனை, அம்மை சிவகாமசுந்தரி நேசனை, யெம்
கூத்தனைப் பொன்னம் பலத்தாடு மையனைக் காணக்கண்கள்
எத்தனை கோடி யுகமோ தவஞ்செய் திருக்கின்றவே. 20
3. முதலாவது கோயிற்றிருவகவல்
(திருமண்டில ஆசிரப்பா)
நினைமின் மனனே! நினைமின் மனனே!
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே!
அலகைத் தேரி னலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை யுடலையோம் பற்க! 5
பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன வுணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்; 10
அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;
என்றிவை யனைத்து முணர்ந்தனை, அன்றியும்
பிறந்தன பிறந்தன பிறவிக டோறும்
கொன்றனை யனைத்தும், அனைத்துநினைக் கொன்றன, 15
தின்றன யனைத்தும், அனைத்துநினைத் தின்றன;
பெற்றன யனைத்தும், அனைத்துநினைப் பெற்றன;
ஓம்பினை யனைத்தும், அனைத்துநினை யோம்பின;
செல்வத்துக் களித்தனை, தரித்திரத் தழுகினை;
சுவர்க்கத் திருந்தினை, நரகிற் கிடந்தனை, 20
இன்பமும் துன்பமும் இருநிலத் தருந்தினை;
ஒன்றென் றெழியா துற்றனை, அன்றியும்;
புற்பதக் குரம்பைத் துச்சி லொதுக்கிடம்
என்ன நின்றியங்கு மிருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாக் கருதினை, இதனுள், 25
பீளையு நீரும் புலப்படு மொருபொறி;
மீளுங் குறும்பி வெளிப்படு மொருபொறி;
சளியு நீருந் தவழு மொருபொறி;
உமிழ்நீர் கோழை யழுகு மொறிபொறி;
வளியு மலமும் வழங்கு மொருவழி 30
சலமுஞ் சீயுஞ் சரியு மொருவழி;
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறுஞ்
சட்டக முடிவிற் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை யுள்ளுறத் தேர்ந்து,
கடிமலர்க் கொன்றைச், சடைமுடிக் கடவுளை 35
ஒழிவருஞ் சிவபெரும் போகவின் பத்தை;
நிழலெனக் கடவா நீர்மையடு பொருந்தி,
எனதற நினைவற இருவனை மலமற
வரவொடு செலவற மருளற இருளற
இரவொடு பகலற இகபர மறஒரு 40
முதல்வனைத் தில்லையுண் முளைத்தெழுஞ் சோதியை
அம்பலத் தரசனை, ஆனந்தக் கூத்தனை,
நெருப்பினி லரக்கென நெக்குநெக் குருகித்
திருச்சிற் றம்பலத் தொளிருஞ் சிவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே! 45
சிவபெருமானைச் செம்பொனம் பலவனை,
நினைமின் மனனே! நினைமின் மனனே!
4. இரண்டாவது கோயிற்றிருவகவல்
காதள வோடிய கலகப் பாதகக்
கன்னியர் மருங்கிற் புண்ணுட னாடுங்
காதலுங் கருத்து மல்லால்நின் னிருதாள்
பங்கயஞ் சூடப் பாக்கியஞ் செய்யாச்
சங்கடங் கூர்ந்த தமியேன் பாங்கிருந் 5
தங்கோ டிங்கோ டலமருங் கள்வர்
ஐவர் கலகமிட் டலைக்குங் கானகம்;
சலமலப் பேழை; யிருவினைப் பெட்டகம்;
வாதபித் தங்கோழை குடிபுகுஞ் சீறூர்;
ஊத்தைப் புன்தோ லுதிரக் கட்டளை; 10
நாற்றப் பாண்டம், நான்முழத் தொன்பது
பீற்றத் துண்டம், பேய்ச்சுரைத் தோட்டம்
அடலைப் பெரிய சுடலைத் திடருள்,
ஆசைக் கயிற்றி லாடும் பம்பரம்
ஓயா நோய்க்கிடம், ஓரு மரக்கலம்; 15
மாயா விகாரம், மரணப் பஞ்சரம்;
சோற்றுத் துருத்தி, தூற்றம் பத்தம்;
காற்றில் பறக்கும் காணப் பட்டம்;
விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை,
சதுர்முகப் பாணன் தைக்குஞ் சட்டை 20
ஈமக் கனலி லிடுசில விருந்து;
காமக் கனலிற் கருகுஞ் சருகு;
கிருமிக் கிண்டுங் கிழங்கஞ் சருமி,
பாவக்கொழுந் தேறுங் கவைக்கொழு கொம்பு
மணமாய் நடக்கும் வடிவின் முடிவிற் 25
பிணமாய்க் கிடக்கும் பிண்டம், பிணமேல்
ஊரிற் கிடக்க வொட்டா வுபாதி
காலெதிர் குவித்த பூளை, காலைக்
கதிரெதிர்ப் பட்ட கடும்பனிக் கூட்டம்;
அந்தரத் தியங்கு மிந்திர சாபம்; 30
அதிரு மேகத் துருவி னருநிழல்
நீரிற் குமிழி; நீர்மே லெழுத்து;
கண்டுயில் கனவிற் கண்ட காட்சி;
அதனினும் பொல்லா மாயக் களங்கம்;
அமையு மமையும் பிரானே, யமையும் 35
இமைய வல்லி வாழியென் றேத்த
ஆனந்தத் தாண்டவங் காட்டி
ஆண்டுகொண் டருள்கைநின் னருளினுக் கழகே. 38
5. மூன்றாவது கோயிற்றிருவகவல்
பாற்கடல் கடையப் படுங்கடு வெண்ணெயைத்
திருமிடற் றடக்கிய சிவனே யடைக்கலம்!
அடங்கலு மடக்கிடுங் கடுங்கோலைக் காலனைக்
காலெடுத் தடக்கிய கடவுள்நின் னடைக்கலம்
உலகடங் கலும்படைத் துடையவன் றலைபறித்து 5
இடக்கையி லடக்கிய இறைவ! நின் னடைக்கலம்!
செய்யபொன் னம்பலச் செல்வ! நின் னடைக்கலம்!
ஐய! நின் னடைக்கலம்! அடியநின் னடைக்கலம்;
மனவழி விலைத்திடுங் கனவெனும் வாழ்க்கையும்;
விழுப்பொரு ளறியா வழுக்குறு மனனும் 10
ஆணவ மலத்துதித் தளைந்ததி னுளைத்திடும்
நிணவைப் புழுவெனத் தெளிந்தெடு சிந்தையும்
படிறும் பாவமும் பழிப்புறு நினைப்பும்
தவறும் அழுக்காறும் இவறுபொய்ச் சாப்பும்
கவடும் பொய்யும் சுவடும் பெருஞ்சினம் 15
இகலும், கொலையும், இழிப்புறு புன்மையுங்
பகையும் அச்சமும் துணிவும் பனிப்பும்
முக்குண மடமையும், ஐம்பொறி மயக்கமும்
இடும்பையும் பிணியு மிடுக்கிய ஆக்கையை
உயிரெனுங் குருருவிட் டோடுங் குரம்பையை 20
எலும்பொடு நரம்புகொண் டிடையிற் பிணித்துக்
கொழுந்தசை வேய்ந்து மொழுக்குவிழுங் குடிலைச்
செம்பெழு வுதிரச் சிறுபுழுக் குரம்பையை,
மலவுடற் குடத்தைப் பலவுடற் புட்டிலைத்
தொலைவிலாச் சோற்றுத் துன்பக் குழியைக் 25
கொலைபடைக் கலம்பல கிடக்கும் கூட்டைச்
சலிப்புறு வினைப்பல சரக்குக் குப்பையைக்
கோள்சரக் கொழுகும் பீறல் கோணியைக்
கோபத்தீ மூட்டுங் கொல்லன் துருத்தியை
ஐம்புலப் பறவை யடையும்பஞ் சரத்தை 30
புலராக் கவலை விளைமரப் பொதும்பை,
ஆசைக் கயிற்றி லாடுபம் பரத்தைக்
காசிற் பணத்திற் சுழலுங் காற்றாடியை,
மக்கள் வினையின் மயங்குங் திகிரியைக்
கடுவெளி யுருட்டிய சகடக் காலைப் 35
பாவச் சரக்கொடு பவக்கடல் புக்குக்
காமக் காற்றெடுத் தலைப்பக் கலங்கிக்
கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை
இருவினை விலங்கொடு மியங்குபுற் கலனை
நடுவன்வந் தழைத்திட நடுங்கிடும் யாக்கையைப் 40
பிணமெனப் படுத்தியான் புறப்படும் பொழுதுநின்
அடிமலர்க் கமலத்துக் கபயநின் னடைக்கலம்
வெளியிடை யுருமிடி யிடித்தென வெறித்தெழுங்
கடுநடை வெள்விடைக் கடவுணின் னடைக்கலம்
இமையா நாட்டத் திறையே! அடைக்கலம். 45
அடியார்க் கெளியாய்! அடைக்கல மடைக்கலம்;
மறையவர் தில்லை மன்று நின் றாடிக்
கருணை மொண்டலையெறி கடலே! அடைக்கலம்;
தேவரு முனிவருஞ் சென்றுநின் றேத்துப்
பாசிழைக் கொடியடு பரிந்தருள் புரியும் 50
எம்பெருமா நின்இணை யடிக்கு கபயம்;
அம்பலத் தரசே அடைக்கல முனக்கே!
6. நான்காவது கச்சித் திருவகவல்
திருமால் பயந்த திசைமுக னமைத்து
வருமேழ் பிறவியு மானுடத் துதித்து
மலைமகள் கோமான் மலரடி யிறைஞ்சிக்
குலவிய சிவபதங் குறுகா தவமே
மாதரை மகிழ்ந்து காதற் கொண்டாடும் 5
மானிடர்க் கெல்லாம் யானெடுத் துரைப்பேன்;
விழிவெளி மாக்கள் தெளிவுறக் கேண்மின்,
முள்ளுங் கல்லு முயன்று நடக்கும்
உள்ளங் காலைப் பஞ்சென வுரைத்தும்
வெள்ளெலும் பாலே மேவிய கணைக்கால் 10
துள்ளும் வராலெனச் சொல்லித் துதித்தும்
தசையு மெலும்புந் தக்ககன் குறங்கை
இசையுங் கதலித் தண்டென வியம்பும்
நெடுமுடல் தாங்கி நின்றிடு மிடையைத்
துடிபிடி யென்று சொல்லித் துதித்தும் 15
மலமும் சலமும் வழும்புந் திரையும்
அலையும் வயிற்றை யாலிலை யென்றும்
சிலந்தி போலக் கிளைத்துமுன் னெழுந்து
திரண்டு விம்மிச் சீப்பாய்ந் தேறி
உகிராற் கீற வுலர்ந்துள் ளுருகி 20
நகுவார்க் கிடமாய் நான்று வற்றும்
முலையைப் பார்த்து முளரிமொட் டென்றும்
குலையுங் காமக் குருடர்க் குரைப்பேன்;
நீட்டவு முடக்கவு நெடும்பொருள் வாங்கவும்
ஊட்டவும் பிசையவு முதவியிங் கியற்றும் 25
அங்கையைப் பார்த்துக் காந்தளென் றுரைத்தும்
வேர்வையு மழுக்கு மேவிய கழுத்தைப்
பாரினி லினிய கமுகெனப் பகர்ந்தும்
வெப்பு மூத்தையு மேவிய வாயைத்
துப்பு முருக்கின் தூய்மல ரென்றும் 30
அன்னமுங் கறியு மசைவிட் டிறக்கும்
முன்னிய பல்லை முத்தென மொழிந்தும்
நீருஞ் சளியு நின்றுநின் றொழுகும்
கூரிய மூக்கைக் குமிழெனக் கூறியும்
தண்ணீர் பீளை தவிரா தொழுகும் 35
கண்ணைப் பார்த்துக் கழுநீ ரென்றும்
உள்ளுங் குறும்பி யழுகுங் காதை
வள்ளைத் தண்டின் வளமென வாழ்த்தியும்
கையு மெண்ணெயுங் கலவா தொழியில்
வெய்ய வதரும் பேனும் விளையத் 40
தக்க தலையோட் டின்முளைத் தெழுந்த
சிக்கின் மயிரைத் திரண்முகி லென்றும்
சொற்பல பேசித் துதித்து நீங்கள்
நச்சிச் செல்லு நரக வாயில்
தோலு மிறைச்சியுந் துதைந்துசீப் பாயும் 45
காமப் பாழி, கருவிளை கழனி
தூமைக் கடவழி, தொளைபெறு வாயில்
எண்சா ணுடம்பு மிழியும் பெருவழி,
மண்பாற் காமங் கழிக்கு மறைவிடம்,
நச்சிக் காமுக நாய்தா னென்றும் 50
இச்சித் திருக்கு மிடைகழி வாயில்;
திங்கட் சடையோன் திருவரு ளில்லார்
தங்கித் திரியுஞ் சவலைப் பெருவழி
புண்ணிது வென்று புடவையை மூடி
உண்ணீர் பாயு மோசைச் செழும்புண், 55
மால்கொண் டறியா மாந்தர் புகும்வழி;
நோய்கொண் டொழியா நுண்ணியர் போம்வழி;
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி
செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி
பெண்ணு மாணும் பிறக்கும் பெருவழி 60
மலஞ்சொரிந் திழியும் வாயிற் கருகே
சலஞ்சொரிந் திழியுந் தண்ணீர் வாயில்
இத்தை நீங்க ளினிதென வேண்டா
பச்சிலை யிடினும் பத்தர்க் கிரங்கி
மெச்சிச் சிவபத வீடருள் பவனை 65
முத்தி நாதனை மூவா முதல்வனை
அண்ட ரண்டமு மனைத்துள புவனமும்
கண்ட வண்ணலைக் கச்சியிற் கடவுளை
ஏக நாதனை, இணையடி யிறைஞ்சுமின்
போக மாதரைப் போற்றுத லொழிந்தே! 70
- - - - - - - - - - - - - - -- - - - -
திருச்செங்கோடு
நெருப்பான மேனியர் செங்கோட்டி லாத்தி நிழலருகே
இருப்பார் திருவுள மெப்படியோ இன்னமென்னை யன்னைக்
கருப்ப சாயக்குழிக்கே தள்ளுமோ கண்ணன் காணரிய
திருப்பாதமே தருமோ தெரியாது சிவன்செயலே.
- - - - - - - - - - - - - - - - - - - - -
திருவொற்றியூர்
ஐயுந்தொடர்ந்து, விழியுஞ் செருகி, யறிவழிந்து
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன்யான்
செய்யுந் திருவொற்றி யூருடையீர், திருநீறுமிட்டுக்
கையுந்தொழப்பண்ணி யைந்தெழுத் தோதவுங் கற்பியுமே. 1
சுடப்படுவா ரறியார் புரம்முன்றையுஞ் சுட்டபிரான்
திடப்படு மாமதில்தென் ஒற்றியூரன் தெருப்பரப்பில்
நடப்பவர் பொற்பாத நந்தலைமேற்பட நன்குருண்டு
கிடப்பது காண்மனமே, விதியேட்டைக் கிழிப்பதுவே. 2
- - - - - - - - - - - - - - - - -
திருவிடைமருதூர்
காடே திருந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தைகற்றி
யோடே யெடுத்தென்ன? உள்ளன்பி லாதவ ரோங்குவிண்ணோர்
நாடே யிடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
வீடே யிருப்பனு மெய்ஞ்ஞான வீட்டின்ப மேவுவரே. 1
தாயும்பகை; கொண்ட பெண்டீர் பெரும்பகை; தன்னுடைய
சேயும்பகை; யுறவோரும் பகை; யிச்செகமும் பகை;
ஆயும் பொழுதி லருஞ்செல்வம் நீங்கில்! இக்காதலினாற்
தோயுநெஞ்சே, மருதீசர் பொற்பாதஞ் சுதந்திரமே. 2
- - - - - - - - - - - - -- - - - - - - -
திருக்கழுக்குன்றம்
காடோ? செடியோ? கடற்புறமோ? கனமேமிகுந்த
நாடோ? நகரோ? நகர்நடுவோ? நலமேமிகுந்த
வீடோ? புறத்திண்ணையோ? தமியேனுடல் வீழுமிடம்,
நீடோய் கழுக்குன்றி லீசா, உயிர்த்துணை நின்பதமே.
- - - - - -- - - - - - - - - - - - - -
திருக்காளத்தி
பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்துபட் டாடைசுற்றி,
முத்தும் பவளமும் பூண்டோடி யாடி முடிந்தபின்பு
செத்துக் கிடக்கும் பிணத்தரு கேயினிச் சாம்பிணங்கள்
கத்துங் கணக்கெண்ன? காண்கயிலாபுரிக் காளத்தியே! 1
பொன்னாற் பிரயோசனம் பொன்படைத் தார்க்குண்டு; பொன்படைத்தோன்
தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டு? அத்தன்மையைப்போ
உன்னாற் பிரயோசனம் வேணதெல்லாம் உண்டுஉனைப் பணியும்
என்னாற் பிரயோசன மேதுண்டு? காளத்தி யீச்சுரனே! 2
வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லேன்; மாதுசொன்ன
சூளாலிளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டுசெய்து
நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்நான் இனிச்சென்று
ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே? 3
முப்போது மன்னம் புசிக்கவுந் தூங்கவு மோகத்தினாற்
செப்போ திளமுலை யாருடன் சேரவுஞ் சீவன்விடு
மப்போது கண்கலக்கப் படவும் வைத்தா யையனே,
எப்போது காணவல்லேன்? திருக்காளத்தி யீச்சுரனே. 4
இரைக்கே யிரவும் பகலுந் திரிந்திங் கிளைத்துமின்னார்
அரைக்கே யவலக் குழியரு கேயசும் பார்ந்தொழுகும்
புரைக்கே யுழலுந் தமியேனை யாண்டருள், பொன்முகலிக்
கரைக்கேகல் லால நிழற்கீ ழமர்ந்தருள் காளத்தியே. 5
நாறுங் குதிரைச் சலதாரை தோற்புரை நாடொறுஞ்சீழ்
ஊறு மலக்குழி காமத்துவார மொளித் திடும்புண்
தேறுந் தசைப்பிளப் பந்தரங் கத்துள சிற்றின்பம்விட்டு
ஏறும் பதந்தரு வாய் திருக்காளத்தி யீச்சுரனே. 6
- - - - - - - - -- - - - - - - - - ---
திருக்கைலாயம்
கான்சாயும் வெள்ளி மலைக்கரசே, நின்கழல் நம்பினேன்
ஊன்சாயுஞ் சென்ம மொழித்திடு வாய், காவூரனுக்காய்
மான்சாயுச் செங்கை மழுவலஞ் சாய வனைந்தகொன்றைத்
தேன்சாய நல்ல திருமேனி சாய்த்த சிவக்கொழுந்தே. 1
இல்லந் துறந்து பசிவந்த போதங் கிரந்துநின்று
பல்லுங் கரையற்று வெள்வாயுமாய், ஒன்றிற் பற்றுமின்றிச்
சொல்லும் பொருளு மிழந்து சுகானந்தத் தூக்கத்திலே
யல்லும் பகலு மிருப்பதென்றோ? கயிலா யத்தனே. 2
சிந்தனை யற்றுப் பிரியமுந் தானற்றுச் செய்கையற்று
நினைந்தது மற்று நினையா மையுமற்று நிர்ச்சிந்தனாய்த்
தனந்தனி யேயிருந் தானந்த நித்திரை தங்குகின்ற
அனந்தலி லென்றிருப் பேனத்தனை! கயிலாயத்தனே. 3
கையார ஏற்றுநின் றங்ஙனந் தின்று கரித்துணியைத்
தையா துடுத்து நின் சந்நிதிக்கே வந்துசந்ததமு
மெய்யார நிற்பணிந் துள்ளே யுரோமம் விதிர்விதிர்ப்ப
ஐயா வென்று ஓலமிடுவது என்றோ? கயிலாயத்தனே. 4
நீறார்த்த மேனி யுரோமஞ்சிலிர்த், துளம் நெக்குநெக்குச்
சேறாய்க் கசிந்து கசிந்தே யுருகி, நின்சீரடிக்கே
மாறாத் தியானமுற் றானந்த மேற்கொண்டு மார்பிற்கண்ணீர்
ஆறாய்ப் பெருகக் கிடைப்ப தென்றோ? கயிலாயத்தனே. 5
செல்வரைப் பின்சென்று சங்கடம் பேசித், தினந்தினமும்
பல்லினைக் காட்டிப் பரிதவியாமற் பரமானந்தத்தின்
எல்லையிற் புக்கிட வேகாந்தமாய் எனக்காம் இடத்தே
அல்லல் அற்று என்றிருப் பேனத்தனே, கயிலாயத்தனே. 6
மந்திக் குருளையத் தேனில்லை, நாயேன் வழக்கறிந்துஞ்
சிந்திக்குஞ் சிந்தையையான் என்செய்வேன் எனைத் தீதகற்றிப்
புந்திப் பிரிவிற் குருளையை யேந்திய பூசையைப்போல்
எந்தைக் குரியவன் காண் அத்தனே, கயிலாயத்தனே. 7
வருந்தேன் பிறந்து மிறந்தும் மயக்கும் புலன்வழிபோய்ப்
பொருந்தேன் நரகிற் புகுகின்றிலேன், புகழ் வாரிடத்தில்
இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன் இயலஞ்செழுத்தாம்
அருந்தேன் அருந்துவ நின் அருளால், கயிலாயத்தனே. 8
- - - - - - - - - - - - - - - - - - -
மதுரை
விடப்படுமோ இப்பிரபஞ்ச வாழ்க்கையை? விட்டுமனம்
திடப்படுமோ? நின்னருளின்றியே தினமே அலையக்
கடப்படுமோ? அற்பர்வாயிலிற் சென்று கண்ணீர்ததும்பிப்
படப்படுமோ? சொக்க நாதா, சவுந்தர பாண்டியனே.
7. அருட்புலம்பல் - முதல்வன் முறையீடு
கன்னிவனநாதா, கன்னிவனநாதா
மூலமறியேன், முடியும் முடிவறியேன்
ஞாலத்துள் பட்டதுயர் நாட நடக்குதடா; 1
அறியாமை யாம்மலத்தால் அறிவுமுதற் கெட்டனடா !
பிரியா வினைப்பயனால் பித்துப் பிடித்தனடா. 2
தனுவாதி நான்கும் தானாய் மயங்கினடா
மனுவாதி சத்தி வலையி லகப்பட்டனடா 3
மாமாயை யென்னும் வனத்தில் அலைகிறண்டா
தாமாய் உலகனைத்தும் தாது கலங்கிறண்டா. 4
கன்னி வனநாதா! - கன்னி வனநாதா !
மண்ணாசைப் பட்டேனை மண்ணுண்டு போட்டதடா
பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே. 5
மக்கள்சுற்றத் தாசை மறக்கேனே யென்குதே
திக்கரசாம் ஆசையது தீரேனே யென்குதே. 6
வித்தைகற்கு மாசையது விட்டொழியே னென்குதே
சித்துகற்கு மாசை சிதையேனே யென்குதே. 7
மந்திரத்தி லாசை மறக்கேனே யென்குதே
சுந்தரத்தி லாசை துறக்கேனே யென்குதே. 8
கன்னி வனநாதா! - கன்னி வனநாதா !
கட்டுவர்க்கத் தாசை கழலேனே யென்குதே
செட்டுதலில் ஆசை சிதையேனே யென்குதே. 9
மாற்றுஞ் சலவை மறக்கேனே யென்குதே
சோற்றுக் குழியுமின்னந் தூரேனே யென்குதே. 10
ஐந்து புலனு மடங்கேனே யென்குதே
சிந்தை தவிக்கிறதுந் தேறேனே யென்குதே. 11
காமக் குரோதம் கடக்கேனே யென்குதே
நாமே அரசென்று நாடோறு மெண்ணுதே. 12
கன்னி வனநாதா! - கன்னி வனநாதா !
அச்ச மாங்கார மடங்கேனே யென்குதே
கைச்சு மின்னுமான் கழலேனே யென்குதே. 13
நீர்க்குமிழி யாமுடலை நித்தியமா யெண்ணுதே
ஆர்க்கு முயராசை அழியேனே யென்குதே. 14
கண்ணுக்குக் கண்ணெதிரே கட்டையில் வேகக்கண்டும்
எண்ணுந் திரமா யிருப்போமென் றெண்ணுதே. 15
கன்னி வனநாதா! - கன்னி வனநாதா !
அநித்தியத்தை நித்தியமென் றாதரவா யெண்ணுதே
தனித்திருக்கே னென்குதே தனைமறக்கே னென்குதே. 16
நரகக் குழியும்இன்னும் நான்புசிப்பே னென்குதே
உரகப் படத்தல்கு லுனைக்கெடுப்பே னென்குதே. 17
குரும்பை முலையுங் குடிகெடுப்பே னென்குதே
அரும்புவிழியு மென்ற னாவியுண்பே னென்குதே. 18
மாதருருக் கொண்டு மறலிவஞ்ச மெண்ணுதே
ஆதரவு மற்றிங் கரக்கா யுருகிறண்டா. 19
கந்தனை யீன்றருளுங் கன்னிவன நாதா!
எந்த விதத்தினா னேறிப் படருவண்டா. 20
கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!
புல்லாகிப் பூடாய்ப் புலர்ந்தநாள் போதாதோ?
கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாதோ? 21
கீரியாய்க் கிடமாய்க் கெட்டநாள் போதாதோ?
நீரியா யூர்வனவாய் நின்றநாள் போதாதோ? 22
பூதமொடு தேவருமாய்ப் போனநாள் போதாதோ?
வேதனைசெய் தானவராய் வீழ்ந்தநாள் போதாதோ? 23
அன்னை வயிற்றி லழிந்தநாள் போதாதோ?
மன்னவனாய் வாழ்ந்து மரித்தநாள் போதாதோ? 24
கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!
தாயாகித் தாரமாய்த் தாழ்ந்தநாள் போதாதோ?
சேயாய்ப் புருடனுமாய்ச் சென்றநாள் போதாதோ? 25
நோயுண்ண வேமெலிந்து நொந்தநாள் போதாதோ?
பேயுண்ணப் பேயாய்ப் பிறந்தநாள் போதாதோ? 26
ஊனவுடல் கூன்குருடா யுற்றநாள் போதாதோ?
ஈனப் புசிப்பு லிளைத்தநாள் போதாதோ? 27
பட்ட களைப்பபும் பரிதவிப்பும் போதாதோ?
கெட்டநாள் கெட்டே னென்றுகேளாதும் போதாதோ? 28
கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!
நில்லாமைக்கே யழுது நின்றநாள் போதாதோ?
எல்லாரு மென்பார மெடுத்தநாள் போதாதோ? 29
காமன் கணையாற் கடைப்பட்டல் போதாதோ?
ஏமன் கரத்தால் நாலுமிடியுண்டல் போதாதோ? 30
நான்முகன் பட்டோலை நறுக்குண்டல் போதாதோ?
தேன்துளபத் தான்நேமி தேக்குண்டல் போதாதோ? 31
உருத்திரனார் சங்காரத் துற்றநாள் போதாதோ?
வருத்த மறிந்தையிலை, வாவென் றழைத்தையிலை 32
கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!
பிறப்பைத் தவிர்த்தையிலை; பின்னாகக் கொண்டையிலை,
இறப்பைத் தவிர்த்தையிலை; என்னென்று கேட்டையிலை; 33
பாச மெரித்தையிலை; பரதவிப்பைத் தீர்த்தையிலை;
பூசிய நீற்றைப் புனையென் றளித்தையிலை. 34
அடிமையென்று சொன்னையிலை, அக்கமணி தந்தையிலை;
விடுமுலகம் நோக்கி யுன்றன்வேட மளித்தையிலை. 35
உன்னி லழைத்தையிலை, ஒன்றாக்கிக் கொண்டையிலை,
நின்னடியார் கூட்டத்தில் நீயழைத்து வைத்தையிலை; 36
கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!
ஓங்கு பரத்துள் ஒளித்தவடி யார்க்கடியான்
ஈங்கோ ரடியா னெமக்கென்று உரைத்தையிலை; 37
நாமந் தரித்தையிலை, நானொழிய நின்றையிலை,
சேம வருளி லெனைச்சிந்தித் தழைத்தையிலை. 38
முத்தி யளித்தையிலை; மோனங் கொடுத்தையிலை;
சித்தி யளித்தையிலை; சீராட்டிக் கொண்டையிலை; 39
தவிர்ப்பைத் தவிர்த்தையிலை; தானாக்கிக் கொண்டையிலை;
அவிப்பரிய தீயாமென் னாசை தவிர்த்தையிலை; 40
கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!
நின்ற நிலையில் நிறுத்தியெனை வைத்தையிலை;
துன்றுங் கரணமொடு தொக்கழியப் பார்த்தையிலை; 41
கட்டவுல கக்காட்சிக் கட்டொழியப் பார்த்தையிலை;
நிட்டையிலே நில்லென்றுநீ நிறுத்திக் கொண்டையிலை; 42
கடைக்கண் ணருள்தாடா, கன்னிவன நாதா!
கெடுக்கு மலமொறுக்கிக் கிட்டிவரப் பாரேடா! 43
காதல் தணியேனோ! கண்டு மகிழேனோ!
சாதல் தவிரேனோ! சங்கடந்தான் தீரேனோ! 44
கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!
உன்னைத் துதியேனோ, ஊர்நாடி வாரேனோ,
பொன்னடியைப் பாரேனோ, பூரித்து நில்லேனோ ? 45
ஓங்காரப் பொற்சிலம்பி னுல்லாசம் பாரேனோ ?
பாங்கான தண்டை பலமணியும் பாரேனோ ! 46
வீரகண்டா மணியின் வெற்றிதனைப் பாரேனோ !
சூரர்கண்டி போற்றுமந்தச் சுந்தரத்தைப் பாரேனோ ! 47
இடையில் புலித்தோ லிருந்தநலம் பாரேனோ !
விடையி லெழுந்தருளும் வெற்றியினைப் பாரேனோ ! 48
கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!
ஆனை உரிபோர்த்த அழகுதனைப் பாரேனோ !
மானைப் பிடித்தேந்து மலர்க்கரத்தைப் பாரேனோ ! 49
மாண்டார் தலைபூண்ட மார்பழகைப் பாரேனோ;
ஆண்டார் நமக்கென்று அறைந்து திரியேனோ ! 50
கண்டங் கறுத்துநின்ற காரணத்தைப் பாரேனோ !
தொண்டர் குழுவினின்ற தோற்றமதைப் பாரேனோ ! 51
அருள்பழுத்த மாமதியா மானனத்தைப் பாரேனோ !
திருநயனச் சடையளிருஞ் செழுங்கொழுமை பாரேனோ ! 52
கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!
செங்குழியின் துண்டம்வளர் சிங்காரம் பாரேனோ ?
அங்கனியை வென்ற அதரத்தைப் பாரேனோ ! 53
முல்லை நிலவெறிக்கு மூரலொளி பாரேனோ !
அல்லார் புருவத் தழகுதனைப் பாரேனோ ! 54
மகரங் கிடந்தொளிரும் வள்ளைதனைப் பாரேனோ !
சிகர முடியழகுஞ் செஞ்சடையும் பாரேனோ ! 55
கங்கையோடு திங்கள் நின்றகாட்சிதனைப் பாரேனோ !
பொங்கு அரவைத்தான்சடையிற் பூண்டவிதம் பாரேனோ 56
கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!
சரக்கொன்றை பூத்த சடைக்காட்டைப் பாரேனோ ;
எருக்கறுகு ஊமத்தையணி யேகாந்தம் பாரேனோ ! 57
கொக்கிறகுக் கூடிநின்ற கொண்டாட்டம் பாரேனோ !
அக்கினியை யேந்திநின்ற ஆனந்தம் பாரேனோ ! 58
தூக்கிய காலுந் துடியிடையும் பாரேனோ !
தாக்கு முயலகன் தாண்டவத்தைப் பாரேனோ ! 59
வீசும் கரமும் விகசிதமும் பாரேனோ !
ஆசை அளிக்கு மபயகரம் பாரேனோ ! 60
கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!
அரிபிரமர் போற்ற அமரர் சயசயெனப்
பெரியம்மை பாகம்வளர் பேரழகைப் பாரேனோ ! 61
சுந்தர நீற்றின் சொகுகதனைப் பாரேனோ !
சந்திர சேகரனாய்த் தயவுசெய்தல் பாரேனோ ! 62
கெட்டநாள் கெட்டாலுங் கிருபையினிப் பாரேடா !
பட்டநாள் பட்டாலும் பதமெனக்குக் கிட்டாதோ ? 63
நற்பருவ மாக்குமந்த நாளெனக்குக் கிட்டாதோ ?
எப்பருவ முங்சுழன்ற ஏகாந்தங் கிட்டாதோ ? 64
கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!
வாக்கிற்து நின்ற மவுனமது கிட்டாதோ?
தாக்கிறந்து நிற்குமந்தத் தற்சுத்தி கிட்டாதோ ? 65
வெந்துயரைத் தீர்க்குமந்த வெட்டவெளி கிட்டாதோ ?
சிந்தையையுந் தீர்க்குமந்தத் தேறலது கிட்டாதோ ? 66
ஆன அடியார்க் கடிமைகொளக் கிட்டாதோ ?
ஊனமற வென்னை வுணர்த்துவித்தல் கிட்டாதோ ? 67
என்னென்று சொல்லுவண்டா? என்குருவே? கேளேடா !
பின்னை எனக்குநீ யல்லாமற் பிறிதிலையே. 68
கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!
அன்ன விசாரமது வற்றவிடங் கிட்டாதோ?
சொன்ன விசாரந் தொலைந்தவிடங் கிட்டாதோ? 69
உலக விசார மொழிந்தவிடங் கிட்டாதோ?
மலக்குழுவின் மின்னார் வசியாதுங் கிட்டாதோ? 70
ஒப்புவமை பற்றோ டொழிந்தவிடங் கிட்டாதோ?
செப்புதற்கு மெட்டா தெளிந்தவிடங் கிட்டாதோ? 71
வாக்கு மனாதீத வசோகசத்திற் செல்லவெனைத்
தாக்கு மருட்குருவே, நின்தாளிணைக்கே யான்போற்றி. 72
8. அருட்புலம்பல் - மகடூ முன்னிலையாக உள்ளது
ஐங்கரனை தெண்டனிட்டே னருளடைய வேண்டுமென்று
தங்காமல் வந்தொருவன் தன்சொரூபங் காட்டியெனை. 1
கொள்ளைப் பிறப்பறுக்கக் கொண்டான் குருவடிவம்
கள்ளப் புலனறுக்கக் காரணமாய் வந்தாண்டி 2
ஆதார மோராறு மைம்பத்தோ ரட்சரமும்
சூதான கோட்டையெல்லாஞ் சுட்டான் துரிசறவே. 3
மெத்த விகாரம் விளைக்கும் பலபலவாம்
தத்துவங்க ளெல்லாந் தலைகெட்டு வெந்ததடி. 4
என்னோ டுடன்பிறந்தா ரெல்லாரும் பட்டார்கள்;
தன்னந் தனியே தனித்திருக்க மாட்டேண்டி. 5
எல்லாரும் பட்டகள மென்று தொலையுமடி
சொல்லி யழுதாற் றுயரமனெக் காறுமடி. 6
மண்முதலா மைம்பூத மாண்டுவிழக் கண்டேண்டி !
விண்முதலா மைம்பொறிகள் வெந்து விழக் கண்டேண்டி. 7
நீங்காப் புனல்களைந்து நீறாக வெந்ததடி
வாக்காதி ஐவரையும் மாண்டுவிழங் கண்டேண்டி. 8
மனக்கரண மத்தனையும் வகைவகையே பட்டழிய
இனக்கரணத் தோடே யெரிந்துவிழக் கண்டேண்டி. 9
ஆத்துமத் தத்துவங்கள் அடுக்கழிய வெந்ததடி !
போற்றும்வகை யெப்படியோ போதமிழந் தானை. 10
வித்தியா தத்துவங்கள் வெந்துவிழக் கண்டேண்டி !
சுத்தவித்தை ஐந்தினையுஞ் சுட்டான் துரிசறவே. 11
முன்று வகைக்கிளையு முப்பத் தறுவரையும்
கான்றுவிழச் சுட்டுக் கருவே ரறுத்தாண்டி. 12
குருவாகி வந்தானோ? குலமறுக்க வந்தானோ?
உருவாகி வந்தானோ? உருவழிக்க வந்தானோ? 13
கேடுவரு மென்றறியேன், கெடுமதிகண் டோற்றாமல்
பாடுவரு மென்றறியேன், பதியாண்டு இருந்தேண்டி. 14
எல்லாரும் பட்டகள மின்னிட மென்றறியேன்;
பொல்லாங்கு தீர்க்கும் பொறியிலியைக் கண்டேண்டி. 15
உட்கோட்டைக் குள்ளிருந்தா ரொக்க மடிந்தார்கள்,
அக்கோட்டைக் குள்ளிருந்தா ரறுபதுபேர் பட்டார்கள். 16
ஒக்க மடிந்ததடி ! ஊடுருவ வெந்ததடி !
கற்கோட்டை யெல்லாங் கரிக்கோட்டை யாச்சுதடி. 17
தொண்ணூற் றறுவரையுஞ் சுட்டான் துரிசறிவே
கண்ணேறு பட்டதடி கருவே ரறுத்தாண்டி. 18
ஓங்காரங் கெட்டதடி, உள்ளதெல்லாம் போச்சுதடி
ஆங்காரங் கெட்டதடி, அடியோ டறுத்தாண்டி. 19
தரையாங் குடிலைமுதல் தட்டிருவ வெந்ததடி !
இரையு மனத்திடும்பை யெல்லா மறுத்தாண்டி. 20
முன்னை வினையெல்லா முழுது மறுத்தாண்டி
தன்னை யறியவே தானொருத்தி யானேண்டி. 21
என்னையே நானறிய இருவினையு மீடழித்துத்
தன்னை யறியத் தலமெனக்குச் சொன்னாண்டி. 22
தன்னை யறிந்தேண்டி ! தனிக்குமரி யானேண்டி !
தன்னந் தனியே தனியிருக்கும் பக்குவமோ. 23
வீட்டி லொருவரில்லை வெட்டவெளி யானேண்டி !
காட்டுக் கெறித்திநிலா கனவாச்சே கண்டதெல்லாம். 24
நகையாரோ கண்டவர்கள்? நாட்டுக்குப் பாட்டலவோ?
பகையாரோ கண்டவர்கள்? பார்த்தாருக் கேச்சலவோ? 25
இந்நிலமை கண்டாண்டி, எங்கு மிருந்தாண்டி !
கன்னி யழித்தாண்டி, கற்பைக் குலைத்தாண்டி. 26
கற்புக் குலைத்தமையுங் கருவே ரறுத்தமையும்
பொற்புக் குலைத்தமையும், போத மிழந்தமையும். 27
என்ன வினைவருமோ? இன்னமெனக் கென்றறியேன்
சொன்ன சொல்லெல்லாம் பலித்ததடி, சோர்வறவே. 28
கங்குல்பக லற்றிடத்தைக் காட்டிக் கொடுத்தாண்டி !
பங்க மழித்தாண்டி, பார்த்தானைப் பார்த்திருந்தேன். 29
சாதியிற் கூட்டுவாரோ? சாத்திரத்துக் குள்ளாமோ?
ஓதி யுணர்ந்தெல்லா முள்ளபடி யாச்சுதடி ! 30
என்னகுற்றஞ் செய்தேனோ? எல்லாரும் காணாமல்,
அன்னைசுற்ற மெல்லா மறியாரோ வம்புவியில்? 31
கொன்றாரைத் தின்றேனோ? தின்றாரைக் கொன்றேனோ?
எண்ணாதெல் லாமெண்ணு மிச்சை மறந்தேனோ? 32
சாதியிற் கூட்டுவரோ? சமயத்தோ ரெண்ணுவரோ?
பேதித்து வாழ்ந்ததெல்லாம் பேச்சுக் கிடமாச்சுதடி ! 33
கண்டார்க்குப் பெண்ணல்லவோ? காணார்க்கும் காமமடி
உண்டார்க ளுண்டதெலா மூணல்ல துண்பர்களோ? 34
கொண்டவர்கள் கொண்டதெல்லாங் கொள்ளாதார் கொள்ளுவரோ?
விண்டவர்கள் கண்டவரோ? கண்டவர்கள் விண்டவரோ? 35
பண்டாய நான்மறைகள் பாடும் பரிசலவோ?
தொண்டாய தொண்டருளந் தோற்றி யடுங்குமதோ? 36
ஓத எளிதோ? ஒருவர் உணர்வரிதோ?
பேதமற எங்கும் விளங்கும் பெருமையன்காண். 37
வாக்கு மனமுங் கடந்த மனோலயன்காண் !
நோக்க அரியவன்காண், நுண்ணியரில் நுண்ணியன்காண். 38
சொல்லுக் கடங்கான்காண் ! சொல்லிறந்து நின்றவன்காண் !
கல்லு ளிருந்த கனலொளிபோ னின்றவன்காண் ! 39
சூட்டிறந்த பாழதனிற் கசிந்திருக்கச் சொன்னவன்காண் !
ஏட்டி லெழுத்தோ? எழுதினவன் கைப்பிழையோ? 40
சும்மா விருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன்
அம்மா ! பொருளிதென வடைய விழுங்கினண்டி ! 41
பார்த்த விடமெல்லாம் பரமாகக் கண்டேண்டி !
கோத்த நிலைகுலைந்த கொள்கை யறியேண்டி ! 42
மஞ்சனமாட்டி மலர்பறித்துச் சாத்தாமல்
நெஞ்சுவெறும் பாழானேன் நின்றநிலை காணேண்டி ! 43
பாடிப் படித்திருந்தும் பன்மலர்கள் சாத்தாமல்,
ஓடித் திரியாம லுருக்கெட்டு விட்டேண்டி ! 44
மாணிக்கத் துள்ளளிபோல் மருவி யிருந்தாண்டி
பேணித் தொழுமடியார் பேசாப் பெருமையன்காண் 45
அன்றுமுத லின்றளவு மறியாப் பருவமதில்
என்றும் பொதுவா யிருந்த நிராமயன்காண் 46
சித்த விகாரத்தாலே சின்மயனைக் காணாமல்
புத்தி கலங்கிப் புகுந்தேன் பொறிவழியே 47
பத்தி யறியாமற் பாழில் கவிழ்ந்தேண்டி !
ஒத்தவிட நித்திரையென் றொத்து மிருந்தேண்டி? 48
திருச்சிற்றம்பலம்
9. அருட்புலம்பல் - இறந்தகாலத்திரங்கல்
வார்த்தைதிறமில்லாமனிதருக்குப்புன்சொல்லாஞ்
சாத்திரங்கள்சொல்லிச்சதுரிழந்துகெட்டேனே.
1
மெத்தமெத்தச்செல்வாக்கில்வேறுமருளடுத்துத்
தத்தித்தலைகீழாய்த்தானடந்துகெட்டேனே.
2
வழக்கந்தலங்களினுமண்பொன்னாசையினும்
பழக்கந்தலிராமற்பதியிழந்துகெட்டேனே.
3
ஆணிபொருந்துமரும்பூமியத்தனையுங்
காணிநமதென்றுகனம்பேசிக்கெட்டேனே.
4
ஆசாரமில்லாவசடருடன்கூடிப்
பாசாங்குபேசிப்பதியிழந்துகெட்டேனே.
5
குருமார்க்கமில்லாக்குருடருடன்கூடிக்
கருமார்க்கத்துள்ளேகருத்தழிந்துகெட்டேனே.
6
ஆலமருந்துமரன்பெருமையெண்ணாமல்
பாலர்பெண்டீர்மெய்யென்றுபதியிழந்துகெட்டேனே.
7
பிணவாசமுற்றபெருங்காயமெய்யென்று
பணவாசையாலேபதியிழந்துகெட்டேனே.
8
கண்டபுலவர்கனக்கவேதான்புகழ
உண்டவுடம்பெல்லாமுப்பரித்துக்கெட்டேனே.
9
எண்ணிறந்தசென்மமெடுத்துச்சிவபூசை
பண்ணிப்பிழையாமற்பதியிழந்துகெட்டேனே.
10
சிற்றெறும்புசற்றுந்தீண்டப்பொறாவுடம்பை
உற்றுறுக்கவுஞ்சுடவுமொப்பித்துமாண்டானே.
11
தன்னுடம்புதானேதனக்குப்பகையாமென்
றெண்ணுமுணர்வில்லாமலின்பமென்றுமாண்டேனே.
12
தோலெலும்புமாமிசமுந்தொல்லன்னத்தால்வளரு
மேலெலும்புஞ்சுற்றமென்றுவீறாப்பாய்மாண்டேனே.
13
போக்குவரத்தும்பொருள்வரத்துங்காணாமல்
வாக்கழிவுசொல்லிமனமறுகிக்கெட்டேனே.
14
10. திருப்பாடற்றிரட்டு /அருட்புலம்பல் - நெஞ்சொடுபுலம்பல்
மண்காட்டிப்பொன்காட்டிமாயவிருள்காட்டிச்
செங்காட்டிலாடுகின்றதேசிகனைப்போற்றாமல்
கண்காட்டும்பேசியர்தங்கண்வலையிற்சிக்கிமிக
அங்காடிநாய்போலலைந்தனையேநெஞ்சமே.
1
புட்பாசனவணையிற்பொற்பட்டுமெத்தையின்மேல்
ஒப்பாவணிந்தபணியோடாணிநீங்காமல்
இப்பாய்க்கிடத்தியியமனுயிர்கொள்ளுமுன்னே
முப்பாழைப்போற்றிமுயங்கிலையேநெஞ்சமே.
2
முப்பாழும்பாழாய்முதற்பாழ்வெறும்பாழாய்
அப்பாழுக்கப்பானின்றாடுமதைப்போற்றாமல்
இப்பாழாம்வாழ்வைநம்பியேற்றவர்க்கொன்றீயாமல்
துப்பாழாய்வந்தவினைசூழ்ந்தனையேநெஞ்சமே.
3
அன்னம்பகிர்ந்திங்கலைந்தோர்க்குதவிசெயுஞ்
சென்மமெடுத்துஞ்சிவனருளைப்போற்றாமல்
பொன்னுமனையுமெழிற்பூவையரும்வாழ்வுமிவை
இன்னுஞ்சதமாகவெண்ணினையேநெஞ்சமே.
4
முற்றொடர்பிற்செய்தமுறைமையால்வந்தசெல்வம்
இற்றைநாட்பெற்றோமென்றெண்ணாதுபாழ்மனமே
அற்றவர்க்குமீயாமலரன்பூசையோராமல்
கற்றவர்க்குமீயாமற்கண்மறந்துவிட்டனையே.
5
மாணிக்கமுத்துவயிரப்பணிபூண்டு
ஆணிப்பொன்சிங்காதனத்திலிருந்தாலும்
காணித்துடலைநமன்காட்டியேகைப்பிடித்தால்
காணிப்பொன்கூடவரக்காண்கிலமேநெஞ்சமே.
6
கற்கட்டுமோதிரநற்கடுக்கனரைஞாண்பூண்டு
திக்கெட்டும்போற்றத்திசைக்கொருத்தரானாலும்
பற்கிட்டவேமனுயிர்பந்தாடும்வேளையிலே
கைச்சட்டம்கூடவரக்காண்கிலமேநெஞ்சமே.
7
முன்னநீசெய்ததவமுப்பாலுஞ்சேருமன்றிப்
பொன்னும்பணிதிகளும்பூவையுமங்கேவருமோ
தன்னைச்சதமாகச்சற்குருவைப்போற்றாமல்
கண்ணற்றவந்தகன்போற்காட்சியற்றாய்நெஞ்சமே.
8
பையரவம்பூண்டபரமர்திருப்பொற்றாளைத்
துய்யமலர்பறித்துத்தொழுதுவணங்காமல்
கையிலணிவளையுங்காலிலிடும்பாடகமும்
மெய்யென்றிறுமார்ந்துவிட்டனையேநெஞ்சமே.
9
மாதுக்கொருபாகம்வைத்தவரன்பொற்றாளைப்
போதுக்கொருபோதும்போற்றிவருந்தாமல்
வாதுக்குத்தேடியிந்தமண்ணிற்புதைந்துவைத்தே
ஏதுக்குப்போகநீயெண்ணினையேநெஞ்சமே.
10
அஞ்சருளைப்போற்றியைந்துபுலனைத்துற்க்க
நெஞ்சேயுனக்குநினைவுநான்சொல்லுகிறேன்
வஞ்சகத்தைநீக்கிமறுநினைவுவாராமல்
செஞ்சரணத்தாளைச்சிந்தைசெய்வாய்நெஞ்சமே.
11
அற்புதமாயிந்தஉடலாவியடங்குமுன்னே
சற்குருவைப்போற்றித்தவம்பெற்றுவாழாமல்
உற்பத்திசெம்பொன்உடைமைபெருவாழ்வைநம்பிச்
சர்ப்பத்தின்வாயிற்றவளைபோலானேனே.
12
உற்றாரார்பெற்றாராருடன்பிறப்பார்பிள்ளைகளார்
மற்றாரிருந்தாலென்மாளும்போதுதவுவரோ
கற்றாவிழந்தவிளங்கன்றதுபோலேயுருகிச்
சிற்றாதிச்சிற்றின்பஞ்சேர்ந்தனையேநெஞ்சமே.
13
வீடிருக்கத்தாயிருக்கவேண்டுமனையாளிருக்கப்
பீடிருக்கவூணிருக்கப்பிள்ளைகளுந்தாமிருக்க
மாடிருக்கக்கன்றிருக்கவைத்தபொருளிருக்கக்
கூடிருக்கநீபோனகோலமென்னகோலமே.
14
சந்தனமுங்குங்குமமுஞ்சாந்தும்பறிமளமும்
விந்தைகளாப்பூசிமிகுவேடிக்கையொய்யாரக்
கந்தமலர்சூடுகின்றகன்னியருந்தாமிருக்க
எந்தவகைபோனாயென்றெண்ணிலையேநெஞ்சமே.
15
காற்றுத்துருத்திகடியவினைக்குள்ளான
ஊற்றைச்சடலத்தையுண்டென்றிறுமாந்து
பார்த்திரங்கியன்னம்பசித்தோருக்கீயாமல்
ஆற்றுவெள்ளம்போலவளாவினையேநெஞ்சமே.
16
நீர்க்குமிழிவாழ்வைநம்பிநிச்சயமென்றேயெண்ணிப்
பாக்களவாமன்னம்பசித்தோர்க்களியாமல்
போர்க்குளெமதூதன்பிடித்திழுக்குமப்போது
ஆர்ப்படுவாரென்றேயறிந்திலையேநெஞ்சமே.
17
சின்னஞ்சிறுநுதலாள்செய்தபலவினையான்
முன்னந்தமார்பின்முளைத்தசிலந்திவிம்மி
வன்னந்தளதளப்பமயங்கிவலைக்குள்ளாகி
அன்னம்பகிர்ந்துண்ணவறிந்திலையேநெஞ்சமே.
18
ஒட்டைத்துருத்தியையுடையும்புழுக்கூட்டை
ஆட்டுஞ்சிவசித்தரருளைமிகப்போற்றியே
வீட்டைத்திறந்துவெளியையொளியாலழைத்துக்
காட்டும்பொருளிதென்றுகருதிலையேநெஞ்சமே.
19
ஊன்பொதிந்தகாயமுளைந்தபுழுக்கூட்டைத்
தான்சுமந்ததல்லால்நீசற்குருவைப்போற்றாமல்
கான்பரந்தவெள்ளங்கரைபுரளக்கண்டேகி
மீன்பரந்தாற்போலேவிசாரமுற்றாய்நெஞ்சமே.
20
உடக்கையொருக்கியுயிரையடைத்துவைத்த
சடக்கைச்சதமென்றுசார்ந்தங்கிறுமாந்தை
உடக்கைத்தகர்த்தேயுயிரையமன்கொள்கையிலே
யடக்கமாய்வைத்தபொருளங்குவரமாட்டாதே.
21
தித்திக்குந்தேனைத்தெவிட்டாததெள்ளமுதை
முத்திக்குவித்தானமுப்பாழைப்போற்றாமல்
பற்றிப்பிடித்தியமன்பாசத்தாற்கட்டும்வண்ணம்
சுற்றியிருக்கும்வினைசூழ்ந்தனையேநெஞ்சமே.
22
அஞ்செழுத்தாயெட்டெழுத்தாயைம்பத்தோரட்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய்நின்றபெருமானைப்போற்றாமல்
வஞ்சகமாயுற்றமுலைமாதர்வலைக்குள்ளாகிப்
பஞ்சரித்துத்தேடிப்பாழுக்கிறைத்தோமே.
23
அக்கறுகுகொன்றைதும்பையம்புலியுஞ்சூடுகின்ற
சொக்கர்திருத்தாளைத்தொழுதுவணங்காமல்
மக்கள்பெண்டிர்சுற்றமுடன்வாழ்வைமிகநம்பியன்பாய்
எக்காலமுமுண்டென்றெண்ணினையேநெஞ்சமே.
24
ஆண்டகுருவினருளைமிகப்போற்றி
வேண்டுகயிலாயவீட்டுவழிபாராமல்
பூண்டகுழன்மாதுநல்லார்பொய்மாய்கைக்குள்ளாகித்
தூண்டிலகப்பட்டுத்துடிகெண்டையானேனே.
25
ஏணிப்பழுவாமிருளையறுத்தாளமுற்றும்
பேணித்தொழுங்கயிலைபேறுபெறமாட்டாமல்
காணவரும்பொருளாய்க்கண்கலக்கப்பட்டடியேன்
ஆணியற்றமாமரம்போலாகினனேநெஞ்சமே.
26
கோத்துப்பிரகாசங்கொண்டுருகியண்டமெல்லாம்
காத்தபடியேகயிலாயஞ்சேராமல்
வேற்றுருவப்பட்டடியேன்வெள்ளம்போலுள்ளுருகி
ஏற்றுங்கழுவிலிருந்தபிணமானேனே.
27
நிலைவிட்டுடலையுயிர்நீங்கியகலுமுன்னே
சிலைதொட்டவேடனெச்சிற்றின்னானைச்சேராமல்
வலைபட்டுழலுகின்றமான்போற்பரதவித்து
தலைகெட்டநூலதுபோற்றட்டழிந்தாய்நெஞ்சமே.
28
முடிக்குமயிர்ப்பொல்லாமுழுக்குரம்பைமின்னாரின்
இடைக்குநடைக்குமிதங்கொண்டவார்த்தைசொல்லி
அடிக்கொண்டதில்லைவனத்தையனேநாயனையேன்
விடக்கையிழந்தமிருகமதுவானேனே.
29
பூவாணர்போற்றும்புகழ்மதுரைச்சொக்கரது
சீர்பாதம்போற்றிச்சிவலோகஞ்சேராமல்
தாவாரந்தோறுந்தலைபுகுந்தநாய்போலே
ஆகாதநெஞ்சமேயலைந்துதிரிந்தாயே.
30
பத்தெட்டாயீரைந்தாய்ப்பதின்மூன்றிரண்டொன்றாய்
ஒத்திட்டுநின்றதோரோவியத்தைப்போற்றாமல்
தெத்திட்டுநின்றதிரிகண்ணிக்குள்ளாகி
வித்திட்டாய்நெஞ்சேவிடவுமறியாயே.
31
அஞ்சுமுருவாகியைமூன்றுமெட்டுமொன்றாய்
மிஞ்சியிருந்தவிளக்கொளியைப்போற்றாமல்
பஞ்சிலிடுவன்னியைப்போற்பற்றிப்பிடியாமல்
நஞ்சுண்டகெண்டையைப்போல்நானலைந்துகெட்டேனே.
32
ஊனமூடனேயுடையும்புழுக்கூட்டை
மானமுடனேசுமந்துமண்ணுலகின்மாளாமல்
ஆனதொருபஞ்சவர்களாண்டிருந்ததேசம்விட்டுப்
போனதுபோலேநாம்போய்ப்பிழைத்தோமில்லையே.
33
ஊறையிறைக்கின்றவுப்பிருந்தபாண்டத்தை
நாறாமல்நாறிநழுவும்புழுக்கூட்டை
வீறாம்புரத்தைவிரும்புகின்றதெப்படியென்
றாறாதநாட்டிலகன்றிருந்தேனில்லையே.
34
அரியவரிதேடியறியாவொருமுதலைப்
பரிவுடனேபோற்றும்பரஞ்சுடரைப்போற்றாமல்
கரியபெருவாழ்வைநம்பிக்காமத்தழுந்தியே
அரிவாயிற்பட்டகரியதுபோலானேனே.
350
தந்திரத்தையுன்னித்தவத்தைமிகநிறுத்தி
மந்திரத்தையுன்னிமயங்கித்தடுமாறி
விந்துருகிநாதமாமேலொளியைக்காணாமல்
அந்தரத்தேகோலெறிந்தவந்தகன்போலானேனே.
36
விலையாகிப்பாணனுக்குவீறடிமைப்பட்டதுபின்
சிலையார்கைவேடனெச்சிற்றின்றானைப்போற்றாமல்
அலைவாய்ந்துரும்பதுபோலாணவத்தினாலழுங்கி
யுலைவாய்மெழுகதுபோலுருகினையேநெஞ்சமே.
37
பூரணமாலை
மூலத்துதித்தெழுந்தமுக்கோணசக்கரத்துள்
வாலைதனைப்போற்றாமல்மதிமறந்தேன்பூரணமே.
1
உந்திக்கமலத்துதித்துநின்றபிரமாவைச்
சந்தித்துக்காணாமற்றட்டழிந்தேன்பூரணமே.
2
நாவிக்கமலநடுநெடுமால்காணாமல்
ஆவிகெட்டியானுமறிவழிந்தென்பூரணமே.
2
உருத்திரனையிருதயத்திலுண்மையுடன்பாராமல்
கருத்தழிந்துநானுங்கலங்கினேன்பூரணமே.
4
விசுத்திமயேசுரனைவிழிதிறந்துபாராமல்
பசித்துருகிநெஞ்சம்பதறினேன்பூரணமே.
5
நெற்றிவிழியுடையநிர்மலசதாசிவத்தைப்
புத்தியுடன்பாராமற்பொறியழிந்தேன்பூரணமே.
6
நாதவிந்துதன்னைநயமுடனேபாராமல்
போதமயங்கிப்பொறியழிந்தேன்பூரணமே.
7
உச்சிவெளியையுறுதியுடன்பாராமல்
அச்சமுடனானுமறிவழிந்தேன்பூரணமே.
8
மூக்குமுனையைமுழித்திருந்துபாராமல்
ஆக்கைகெட்டுநானுமறிவழிந்தேன்பூரணமே.
9
இடைபிங்கலையினியல்பறியமாட்டாமல்
தடையுடனேயானுந்தயங்கினேன்பூரணமே.
10
ஊனுக்குணீநின்றுலாவினதைக்காணாமல்
நானென்றிருந்துநலனழிந்தேன்பூரணமே.
11
மெய்வாழ்வைநம்பிவிரும்பிமிகவாழாமல்
பொய்வாழ்வைநம்பிப்புலம்பினேன்பூரணமே.
12
பெண்டுபிள்ளைதந்தைதாய்பிறவியுடன்சுற்றமிவை
யுண்டென்றுநம்பியுடலழிந்தேன்பூரணமே.
13
தண்டிகைபல்லாக்குடனேசகலசம்பத்துகளும்
உண்டென்றுநம்பியுணர்வழிந்தேன்பூரணமே.
14
இந்தவுடலுயிரையெப்போதுந்தான்சதமாப்
பந்தமுற்றுநானும்பதமழிந்தேன்பூரணமே.
15
மாதர்பிரபஞ்சமயக்கத்திலேவிழுந்து
போதமயங்கிப்பொறியழிந்தேன்பூரணமே.
16
சரியைகிரியாயோகந்தான்ஞானம்பாராமல்
பரிதிகண்டமதியதுபோற்பயனழிந்தேன்பூரணமே.
17
மண்பெண்பொன்னாசைமயக்கத்திலேவிழுந்து
கண்கெட்டமாடதுபோற்கலங்கினேன்பூரணமே.
18
தனிமுதலைப்பார்த்துத்தனித்திருந்துவாழாமல்
அனியாயமாய்ப்பிறந்திங்கலைந்துநின்றேன்பூரணமே.
19
ஈராறுதண்கலைக்குளிருந்துகூத்தாடினதை
ஆராய்ந்துபாராமலறிவழிந்தேன்பூரணமே.
20
வாசிதனைப்பார்த்துமகிழ்ந்துனைத்தான்போற்றாமல்
காசிவரைபோய்த்திரிந்துகாலலுத்தேன்பூரணமே.
21
கருவிகடொண்ணூற்றாறிற்கலந்துவிளையாடினதை
இருவிழியாற்பாராமலீடழிந்தேன்பூரணமே.
22
உடலுக்குள்நீநின்றுலாவினதைக்காணாமல்
கடமலைதோறுந்திரிந்துகாலலுத்தேன்பூரணமே.
23
எத்தேசகாலமுநாமிறவாதிருப்பமென்று
உற்றுனைத்தான்பாராமலுருவழிந்தேன்பூரணமே.
24
எத்தனைதாய்தந்தையிவர்களிடத்தேயிருந்து
பித்தனாயானும்பிறந்திறந்தேன்பூரணமே.
25
பெற்றலுத்தாள்தாயார்பிறந்தலுத்தேன்யானுமுன்றன்
பொற்றுணைத்தாள்தந்துபுகலருள்வாய்பூரணமே.
26
உற்றாரழுதலுத்தாருறன்முறையார்சுட்டலுத்தார்
பெற்றலுத்தாள்தாயார்பிறந்தலுத்தேன்பூரணமே.
27
பிரமன்படைத்தலுத்தான்பிறந்திறந்துநானலுத்தேன்
உரமுடையவக்கினிதானுண்டலுத்தான்பூரணமே.
28
எண்பத்துநான்குநூறாயிரஞ்செனனமுஞ்செனித்துப்
புண்பட்டுநானும்புலம்பினேன்பூரணமே.
29
என்னையறியாமலெனக்குள்ளேநீயிருக்க
உன்னையறியாமலுடலிழந்தேன்பூரணமே.
30
கருவாயுருவாய்க்கலந்துலகெலாநீயாய்
அருவாகிநின்றதறிகிலேன்பூரணமே.
31
செம்பொற்கமலத்திருவடியைப்போற்றாமல்
பம்பைகொட்டவாடும்பசாசானேன்பூரணமே.
32
எனக்குள்ளேநீயிருக்கவுனக்குள்ளேநானிருக்க
மனக்கவலைதீரவரமருள்வாய்பூரணமே.
33
எழுவகைத்தோற்றத்திருந்திவிளையாடினதைப்
பழுதறவேபாராமற்பயனிழந்தேன்பூரணமே.
34
சாதிபேதங்கள்தனையறியமாட்டாமல்
வாதனையால்நின்றுமயங்கினேன்பூரணமே.
35
குலமொன்றாய்நீபடைத்தகுறையையறியாமல்யான்
மலபாண்டத்துள்ளிருந்துமயங்கினேன்பூரணமே.
36
அண்டபிண்டமெல்லாமனுவுக்கணுவாகநீ
கொண்டவடிவின்குறிப்பறியேன்பூரணமே.
37
சகஸ்திரத்தின்மேலிருக்குஞ்சற்குருவைப்போற்றாம
லகத்தினுடையாணவத்தாலறிவழிந்தேன்பூரணமே.
38
ஐந்துபொறியையடக்கியுனைப்போற்றாமல்
நைந்துருகிநெஞ்சநடுங்கினேன்பூரணமே.
39
என்னைத்திருக்கூத்தாவிப்படிநீயாட்டுவித்தாய்
உன்னையறியாதுடலழிந்தேன்பூரணமே.
40
நரம்புதசைதோலெலும்புநாற்றத்துக்குள்ளிருந்து
வரம்பறியமாட்டாமல்மயங்கினேன்பூரணமே.
41
சிலந்தியுடைநூல்போற்சீவசெந்துக்குள்ளிருந்த
நலந்தனைத்தான்பாராமல்நலமழிந்தேன்பூரணமே.
42
குருவாய்ப்பரமாகிக்குடிலைசத்திநாதவிந்தாய்
அருவாயுருவானதறிகிலேன்பூரணமே.
43
ஒளியாய்க்கதிர்மதியாயுள்ளிருளாயக்கினியாய்
வெளியாகிநின்றவியனறியேன்பூரணமே.
44
இடையாகிப்பிங்கலையாயெழுந்தசுழுமுனையாய்
உடலுயிராய்நீயிருந்தவுளவறியேன்பூரணமே.
45
மூலவித்தாய்நின்றுமுளைத்துடல்தோறும்மிருந்து
காலனெனவழிக்குங்கணக்கறியேன்பூரணமே.
46
உள்ளும்புறம்புமாயுடலுக்குள்நீயிருந்த
தெள்ளவுநானறியாதிருந்தேனேபூரணமே.
47
தாயாகித்தந்தையாய்த்தமர்கிளைஞர்சுற்றமெல்லாம்
நீயாகிநின்றநிலையறியேன்பூரணமே.
48
விலங்குபுள்ளூர்வனவசரம்விண்ணவர்நீர்ச்சாதிமனுக்
குலங்களெழுவகையில்நின்றகுறிப்பறியேன்பூரணமே.
49
ஆணாகிப்பெண்ணாயலியாகிவேற்றுருவாய்
மாணாகிநின்றவகையறியேன்பூரணமே.
50
வாலையாய்ப்பக்குவமாய்வளர்ந்துகிழந்தானாகும்
பாலையாய்நின்றபயனறியேன்பூரணமே.
51
பொய்யாய்ப்புவியாய்ப்புகழ்வாரிதியாகி
மெய்யாகிநின்றவியனறியேன்பூரணமே.
52
பூவாய்மணமாகிப்பொன்னாகிமாற்றாகி
நாவாய்ச்சொல்லானநயமறியேன்பூரணமே.
53
முதலாய்நடுவாகிமுப்பொருளாய்மூன்றுலகா
யிதமாகிநின்றவியலறியேன்பூரணமே.
54
ஊனாயுடலுயிராயுண்ணிறைந்தகண்ணொளியாய்த்
தேனாய்ருசியானதிறமறியேன்பூரணமே.
55
வித்தாய்மரமாய்விளைந்தகனிகாய்பூவாய்ச்
சித்தாகிநின்றதிறமறியேன்பூரணமே.
56
ஐவகையும்பெற்றுலகவண்டபகிரண்டமெல்லாந்
தெய்வமெனநின்றதிறமறியேன்பூரணமே.
57
மனமாய்க்கனவாகிமாயைகையாயுள்ளிருந்து
நினைவாகிநின்றநிலையறியேன்பூரணமே.
58
சத்திசிவமிரண்டாய்த்தான்முடிவிலொன்றாகிச்
சித்திரமாய்நின்றதிறமறியேன்பூரணமே.
59
பொறியாய்ப்புலனாகிப்பூதபேதப்பிரிவாய்
அறிவாகிநின்றவளவறியேன்பூரணமே.
60
வானிற்கதிர்மதியாய்வளர்ந்துபின்னொன்றானதுபோல்
ஊனுடலுக்குள்ளிருந்தவுயிர்ப்பறியேன்பூரணமே.
61
பொய்யும்புலையுமிகப்பொருந்திவீண்பேசலன்றி
ஐயோவுனையுரைக்கவறிகிலேன்பூரணமே.
62
நிரந்தரமாயெங்குநின்றுவிளையாடினதைப்
பரமதுவேயென்னப்பதமறியேன்பூரணமே.
63
கொல்வாய்பிரப்பாய்கூடலிருந்தேசுகிப்பாய்
செவ்வாய்பிறர்க்குட்செயலறியேன்பூரணமே.
64
வாரிதியாய்வையமெல்லாமன்னுமண்டபிண்டமெல்லாஞ்
சாருதியாய்நின்றதலமறியேன்பூரணமே.
65
வித்தாய்மரமாய்வெளியாயொளியாய்நீ
சத்தாயிருந்ததரமறியேன்பூரணமே.
66
தத்துவத்தைப்பார்த்துமிகத்தன்னையறிந்தறிவால்
உய்த்துனைத்தான்பாராமலுய்வாரோபூரணமே.
67
ஒன்றாயுயிராயுடல்தோறுநீயிருந்தும்
என்றுமறியார்களேழைகள்தாம்பூரணமே.
68
நேற்றென்றுநாளையென்றுநினைப்புமறப்பாய்ப்படைத்து
மாற்றமாய்நின்றவளமறியேன்பூரணமே.
69
மனம்புத்திசித்தமகிழறிவாங்காரமதாய்
நினைவாந்தலமானநிலையறியேன்பூரணமே.
70
உருப்பேதமின்றியுயர்ந்தசத்தபேதமதாய்க்
குருபேதமாய்வந்தகுணமறியேன்பூரணமே.
71
கட்சமயபேதங்கள்தான்வகுத்துப்பின்னுமொரு
உட்சமயமுண்டென்றுரைத்தனையேபூரணமே.
72
முப்பத்திரண்டுறுப்பாய்முனைந்துபடைத்துள்ளிருந்த
செப்படுவித்தைத்திறமறியேன்பூரணமே.
73
என்னதான்கற்றாலென்னெப்பொருளும்பெற்றாலென்
உன்னையறியாதாருய்வரோபூரணமே.
74
கற்றறிவோமென்பார்காணார்களுன்பதத்தைப்
பெற்றறியார்தங்களுக்குப்பிறப்பறுமோபூரணமே.
75
வானென்பாரண்டமென்பார்வாய்ஞானமேபேசித்
தானென்பார்வீணர்தனையறியார்பூரணமே.
76
ஆதியென்பாரந்தமென்பாரதற்குணடுவாயிருந்த
சோதியென்பார்நாதத்தொழிலறியார்பூரணமே.
77
மூச்சென்பாருள்ளமென்பார்மோனமெனுமோட்சமென்பார்
பேச்சென்பாருன்னுடையபேரறியார்பூரணமே.
78
பரமென்பார்பானுவென்பார்பாழ்வெளியாய்நின்ற
வரமென்பாருன்றன்வழியறியார்பூரணமே.
79
எத்தனைபேரோவெடுத்தெடுத்துத்தானுரைத்தார்
அத்தனைபேர்க்கொன்றானதரிகிலேன்பூரணமே.
80
நகாரமகாரமென்பார்நடுவேசிகாரமென்பார்
வகாரயகாரமென்பார்வகையறியார்பூரணமே.
81
மகத்துவமாய்க்காமமயக்கத்துக்குள்ளிருந்து
பகுத்தறியமாட்டாமற்பயனழிந்தேன்பூரணமே.
82
உண்மைப்பொருளையுகந்திருந்துபாராமற்
பெண்மயக்கத்தாலேபிறந்திறந்தேன்பூரணமே.
83
வாயாரவாழ்த்திமகிழ்ந்துனைத்தான்வோற்றாமல்
காயமெடுத்துக்கலங்கினேன்பூரணமே.
84
சந்திரனைமேகமதுதான்மறைத்தவாறதுபோற்
பந்தமுறயானுமுனைப்பார்க்கிலேன்பூரணமே.
85
செந்தாமரைத்தாளைத்தினந்தினமும்போற்றாமல்
அந்தரமாய்நின்றிங்கலைந்தேனான்பூரணமே.
86
நீர்மேற்குமிழிபோல்நிலையற்றகாயமிதைத்
தாரகமென்றெண்ணிநான்றட்டழிந்தேன்பூரணமே.
87
நெஞ்சமுருகிநினைத்துனைத்தான்போற்றிநெடு
வஞ்சகத்தைப்போக்கவகையறியேன்பூரணமே.
88
எள்ளுக்குளெண்ணைய்போலெங்குநிறைந்திருந்த
துள்ளமறியாதுருகினேன்பூரணமே.
89
மாயாப்பிரபஞ்சமயக்கத்திலேவிழுந்தே
யோயாச்சனனமொழித்திலேன்பூரணமே.
90
பூசையுடன்புவனபோகமெனும்போக்கியத்தால்
ஆசையுற்றேநானுமறிவழிந்தேன்பூரணமே.
91
படைத்துமழித்திடுவாய்பார்க்கிற்பிரமாவெழுத்தைத்
தொடைத்துச்சிரஞ்சீவியாத்துலங்குவிப்பாய்பூரணமே.
92
மந்திரமாய்ச்சாத்திரமாய்மறைநான்காய்நீயிருந்த
தந்திரத்தைநானறியத்தகுமோதான்பூரணமே.
93
அல்லாய்ப்பகலாயனவரதகாலமெனுஞ்
சொல்லாய்ப்பகுத்ததொடர்பறியேன்பூரணமே.
94
நரகஞ்சுவர்க்கமெனநண்ணுமிரண்டுண்டாயும்
அரகராவென்பதறிகிலேன்பூரணமே.
95
பாவபுண்ணியமென்னும்பகுப்பாய்ப்படைத்தழித்திங்
காவலையுண்டாக்கிவைத்தவருளறியேன்பூரணமே.
96
சாந்தமென்றுங்கோபமென்றுஞ்சாதிபேதங்களென்றும்
பாந்தமென்றும்புத்தியென்றும்படைத்தனையேபூரணமே.
97
பாசமுடலாய்ப்பசுவதுவுந்தானுயிராய்
நேசமுடனீபொருளாய்நின்றனையேபூரணமே.
98
ஏதிலடியாரிரங்கியிகத்தில்வந்துன்
பாதமதில்தாழப்பரிந்தருள்வாய்பூரணமே.
99
நானேநீநீயேநானாமிரண்டுமொன்றானால்
தேனின்ருசியதுபோற்றெவிட்டாய்நீபூரணமே.
100
முடிவிலொருசூனியத்தைமுடித்துநின்றுபாராமல்
அடியிலொருசூனியத்திலலைந்தேனேபூரணமே.
101
பூரணமாலைதனைப்புத்தியுடனோதினர்க்குத்
தாரணியில்ஞானந்தழைப்பிப்பாய்பூரணமே.
102
12. நெஞ்சொடுமகிழ்தல்
அன்றுமுதலின்றளவுமாக்கையொடுசூட்சியமாய்
நின்றநிலையறியநேசமுற்றாய்நெஞ்சமே.
1
அங்கங்குணர்வாயறிவாகியேநிரம்பி
எங்கெங்குமானதிலேயேகரித்தாய்நெஞ்சமே.
2
அலையாதபேரின்பவானந்தவெள்ளத்தில்
நிலையாயுருவிறந்துநின்றனையேநெஞ்சமே.
3
பாராமற்பதையாமற்பருகாமல்யாதொன்றும்
ஓராதுணர்வுடனேயொன்றினையேநெஞ்சமே.
4
களவிறந்துகொலையிறந்துகாண்பனவுங்காட்சியும்போ
யளவிறந்துநின்றதிலேயன்புற்றாய்நெஞ்சமே.
5
பேச்சிறந்துசுட்டிறந்துபின்னிறந்துமுன்னிறந்து
நீச்சிறந்துநின்றதிலேநேசமுற்றாய்நெஞ்சமே.
6
விண்ணிறந்துமண்ணிறந்துவெளியிறந்துவொளியிறந்து
எண்ணிறந்துநின்றதிலேயேகரித்தாய்நெஞ்சமே.
7
பார்த்தவிடமெங்கும்பரமெனவேயுட்புறம்புங்
கோத்தபடியுண்மையெனக்கொண்டனையேநெஞ்சமே.
8
ஊரிறந்துபேரிறந்துவொளியிறந்துவெளியிறந்து
சீரிறந்துநின்றதிலேசேர்ந்தனையேநெஞ்சமே.
9
ஆண்பெண்ணலியென்றழைக்கவரிதாய்நிறைந்து
காணவரிதாயவிடங்கண்ணுற்றாய்நெஞ்சமே.
10
ஆங்காரமச்சமகற்றியறிவினொடு
தூங்காமற்றூங்கிச்சுகம்பெற்றாய்நெஞ்சமே.
11
ஆதியாய்நின்றவகண்டபரிபூரணத்தைச்
சாதியாநின்றவிடஞ்சார்வுற்றாய்நெஞ்சமே.
12
விருப்புவெறுப்பில்லாதவெட்டவெளியதனில்
இருப்பேசுகமென்றிருந்தனையேநெஞ்சமே.
13
ஆருமுறாப்பேரண்டத்தப்புறத்துமிப்புறத்தும்
நீருமுப்புமென்னநிலைபெற்றாய்நெஞ்சமே.
14
உடனாகவேயிருந்துமுணரவரியானோடு
கடனீருமாறும்போற்கலந்தனையேநெஞ்சமே..
15
நெடியகத்தைப்போக்கிநின்றசழக்கறுத்துப்
படிகத்துக்கும்போற்பற்றினையேநெஞ்சமே.
16
மேலாகியெங்கும்விளங்கும்பரம்பொருளிற்
பாலூறுமென்சுவைபோற்பற்றினையேநெஞ்சமே.
17
நீரொடுதண்ணாவிவிண்டுநீரானவாறேபோல்
ஊரொடுபேரில்லானோடொன்றினையேநெஞ்சமே.
18
இப்பிறப்பைப்பாழ்படுத்தியிருந்தபடியேயிருக்கச்
செப்பவரிதாயவிடஞ்சேர்ந்தனையேநெஞ்சமே.
19
மேலாம்பதங்களெல்லாம்விட்டுவிட்டாராய்ந்து
நாலாம்பதத்தினடந்தனையேநெஞ்சமே.
20
கடங்கடங்கடோறுங்கதிரவனூடாடி
யடங்குமிடந்தானறிந்தன்புற்றாய்நெஞ்சமே.
21
கற்றவனாய்க்கேட்டவனாய்க்காணானாய்க்காண்பவனாய்
உற்றவனாய்நின்றதிலேயொன்றுபட்டாய்நெஞ்சமே.
22
நாலுவகைக்கரணநல்குபுலனைந்துமொன்றாய்ச்
சீலமுற்றுநின்றதிலேசேர்ந்தனையேநெஞ்சமே.
23
விட்டிடமுந்தொட்டிடமும்விண்ணிடமுமண்ணிடமுங்
கட்டுமொருதன்மையெனக்கண்ணுற்றாய்நெஞ்சமே.
24
எந்தெந்தநாளுமிருந்தபடியேயிருக்க
அந்தச்சுகாதீதமாக்கினையேநெஞ்சமே.
25
வாக்கிறந்துநின்றமனோகோசரந்தனிலே
தாக்கறவேநின்றதிலேதலைசெய்தாய் நெஞ்சமே.
26
எத்தேசமுநிறைந்தேயெக்காலமுஞ்சிறந்து
சித்தாயசித்தினிடஞ்சேர்ந்தனையே நெஞ்சமே.
27
தாழாதேநீளாதேதன்மயமதாய்நிறைந்து
வாழாதேவாழமருவினையே நெஞ்சமே.
28
உள்ளும்புறம்புமுவட்டாதவானந்தக்
கள்ளருந்திநின்றதிலேகண்ணுற்றாய் நெஞ்சமே.
29
வாதனைபோய் நிஷ்டையும்போய் மாமௌனராச்சியம்போய்
பேதமற நின்றவிடம் பெற்றனையே நெஞ்சமே.
30
இரதம்பிரிந்துகலந்தேகமாம்வாறேபோல்
விரகந்தவிர்ந்தணல்பால்மேவினையேநெஞ்சமே.
31
சோதியான்சூழ்பனிநீர்சூறைகொளுமாறேபோல்
நீதிகுருவின்றிருத்தாள்நீபெற்றாய்நெஞ்சமே.
32
13. உடற்கூற்றுவண்ணம்
தன தன தான, தன தன தான, தந்த தனந்தன தந்த தனந்த
தனனதனந்த, தனனதனந்த, தானனதானன தானதனந்த.
ஒருமடமாதுமொருவனுமாகி,
இன்பசுகந்தருமன்புபொருந்தி
யுணர்வுகலங்கிஒழுகியவிந்து,
வூறுசுரோணிதமீதுகலந்து.
பனியிலொர்பாதிசிறுதுளிமாது,
பண்டியில்வந்துபுகுந்து
ண்டு, பதுமவரும்புகமடமிதென்று,
பார்வைமெய்வாய்செவிக[***]கைகளென்ற.
உருவமுமாகியுயிர்வளர்மாத,
மொன்பதுமொன்றுநிறைந்துமடந்[***]
யுதரமகன்றுபுவியில்விழுந்து,
யோகமும்வாரமுநாளுமறிந்து,
மகளிர்கள்சேனைதரவணையாடை,
மண்படவுந்தியுதைந்துகவிழ்ந்து
மடமயில்கொங்கையமுதமருந்தி,
யோரறிவீரறிவாகிவளர்ந்து.
ஒளிநகையூறலிதழ்மடவாரு,
வந்துமுகந்திடவந்துதவழ்ந்து
மடியிலிருந்துமழலைமொழிந்து,
வாவிருபோலெனநாமம்விளம்ப.
உடைமணியாடையரைவடமாட,
வுண்பவர்தின்பவர்தங்க ளொடுண்டு,
தெருவிலிருந்து புழுதியளைந்து,
தேடியபாலரொடோடிநடந்து
அஞ்சுவயதாகிவிளையாடியே.
1
உயர்தருஞானகுருஉபதேச,
முந்தமிழின்கலையுங்கரைகண்டு
வளர்பிறையென்றுபலரும்விளம்ப,
வாழ்பதினாறுபிராயமும்வந்து.
மயிர்முடிகோதியறுபதநீல,
வண்டிமிர்தண்டொடைகொண்டைபுனைந்து,
மணிபொனிலங்குபணிகளணிந்து,
மாகதர்போகதர்கூடிவணங்க.
மதனசொரூபனிவனெனமோக,
மங்கையர்கண்டுமருண்டுதிர
ண்டு,வரிவிழிகொண்டுசுழியவெறிந்து,
மாமயில்போலவர்போவதுகண்டு.
மனதுபோறாமலவர்பிறகோடி,
மங்கலசெங்கலசந்திகழ்கொங்கைம
ருவமயங்கியிதழமுதுண்டு,
தேடியமாமுதல்சேரவழங்கி,
ஒருமுதலாகிமுதுபொருளாயி,
ருந்ததனங்களும்வம்பிலிழந்து
மதனசுகந்தவிதனமிதென்று,
வாலிபகோலமும்வேறுபிரிந்து.
வளமையுமாறியிளமையும்மாறி,
வன்பல்விழுந்திருகண்களிருண்டு
வயதுமுதிர்ந்துநரைதிரைவந்து,
வாதவிரோதகுரோதமடைந்து.
செங்கையினி்லோர்தடியுமாகியே.
2
வருவதுபோவதொருமுதுகூனு,
மந்தியெனும்படிகுந்திநடந்து
மதியுமழிந்துசெவிதிமிர்வந்து,
வாயறியாமல்விடாமன்மொழிந்து.
துயில்வருநேரமிருமல்பொறாது,
தொண்டையு நெஞ்சுமுன்வந்துவறந்து,
துகிலுமிழந்துசுணையுமழிந்து,
தோகையர் பாலர்ககோரணிகொண்டு.
கலியுகமீதிலிவர்மரியாதை,
கண்டிடுமென்பவர்சஞ்சலமிஞ்ச
கலகலவென்றுமலசலம்வந்து,
கால்வழிமேல்வழிசாரநடந்து.
தெளிவுமிராமலுரைதடுமாறி,
சிந்தையுநெஞ்சுமுலைந்துமருண்டு
திடமுமலைந்துமிகவுமலைந்து,
தேறிகலாதரவேதெனநொந்து.
மறையவன்வேதனெழுதியவாறு,
வந்ததுகண்டமுமென்றுதெளிந்து
இனியெனகண்டமினியெனதொந்த,
மேதினிவாழ்வுநிலாதினிநின்று
கடன்முறைபேசுமெனவுரைநாவு,
றங்கிவிழுந்துகைகொன் மொழிந்து,
கடைவழிகஞ்சியொழுகிடவந்து,
பூதமுநாலுசுவாசமும்நின்று.
நெஞ்சுதடுமாறிவருநேரமே.
3
வளர்பிறைபோலவெயிறுமுரோம,
முஞ்சடையுஞ் சிறுகுஞ்யும்விஞ்ச,
மனதுமிருண்டவடிவுமிலங்க,
மாமலைபோல் யமதூதர்கள்வந்து.
வலைகொடுவீசியுயிர்கொடுபோக,
மைந்தரும்வந்துகுனிந்தழநொந்து
மடியில்விழுந்துமனைவிபுலம்ப,
மாழ்கினரெயிவர்காலமறிந்து.
பழையவர்காணுமெனுமயலார்கள்,
பஞ்சுபறந்திடநின்றவர்பந்த
ரிடுமெனவந்துபறையிடமுந்த,
வேபிணம்வேகவிசாரியுமென்று.
பலரையுமேவிமுதியவர்தாமி,
ருந்தசவங்கழுவுஞ்சிலரென்று
பணிதுகில்தொங்கல்களபபணிந்து,
பாவகமேசெய்துநாறுமுடம்பை.
வரிசைகெடாமலெடுமெனவோடி,
வந்திளமைந்தர்குனிந்துசுமந்து
கடுகிநடந்துசுடலையடைந்து,
மாநுடவாழ்வெனவாழ்வெனநொந்து.
விறகிடைமூடியழல்கொடுபோட,
வெந்துவிழுந்துமுறிந்துநிணங்க
ளுருகியெலும்புகருகியடங்கி,
யோர்பிடிநீறுமிலாதவுடம்பை,
நம்புமடியேனையினியாளுமே.
4
14. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை.
இணைக்குறளாசிரியப்பா
தெய்வத் தாமரைச் செவ்விதின் மலர்ந்து
வாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து
சிலம்புங் கழலு மலம்பப் புனைந்து
கூற்றி னாற்றன் மாற்றிப் போற்றாது
வலம்புரி நெடுமா லேனமாய் நிலம்புக்
காற்றலி னகழத் தோற்றாது நிமிர்ந்து
பத்தி யடியவர் பச்சிலை யிடினு
முத்தி கொடுத்து முன்னின் றருளித்
திகழ்ந்துள தொருபாற் றிருவடி யகஞ்சேந்து
மறுவில் கற்பகத் துறுதளிர் வாங்கி
நெய்யிற் றோய்த்த செவ்வித் தாகி
நூபுரங் கிடப்பினு நொந்து தேவர்
மடவரன் மகளிர் வணங்குபு வீழ்த்த
சின்னப் பன்மலர் தீண்டிடச் சிவந்து
பஞ்சியு மனிச்சமு மெஞ்ச வெஞ்சாத்
திருவொடும் பொலியு மொருபாற் றிருவடி
நீலப் புள்ளி வாளுகிர் வேங்கைத்
தோலின் கலிங்க மேல்விரித் தசைத்து
நச்செயிற் றரவக் கச்சையாப் புறுத்துப்
பொலிந்துள தொருபாற் றிருவிடை யிலங்கொளி
யரத்த வாடை விரித்து மீதுறீஇ
யிரங்குமணி மேகலை யொருங்குடன் சாத்திய
மருங்கிற் றாகு மொருபாற் றிருவிடை
செங்க ணரவும் பைங்க ணாமையுங்
கேழற் கோடும் வீழ்திர ளக்கு
நுடங்கு நூலு மிடங்கொண்டு புனைந்து
தவளநீ றணிந்ததோர் பவளவெற் பென்ன
வொளியுடன் றிகழு மொருபா லாகம்
வாரும் வடமு மேர்பெறப் புனைந்து
செஞ்சாந் தணிந்து குங்கும மெழுதிப்
பொற்றா மரையின் முற்றா முகிழென
வுலகே ழீன்று நிலையிற் றளரா
முலையுடன் பொலியு மொருபா லாக
மயில்வா யரவம் வயின்வயி னணிந்து
மூவிலை வேலும் பூவாய் மழுவுந்
தமருகப் பறையு [1] மமர் தரத் தாங்கிச்
சிறந்துள தொருபாற் றிருக்கரஞ் செறிந்த
சூடகம் விளங்கிய வாடகக் கழங்குட
னொம்மென் பந்து மம்மென் கிள்ளையுந்
தரித்தே திகழு மொருபாற் றிருக்கர
மிரவியு மெரியும் விரவிய வெம்மையி
னொருபால் விளங்குந் திருநெடு நாட்ட
நவ்வி மானின் செவ்வித் தாகிப்
பாலிற் கிடந்த நீலம் போன்று
குண்டுநீர்க் குவளையிற் குளிர்ந்து நிறம்பயின்
றெம்மனோர்க் கடுத்த [2]மம்மர்க் கிரங்கி
யுலகேழ் புரக்கு மொருபா னாட்ட
நொச்சிப் பூவும் பச்சை மத்தமுங்
கொன்றைப் போது மென்றுணர்த் தும்பையுங்
கங்கையாறும் பைங்கட் டலையு
மரவு மதியமும் விரவித் [3] தொடுத்துச்
சூட மாலை சூடிப்f பீடுகெழு
நெருப்பிற் றிரித்தனைய வுருக்கிளர் சடில்மொடு
நான்முகங் சுரந்த பானிற வன்னங்
காணா வண்ணங் கருத்தையுங் கடந்து
சேணிகந் துளதே யொருபாற் றிருமுடி
பேணிய
கடவுட் கற்பின் மடவரன் மகளிற்
கற்பக வனத்துப் பொற்பூ வாங்கிக்
கைவைத்துப் புனைந்த தெய்வ மாலை
நீலக் குழன்மிசை வளைஇ மேனிவந்து
வண்டுந் தேனுங் கிண்டுபு திளைப்பத்
திருவுடன் பொலியு மொருபாற் றிருமுடி
யினைய வண்ணத்து நினைவருங் காட்சி
யிருவயி னுருவு மொருவயிற் றாகி
வலப்பா னாட்ட மிடப்பா னோக்க
வாணுதல் பாக நாணுதல் செய்ய
வலப்பாற் றிருக்கர மிடப்பால் வனமுலை
தைவந்து வருட மெய்ம்மயிர் பொத்தாங்
குலக மேழும் பன்முறை யீன்று
மருதிடங் கொண்ட வொருதனிக் கடவுணின்
றிருவடி பரவுதும் யாமே நெடுநா
ளிறந்தும் பிறந்து மிளைத்தன மறந்துஞ்
சிறைக் கருப் பாசயஞ் சேரா
மறித்தும் புகாஅ வாழ்வுபெறற் பொருட்டே.
-----
[1] இனையனதாங்கி எனவும் பாடம்.
[2] வெம்மைநோய்க்கிரங்கி எனவும் பாடம்.
[3] தொடுத்த என்றும் பாடம்.
1
நேரிசைவெண்பா
பொருளுங் குலனும் புகழுந் திறனு
மருளு மறிவு மனைத்து - மொருவர்
கருதாவென் பார்க்குங் கறைமிடற்றாய் தொல்லை
மருதாவென் பார்க்கு வரும்.
2
கட்டளைக்கலித்துறை
வருந்தே னிறந்தும் பிறந்து மயக்கும் புலன்வழிபோய்ப்
பொருந்தே னாகிற் புகுகின்றிலேன் புகழ் மாமருதிற்
பெருந்தேன் முகந்துகொண் டுண்டு பிறிதொன்றி லாசையின்றி
யிருந்தே னினிச்சென் றிரவே னொருவரை யாதொன்றுமே.
3
நேரிசையாசிரியப்பா
ஒன்றினோ டொன்று சென்றுமுகி றடவி
யாடுகொடி நுடங்கும் பீடுகெழு மாளிகை
தெய்வக் கம்மியர் கைம்முயன்று வகுத்த
வோவநூற் செம்மைப் பூவியல் வீதி
குயிலென மொழியு மயிலியற் சாயன்
மான்மாற விழிக்கு மானார் செல்வத்
திடைமரு திடங்கொண் டிருந்த வெந்தை
சுடர்மழு வலங்கொண் டிருந்த தோன்றா
லாரணந் தொடராப் பூரண புராண
நாரண னறியாக் காரணக் கடவுள்
சோதிச் சுடரொளீ யாதித் தனிப்பொரு
ளேக நாயக யோக நாயக
யானொன் றுணர்த்துவ துளதே யான்முன்
னனந்தலை யுலகத் தனந்த யோனியிற்
பிறந்துழிப் பிறவாது கறங்கெனச் சுழன்றுழீஇத்
தோற்றும் பொழுதி னீற்றூத் துன்பத்
தியாயுறு துயரமு மியானுறு துயரமு
மிறக்கும் பொழுதி னறப்பெறுந் துன்பமு
நீயல தறிகுநர் யாரே யதனால்
யானினிப் பிறத்த லாற்றே னஃதான்
றுற்பவந் துடைத்த னிற்பிடித் தல்லது
பிறிதொரு நெறியி னில்லையந் நெறிக்கு
வேண்டலும் வெறுத்தலு மாண்டொன்றிற் படரா
வுள்ளமொன் றுடைமை வேண்டு மஃதன்றி
யைம்புல னேவ லாணைவழி நின்று
தானல தொன்றைத் தானென நினையு
மிதுவென துள்ள மாதலி னிதுகொடு
நின்னை நினைப்ப தெங்ஙன முன்னங்
கற்புணை யாகக் கடனீர் நீந்தின
ரெற்பிற ருளரோ விறைவ கற்பங்
கடத்தல் யான்பெறவும் வேண்டுங் கடத்தற்கு
நினைத்தல் யான்பெறவும் வேண்டு் நினைத்தற்கு
நெஞ்சுநெறி நிற்கவும் வேண்டு நஞ்சுபொதி
யுறை யெயிற் றுரகம் பூண்ட
கறைகெழு மிடற்றெங் கண்ணுத லோயே.
4
நேரிசைவெண்பா
கண்ணென்று நந்தமக்கோர் காப்பென்றுங் கற்றிருக்கு
மெண்ணென்று மூல வெழுத்தென்று - மொண்ணை
மருதவப்பா வென்றுமுனை வாழ்த்தாரேன் மற்றுங்
கருதவப்பா லுண்டோ கதி.
5
கட்டளைக்கலித்துறை
கதியாவது பிறி தியாதொன்று மில்லை களேபரத்தின்
பொதியாவது சுமந்தால் விழப் போமிது போனபின்னர்
விதியா மெனச்சிலர் நோவதல்லா லிதை வேண்டுநர்யார்
மதியாவது மருதன் கழலே சென்று வாழ்த்துவதே.
6
இணைக்குறளாசிரியப்பா
வாழ்ந்தன மென்று தாழ்ந்தவர்க் குதவாது
தன்னுயிர்க் கிரங்கி மன்னுயிர்க் கிரங்கா
துண்டிப் பொருட்டாற் கண்டன வெஃகி
யவியடு நர்க்குச் சுவைபல பகர்ந்தே
யாரே வுண்டி யயின்றன ராகித்
தூராக் குழியைத் தூர்த்துப் பாரா
விழுப்பமுங் குலனு மொழுக்கமுங் கல்வியுந்
தன்னிற் சிறந்த நன்மூ தாளாரைக்
கூஉய்முன் னின்றுதன் னேவல் கேட்குஞ்
சிறாஅர்த் தொகுதியி னுறாஅப் பேசியும்
பொய்யோடு புன்மைதன் புல்லர்க்குப் புகன்று
மெய்யு மானமு மேன்மையு மொரீஇத்
தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்த
நன்மனைக் கிழத்தி யாகிய வந்நிலைச்
[4] சாவுழிச் சாஅந் தகைய ளாயினு
மேவுழி மேவல் செல்லாது காவலொடு
கொண்டோ ளொருத்தி யுண்டி வேட்டிருப்ப
வெள்ளுக் கெண்ணை போலத் தள்ளாது
பொருளி னளவைக்குப் [5] போகம்விற் றுண்ணு
மருளின் மடந்தைய ராகந் தோய்ந்து
மாற்றல் செல்லாது வேற்றோர் மனைவயிற்
கற்புடை மடந்தையர் பொற்பு நனிகேட்டுப்
பிழைவழி பாராது நுழைவழி நோக்கியு
நச்சி வந்த நல்கூர் மாந்தர்தம்
விச்சையிற் படைத்த வெவ்வேறு காட்சியி
னகமலர்ந் தீவார் போல முகமலர்ந்
தினிது மொழிந்தாங் குதவுத லின்றி
நாளு நாளு [6] நாள்பல கழித்தவர்
தாளி னாற்றலுந் தவிர்த்துக் கேளிகழ்ந்
திகமும் பரமு மில்லை யென்று
பயமின் றொழுகிப் பட்டிமை பயிற்றி
மின்னி னனையதன் செல்வத்தை விரும்பித்
தன்னையு மொருவ ராக வுன்னு
மேனையோர் வாழ்வும் வாழ்க்கையு நனைமலர்ந்
தியோசனை கமழு முற்பல வாவியிற்
பாசடைப் பரப்பிற் பானிற வன்னம்
பார்ப்புடன் வெருவப் பகுவாய் வாளைகள்
போர்த்தொழில் புரியும் பொருகா விரியு
மருதமுஞ் சூழ்ந்த மருத வாண
சுருதியுந் தொடராச் சுருதி நாயக
பத்தருக் கெய்ப்பில் வைப்பென வுதவு
முத்தித் தாள மூவா முதல்வநின்
றிருவடி பிடித்து வெருவரல் விட்டு
மக்களு மனைவியு மொக்கலுந் திருவும்
பொருளென நினையா துன்னருளினை நினைந்
திந்திரச் செல்வமு மெட்டுச் சித்தியும்
வந்துழி வந்துழி மறுத்தன ரொதுங்கிச்
சின்னச் சீரை துன்னற் கோவண
மறுதற் கீளொடு பெறுவது புனைந்து
[7] சிதவ லோடொன் றுதவுழி யெடுத்தாங்
கிடுவோ ருளரெனி னிலையினின் றயின்று
படுதரைப் பாயலிற் பள்ளி மேவி
யோவாத் தகவெனு மரிவையைத் தழீஇ
மகவெனப் பல்லுயி ரனைத்தையு மொக்கப்
பார்க்குநின்
செல்வக் கடவுட் டொண்டர் வாழ்வும்
பற்றிப் பார்க்கி னுற்ற நாயேற்குக்
குளப்படி நீரு மளப்பருந் தன்மைப்
பிரளயச் சலதியு [8] மிருவகைப் பொருளு
மொப்பினு மொவ்வாத் துப்பிற் றாதலி
னின்சீ ரடியார் தஞ்சீ ரடியார்க்
கடிமை பூண்டு நெடுநாட் பழகி
முடலை யாக்கையொடு புடைபட் டொழுகியவர்
காற்றலை யேவ லென்னாய்த்தலை யேற்றுக்
கண்டது காணி னல்ல தொன்
றுண்டோ மற்றெனக் குள்ளது பிறிதே. ----
[5] போகம்விற் றெழுகு மென்றும் பாடம். [6] நாள்பல குறித்தவர் என்றும் பாடம்.
[7] சிதவல் - பழுதுபட்ட
[8] மிருவயிற்பேதமும் எனவும் பாடம்.
7
நேரிசைவெண்பா
பிறிந்தே னரகம் பிறவாத வண்ண
மறிந்தே னனங்கவே ளம்பிற் - செறிந்த
பொருதவட்ட விற்பிழைத்துப் போந்தேன் புராணன்
மருதவட்டந் தன்னுளே வந்து.
8
கட்டளைக்கலித்துறை
வந்திக்கண்டா யடியாரைக் கண்டான் மறவாது நெஞ்சே
சிந்திக்கண்டா யரன் செம்பொற் [9] கழற்றிரு மாமருதைச்
சந்திக்கண்டா யில்லையாயி னமன்றமர் தாங் கொடுபோ
யுந்திக்கண்டாய் நிரையத் துன்னை வீழ்த்தி யுழக்குவரே.
9
இணைக்குறளாசிரியப்பா
உழப்பின் வாரா வுறுதிக ளுளவோ
கழப்பின் வாராக் கையற வுளவோ
அதனால்
நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை
வேரற வகழ்ந்து போக்கித் தூர்வைசெய்
தன்பென் பாத்தி கோலி முன்புற
மெய்யெனு மெருவை விரிந்தாங் கையமில்
பத்தித் தனிவித் திட்டு நித்தலு
மார்வத் தெண்ணீர் பாய்ச்சி நேர்நின்று
தடுக்குநர்க் கடங்கா திடுக்கண் செய்யும்
பட்டி யஞ்சினுக் கஞ்சி யுட்சென்று
சாந்த வேலி கோலி வாய்ந்தபின்
ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக்
கருணை யிளந்தளிர் காட்ட வருகாக்
காமக் குரோதக் களையறக் களைந்து
சேமப் படுத்துழிச் செம்மையி னோங்கி
மெய்ம்மயிர் புளக முகிழ்த்திட் தம்மெனக்
கண்ணீ ரரும்பிக் கடிமலர் மலர்ந்து
புண்ணிய
வஞ்செழுத் தருங்காய் தோன்றி நஞ்சுபொதி
காள கண்டமுங் கண்ணொரு மூன்றுந்`
[10] தோ ளிருநான்குஞ் சுடர்முக மைந்தும்
பவளநிறம் பெற்றுத் தவளநீறு பூசி
யறுசுவை யதனினு முறுசுவை யுடைத்தாய்க்
காணினுங் கேட்பினுங் கருதினுங் களிதருஞ்
சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி
பையப் பையப் பழுத்துக் கைவர
வெம் மனோர்க ளினிதினி தருந்திச்
செம்மாந் திருப்பச் சிலரிதின் வராது
மனமெனும் புனத்தை வறும் பாழாக்கிக்
காமக் காடு மூடித் தீமைசெய்
யைம்புல வேட ராறலைத் தொழுக
வின்பப் பேய்த்தே ரெட்டா தோடக்
கல்லா வுணர்வெனும் புல்வா யலமா
விச்சைவித் துதிர்த்துழி யானெனப் பெயரிய
நச்சு மாமர நனிமிக முளைத்துப்
பொய்யென் கவடுகள் போக்கிச் செய்யும்
பாவப் பஃறழை பரப்பிப் பூவெனக்
கொடுமை யரும்பிக் கடுமை மலர்ந்து
துன்பப் பல்காய் தூக்கிப் பின்பு
மரணம் பழுத்து நாகிடை வீழ்ந்து
தமக்கும் பிறர்க்கு முதவா
திமைப்பிற் கழியு மியற்கையோ ருடைத்தே.
---
[9] கழறிரு என்றும் பாடம்.
[10] தோளொருநான்கு மென்றும் பாடம்.
10
நேரிசைவெண்பா
உடைமணியி லோசைக் கொதுங்கி யரவம்
படமொடுங்கப் பையவே சென்றங் - கிடைமருத
ரையம் புகுவ தணியிழையார்மே லனங்கன்
கையம்புக வேண்டிக் காண்.
11
கட்டளைக்கலித்துறை
காணீர் கதியொன்றுங் கல்லீ ரெழுத்தஞ்சும் வல்லவண்ணம்
பேணீர் திருப்பணி பேசீ ரவன்புக ழாசைப்பட்டுப்
பூணீ ருருத்திர சாதன நீறெங்கும் பூசுகிலீர்
வீணீ ரெளிதோ மருதப் பிரான்கழன் மேவுதற்கே.
12
இணைக்குறளாசிரியப்பா
மேவிய புன்மயிர்த் தொகையோ வம்மயிர்
பாவிய தோலின் பரப்போ தோலிடைப்
புகவிட்டுப் பொதிந்த புண்ணோ புண்ணிடை
யூறு முதிரப் புனலோ கூறுசெய்
திடையிடை நிற்கு மெலும்போ வெலும்பிடை
முடைகெழு மூளை விழுதோ வழுவழுத்
துள்ளிடை யொழுகும் வழும்போ மெள்ளநின்
றூரும் புழுவு னொழுங்கோ நீரிடை
வைத்த மலத்தின் குவையோ வைத்துக்
கட்டிய நரம்பின் கயிறோ வுடம்பிற்குட்
பிரியா தொறுக்கும் பிணியோ [11] தெரிதரல்
இன்ன தியானென் றறியே னென்னை
யேதினுந் தேடினன் யாதினுங் காணேன்
முன்னம்
வரைத்தனி வில்லாற் புரத்தை யழலூட்டிக்
கண்படை யாகக் காமனை யொருநா
ணுண்பொடி யாக நோக்கி யண்டத்து
வீயா வமரர் வீயவந் தெழுந்த
தீவாய் நஞ்சைத் திருவமு தாக்கி
யிருவர் தேடி வெருவா நிமிர்ந்து
பாலனுக் காகக் காலனைக் காய்ந்து
சந்தன [12] சரள சண்பக வகுள
நந்தன வனத்திடை ஞாயிறு வழங்காது
நவமணி முகிழ்த்த புதுவெயி லெறிப்ப
வெண்ணருங் கோடி யிருடி கணங் கட்குப்
புண்ணியம் புரக்கும் பொன்னி சூழ்ந்த
திருவிடை மருத பொருவிடைப் பாக
மங்கை பங்க கங்கைநாயக நின்
றெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்
மாயப் படலங் கீறித் தூய
ஞான நாட்டம் பெற்றனன் பெற்றபின்
னின்பெருந் தன்மையுங் கண்டேன் காண்டலு
மென்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டே
னின்னிலை யனைத்தினுங் கண்டே னென்னை
நின்னைக் காணா மாந்தர்
தன்னையுங் காணாத் தன்மை யோரே.
---
[11] தெரியாதின்ன என்றும் பாடம்.
[12] சரளம் என்றது ஒழுங்கு ஓர்மரமென்பாருமுளர்.
13
நேரிசைவெண்பா
ஓராதே யஞ்செழுத்து முன்னாதே பச்சிலையு
நேராதே நீரு நிரப்பாதே - யாராயோ
வெண்ணுவா ருள்ளத் திடைமருதர் பொற்பாத
நண்ணுவா மென்னு மதுநாம்.
14
கட்டளைக்கலித்துறை
நாமே யிடையுள்ள வாறறிவாமினி நாங்கள் சொல்ல
லாமே மருதன் மருதவனத் தன்ன மன்னவரைப்
பூமேலணிந்து பிழைக்கச்செய் தாரொரு பொட்டு மிட்டார்
தாமே தளர்பவரைப் பாரமேற்றுத றக்க தன்றே.
15
நேரிசையாசிரியப்பா
அன்றினர் புரங்க ளழலிடை யவியக்
குன்றுவளைத் தெய்த குன்றாக் கொற்றவ
நுண்பொடி யணிந்த வெண்டோட் செல்வ
கயிலைநடந் தனைய வுயர்நிலை நோன்றாட்
பிறைசெறித் தன்ன விருகோட் டொருதிமிற்
பானிறச் செங்கண் மாலவிடைப் பாக
[13] சிமயச் செங்கோட் டிமயச் செல்வன்
மணியெனப் பெற்ற வணியிய லன்னம்
வெள்ளைச் சிறுநகைக் கிள்ளைப் பிள்ளை
குயிலெனப் பேசு மயிலிளம் பேடை
கதிரொளி நீலங் கமலத்து மலர்ந்தன
மதரரி நெடுங்கண் மானின் கன்று
[14] வருமுலை தாங்குந் திருமார்பு வல்லி
வைய மேழும் பன்முறை யீன்ற
வைய திருவயிற் றம்மை பிராட்டி
மறப்பருஞ் செய்கை யறப்பெருஞ் செல்வி
யெமையா ளுடைய வுமையா ணங்கை
கடவுட் கற்பின் மடவால் கொழுந
பவள மால்வரைப் பனைக்கைபோந் தனைய
தழைசெவி யெண்டோட் டலைவன் றந்தை
பூவலர் குடுமிச் சேவலம் பதாகை
மலைதுளை படுத்த கொலைகெழு கூர்வே
லமரர்த் தாங்குங் குமரன் றாதை
பொருதிடங் கொண்ட மருத வாண
நின்னது குற்ற முளதோ நின்னினைந்
தெண்ணருங் கோடி யிடர்ப்பகை களைந்து
கண்ணுறு சீற்றத்துக் காலனை வதையா
விறப்பையும் பிறப்பையு மிகழ்ந்து சிறப்பொடு
தேவ ராவின் கன்றெனத் திரியாப்
பாவிக டமதே பாவம் யாதெனின்
முறியாப் புழுக்கன் முப்பழங் கலந்த
வறுசுவை யடிசி லட்டினி திருப்பப்
புசியா தொருவன் பசியால் வருந்துத
லயினியின் குற்ற மன்று வெயிலின்வைத்
தாற்றிய தெண்ணீர் நாற்றமிட் டிருப்ப
மடாஅ வொருவன் விடாஅ வேட்கை
தெண்ணீர்க் குற்ற மன்று கண்ணகன்று
தேன்றுளி சிதறிப் பூந்துணர் துறுமி
வாலுகங் கிடந்த சோலை கிடப்ப
வெள்ளிடை வெயிலிற் புள்ளிவெயர் பொடிப்ப
வடி பெயர்த் திடுவா னொருவ
னெடிது வருந்துத னிழற்றீங் கன்றே.
---
[13] சிமையச்செங்கோட்டிமையச்செல்வன் - என்றும் பாடம்.
[14] வரிமுலை-என்றும் பாடம்.
16
நேரிசைவெண்பா
அன்றென்று மாமென்று மாறு சமயங்க
ளொன்றொன்றோ டொவ்வா துரைத்தாலு - மென்று
மொருதனையே நோக்குவா ருள்ளத் திருக்கு
மருதனையே நோக்கி வரும்.
17
கட்டளைக்கலித்துறை
நோக்கிற்றுக் காம னுடல் பொடியாக நுதிவிரலாற்
றாக்கிற் றரக்கன் றலைகீழ்ப் படத்தன் சுடர்வடிவா
ளோக்கிற்றுத் தக்கன் றலையுருண் டோடச் சலந்தரனைப்
போக்கிற் றுயிர் பொன்னிசூழ் மருதாளுடைப் புண்ணியமே.
18
நேரிசையாசிரியப்பா
புண்ணிய புராதன புதுப்பூங் கொன்றைக்
கண்ணி வேய்ந்த கைலை நாயக
காள கண்ட கந்தனைப் பயந்த
வாளரி நெடுங்கண் மலையாள் கொழுந
பூத நாத பொருவிடைப் பாக
வேத கீத விண்ணோர் தலைவ
முத்தி நாயக மூவா முதல்வ
பத்தி யாகிப் பணைத்தமெய் யன்பொடு
நொச்சி யாயினுங் கரந்தை யாயினும்
பச்சிலை யிட்டுப் பரவுந் தொண்டர்
கருவிடைப் புகாமற் காத்தருள் புரியுந்
திருவிடை மருத திரி புராந்தக
மலர்தலை யுலகத்துப் பலபல மாக்கண்
மக்களை மனைவியை யொக்கலை யொரீஇ
மனையும் பிறவுந் துறந்து நினைவருங்
காடு மலையும் புக்குக் கோடையிற்
கைம்மே னிமிர்த்துக் காலொன்று முடக்கி
யைவகை நெருப்பி னழுவத்து நின்று
மாரி நாளிலும் வார்பனி நாளிலு
நீரிடை மூழ்கி நெடிது கிடந்துஞ்
சடையைப் புனைந்துந் தலையைப் பறித்து
முடையைத் துறந்து முண்ணா துழன்றுங்
காயுங் கிழங்குங் காற்றுதிர் சருகும்
வாயுவு நீரும் வந்தன வருந்தியுங்
களரிலுங் கல்லிலுங் கண்படை கொண்டுந்
தளர்வுறு மியாக்கையைத் தளர்வித் தாங்கவ
ரம்மை முத்தி யடைவதற் காகத்
தம்மைத் தாமே சாலவு மொறுப்ப
ரீங்கிளை செய்யா தியாங்க ளெல்லாம்
பழுதின் றுயர்ந்த வெழுநிலை மாடத்துஞ்
செந்தா துதிர்ந்த நந்தா வனத்துந்
தென்ற லியங்கு முன்றி லகத்துந்
தாண்டாச் சித்திர மண்டப மருங்கிலும்
பூவிரி தாங்க வாவிக் கரையிலு
மயிற் பெடையாலக் குயிற்றிய குன்றிலும்
வேண்டுழி வேண்டுழி யாண்டாண் டிட்ட
மருப்பி னியன்ற வாளரி சுமந்த
விருப்புறு கட்டின் மீமிசைப் படுத்த
வைவகை யமளி யணைமேற் பொங்கத்
தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப்
பட்டினுட் பெய்த பதநுண் பஞ்சி
னெட்டணை யருகாக் கொட்டைகள் பரப்பிப்
[15] பாயன் மீது பரிபுர மிழற்றச்
சாயலன் னத்தின் றளர்நடை பயிற்றிப்
பொற்றோ ரணத்தைச் சுற்றிய துகிலென
வம்மென் குறங்கி னொம்மென் கலிங்கங்
கண்ணு மனமுங் கவற்றிப் பண்வர
[16] விரங்குமணி மேகலை யொருங்குடன் கிடந்த
வாடர வல்கு லரும்பெற னுசுப்பு
வாட வீங்கிய வனமுலை கதிப்ப
வணியியல் கமுகை யலங்கரித் ததுபோன்
மணியிய லாரங் கதிர்விரித் தொளிர்தர
மணிவளை தாங்கு மணிகெழு மென்றோள்
வரித்த சாந்தின் மிசைவிரித் திட்ட
வுத்தரி யப்பட் டொருபா லொளிதர
வள்ளை வாட்டிய வொள்ளிரு காதொடு
பவளத் தருகாத் தரள நிரைத்தாங்
கொழுகி நீண்ட குமிழொன்று பதித்துக்
காலன் வேலுங் காம பாணமு
மால காலமு மனைத்துமிட் டமைத்த
விரண்டு நாட்டமும் புரண்டுகடை மிளிர்த
மதியென மாசறு வதனம் விளங்கப்
புதுவிரை யலங்கல் குழன்மிசைப் பொலிய
மஞ்சொன் மடந்தைய ராகந் தோய்ந்துஞ்
சின்னம் பரப்பிய பொன்னின் கலத்து
மறுசுவை யடிசில் வறிதிருந் தருந்தா
தாடினர்க் கென்றும் பாடினர்க் கென்றும்
வாடினர்க் கென்றும் வரையாது கொடுத்தும்
பூசுவன பூசியும் புனைவன புனைந்துந்
தூசி னல்லன தொடையிற் சேர்த்தியு
மைந்து புலன்களு மார வார்ந்து
மைந்தரு மொக்கலு மனமகிழ்ந் தோங்கி
யிவ்வகை யிருந்தோ மாயினு மவ்வகை
மந்திரவெழுத் தைந்தும் வாயிடை மறவாது
சிந்தை நின்வழி செலுத்தலி னந்த
முத்தியு மிழந்தில முதல்வ வத்திற
நின்னது பெருமை யன்றோ வென்னின்
வல்லா னொருவன் கைம்முயன் றெறியினு
மாட்டா வொருவன் வாளா வெறியினு
நிலத்தின் வழாஅக் கல்லே போ
னலத்தின் வழார் நின் னாமநவின்றோரே
---
[15] பாயன்மீமிசைப் பரிபுரமிழற்ற என்றும் பாடம்.
[16] விரங்குமணி மேகலை மருங்கிற்கிடப்ப என்றும் பாடம்.
19
நேரிசைவெண்பா
நாமநவிற்றாய் மனனே நாரியர்க டோடோய்ந்து
காம நவிற்றிக் கழிந்தொழிய - லாமோ
பொருதவனத் தானையுரி போர்த்தருளு மெங்கண்
மருத வனத்தானை வளைந்து.
20
கட்டளைக்கலித்துறை
வளையார் பசியின் வருந்தார் பிணியின் மதனனம்புக்
கிளையார் தனங்கண் டிரங்கி நில்லா ரிப்பிறப்பினில்வந்
தளையார் நரகினுக் கென்கடவார் பொன்னலர்ந்த கொன்றைத்
தளையா னிடைமருதன் னடியா ரடி சார்ந்தவரே.
21
நேரிசையாசிரியப்பா
அடிசார்ந் தவர்க்கு முடியா வின்ப
நிறையக் கொடுப்பினுங் குறையாச் செல்வ
மூலமு நடுவு முடிவு மின்றிக்
கால மூன்றுங் கடந்த கடவு
ளுளக்கணுக் கல்லா தூன் கணுக்கொளித்துத்
துளக்கற நிமிர்ந்த [17] சோதிச் சுடரொளி
யெறுப்புத் துளையி னிருசெவிக் கெட்டா
துறுப்பினின் றெழுதரு முள்ளத் தோசை
வைத்த நாவின் வழிமறித் தகத்தே
தித்தித் தூறுந் தெய்வத் தேற
றுண்டத் துளையிற் பண்டைவழி யன்றி
யறிவி னாறு நறிய நாற்ற
மேனைய தன்மையு மெய்தா தெவற்றையுந்
தானே யாகி நின்ற [18] தற்பர
தோற்றுவ தெல்லாந் தன்னிடைத் தோற்றித்
தோற்றம் பிறிதிற் றோற்றாச் சுடர்முளை
விரிசடை மீமிசை வெண்மதி கிடப்பினு
மிருள்விரி கண்டத் தேக நாயக
சுருதியு மிருவருந் தொடர்ந்து நின்றலமர
மருதிடங் கொண்ட மருத மாணிக்க
வுமையாள் கொழுந வொருமூன் றாகிய
விமையா நாட்டத் தென்றனி நாயக
வடியே னுறுகுறை முனியாது கேண்மதி
நின்னடி பணியாக் கன்மனக் கயவரொடு
நெடுநாட் பழகிய கொடுவினை யீர்ப்பக்
கருப்பா சயமெனு மிருட்சிறை யறையிற்
குடரென் சங்கிலி பூண்டு தொடர்ப்பட்டுக்
கூட்டுச் சிறைப்புழுவி னீட்டுமலத் தழுந்தி
யுடனே வருந்தி நெடுநாட் கிடந்து
பல்பிணிப் பெயற்பெற் றல்லற் படுத்துந்
தண்டனாளர் மிண்டி வந் தலைப்ப
வுதரநெருப்பிற் பதை பதை பதைத்தும்
வாதமத் திகையின் மோத மொத்துண்டுங்
கிடத்த னிற்ற னடத்தல் செல்லா
திடங்குறை வாயிலின் முடங்கி யிருந்துழிப்
பாவப் பகுதியி லிட்டுக் காவற்
கொடியோ ரைவரை யேவி நெடிய
வாசைத் தளையி லென்னையு முடலையும்
பாசப் படுத்திப் பையென விட்டபின்
யானும் போந்து தீதினுக் குழன்றும்
பெரியோர்ப் பிழைத்தும் பிறர்பொருள் வௌவியும்
[19] பரியா தொழிந்தும் பல்லுயிர் செகுத்தும்
வேற்றோர் மனைவியர் தோற்றம் புகழ்ந்தும்
பொய்பல கூறியும் புல்லினம் புல்லியு
மைவருங் கடுப்ப வவாவது கூட்டி
யீண்டின கொண்டு மீண்டு வந்துழி
யிட்டுழி யிடாது பட்டுழிப் படாஅ
திந்நா ளிடுக்க ணெய்திப் பன்னாள்
வாடுபு கிடப்பேன் வீடு நெறிகாணே
னின்னை யடைந்த வடியா ரடியார்க்
கென்னையு மடிமை யாகக் கொண்டே
யிட்ட பச்சிலைகொண் டொட்டி யறிவித்
திச்சிறை பிழைப்பித் தினிச்சிறை புகாமற்
காத்தருள் செய்ய வேண்டுந்
தீத்திரண் டன்ன செஞ்சடை யோனே.
---
[17] சோதிதனிச்சுடர் என்றும் பாடம்.
[18] தத்துவ என்றும் பாடம்.
[19] பசியாலுழன்றும் என்றும் பாடம்.
22
நேரிசைவெண்பா
சடைமே லொருத்தி சமைந்திருப்ப மேனிப்
புடைமே லொருத்தி பொலிய - [20] விடையேபோய்
சங்கே கலையே மருதற்குத் தான்கொடுப்ப
தெங்கே யிருக்க விவிவள்.
----
[20] இடைப்புகு என்றும் பாடம்.
23
கட்டளைக்கலித்துறை
இருக்கு மருதினுக் குள் ளிமையோர்களு நான்மறையு
நெருக்கு நெருக்கத்து [21] நீளகத்திற் சென்று மீளவொட்டாத்
திருக்குமறுத் தைவர் தீமையுந் தீர்த்துச் செவ்வேமனத்தை
யொருக்கு மொருக்கத்தி னுள்ளே முளைக்கின்ற வொண்சுடரே.
----
[21] நீளகத்துச்சென்று என்றும் பாடம்.
24
நேரிசையாசிரியப்பா
சுடர்விடு [22] சூல மேந்தினை யென்றும்
விடையுகந் தேறிய விமல வென்று
முண்ணா நஞ்ச முண்டனை யென்றுங்
கண்ணாற் காமனைக் காய்ந்தனை யென்றுந்
திரிபுர மெரித்த சேவக வென்றுங்
கரியுரி போர்த்த கடவு ளென்று
முரகம் பூண்ட வுரவோ யென்றுஞ்
சிரகஞ் செந்தழ லேந்தினை யென்றும்
வலந்தரு காலனை வதைத்தனை யென்றுஞ்
சலந்தர னுடலந் தடிந்தனை யென்றும்
வியந்தவா ளரக்கனை மிதித்தனை யென்றும்
தக்கன் வேள்வி தகர்த்தனை யென்று
முக்கிரப் புலியுரி யுடுத்தனை யென்று
மேனமு மன்னமு மெட்டா தலமர
வானங் கீழ்ப்பட வளர்ந்தனை யென்றுஞ்
செழுநீர் ஞாலஞ் செகுத்துயி ருண்ணு
மழல்விழிக் குறளை யமுக்கினை யென்று
மினையன லினையன வெண்ணில் கோடி
நினைவருங் கீர்த்தி நின்வயிற் புகழ்த
றுளக்குறு சிந்தையேன் சொல்லள வாதலி
னளப்பரும் பெருமைநின் னளவல தாயினு
[23]மொன்றி னேயாப் புன்மொழி கொண்டு
நின்னை நோக்குவ னாதலி னென்னை
யிடுக்கண் களையா வல்லற் படுத்தா
தெழுநிலை மாடத்துச் செழுமுகி லுறங்க
வடித்துத் தட்டி யெழுப்புவ போல
நுண்டுகிற் பதாகை கொண்டுகொண் டுகைப்பத்
துயிலி னீங்கிப் பயிலும் வீதித்
திருமரு தமர்ந்த தெய்வச் செழுஞ்சுட
ரருள்சுரந் தளிக்கு மற்புதக் கூத்த
கல்லா னெறிந்த பொல்லாப் புத்த
னின் னினைந் தெறிந்த வதனா
லன்னவன் றனக்கு மருள்பிழைத் தின்றே
---
[22] சூலப் படையனே யென்று பாடம்.
[23] என்றன்வாயிற் புன்மொழி என்றும் பாடம்.
25
நேரிசைவெண்பா
இன்றிருந்து நாளை யிறக்குந் தொழிலுடைய
புன்றலைய மாக்கள் புகழ்வரோ - வென்றிமழு
வாளுடையான் றெய்வ மருதுடையா னாயேனை
யாளுடையான் செம்பொ னடி.
26
கட்டளைக்கலித்துறை
அடியாயிரந் தொழிலாயிர வாயிர மாயிரம் [24]பேர்
முடியாயிரங் கண்கண் மூவாயிர முற்று நீறணிந்த
தொடியாயிரங் கொண்ட தோளிரண்டாயிர மென்று நெஞ்சே
படியா யிராப்பகற் றென்மரு தாளியைப் பற்றிக்கொண்டே.
--
[24] பேர் என்றது பெயரென்றும் பாடம்.
27
இணைக்குறளாசிரியப்பா
கொண்டலி னிருண்ட கண்டத் தெண்டோட்
செவ்வா னுருவிற் பையர வார்த்துச்
சிறுபிறை கிடந்த நெறிதரு புன்சடை
மூவா முதல்வ முக்கட் செல்வ
தேவ தேவ திருவிடை மருத
மாசறு சிறப்பின் வானவ ராடும்
பூசத்தீர்த்தம் புரக்கும் பொன்னி
யயிரா வணத்துறையாடு மப்ப
கைலாய வாண கௌரி நாயக
[25] நின்னை வணங்கிப் பொன்னடி புகழ்ந்து
பெரும்பதம் பிழையா வரம்பல பெற்றோ
ரிமையா நெடுங்க ணுமையா ணங்கையு
மழைக்கட் கடத்துப் புழைக்கைப் பிள்ளையு
மமரர்த் தாங்குங் குமர வேளுஞ்
சுரிசங் கேந்திய திருநெடு மாலும்
வரன்முறை படைத்த நான்முகத் தொருவனுந்
தாருகற் செற்ற வீரக் கன்னியும்
நாவின் கிழத்தியு பூவின் மடந்தையும்
பீடுயர் தோற்றத்துக் கோடி யுருத்திரரு
மானாப் பெருந்திறல் வானோர் தலைவனுஞ்
செயிர்தீர் நாற்கோட் டயிரா வதமும்
வாம்பரி யருக்கர் தாம்பன் னிருவருஞ்
சந்திர னொருவனுஞ் செந்தீக் கடவுளு
நிருதியுஞ் சமனுஞ் சுருதிக ணான்கும்
வருணனும் வாயுவு மிருநிதிக் கிழவனு
மெட்டு நரகமு மட்ட வசுக்களு
மூன்று கோடி யான்ற முனிவரும்
வசிட்டனுங் கபிலனு மகத்தியன் றானுந்
தும்புரு நாரத ரென்றிரு திறத்தரும்
வித்தகப் பாடன் முத்திறத் தடியருந்
திருந்திய வன்பிற் பெருந்துறைப் பிள்ளையு
மத்தகு செல்வத் தவமதித் தருளிய
சித்த மார்சிவ வாக்கிய தேவரும்
வெள்ளை நீறு மெய்யிற் கண்டு
கள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்து
மோடும் பன்னரி யூளைகேட் டரனைப்
பாடின வென்று படாம்பல வளித்துங்
குவளைப் புனலிற் றவளைய ரற்ற
வீசன் றன்னை யேத்தின வென்று
காசும் பொன்னுங் கலந்து தூவியும்
வழிபடு மொருவன் மஞ்சனத் தியற்றிய
செழுவிதை யெள்ளைத் தின்னக் கண்டு
பிடித்தலு மவனிப் பிறப்புக் கென்ன
விடித்துக் கொண்டவ னெச்சிலை நுகர்ந்து
மருத வட்டத் தொருதனிக் கிடந்த
தலையைக் கண்டு தலையுற வணங்கி
யும்மைப் போல வெம்மித் தலையுங்
கிடக்க வேண்டுமென் றடுத்தடுத் திரந்துங்
கோயின் முற்றத்து மீமிசைக் கிடப்ப
வாய்த்த தென்று நாய்க்கட்ட மெடுத்துங்
காம்பவிழ்த் துதிர்ந்த கனியுருக் கண்டு
வேம்புகட் கெல்லாம் விதான மமைத்தும்
விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று
புரிகுழற் றேவியைப் பரிவுடன் கொடுத்த
பெரிய வன்பின் வரகுண தேவரு
மினைய தன்மைய [26] ரெண்ணிறந் தோர்க
ளனைவரு நிற்க யானு மொருவன்
பத்தி யென்பதோர் பாடு மின்றிச்
சுத்த னாயினுந் தோன்றாக் கடையே
னின்னை
யிறைஞ்சில னாயினு மேத்தில னாயினும்
வருந்தில னாயினும் வாழ்த்தில னாயினுங்
கருதி யிருப்பன் கண்டாய் பெரும
நின்னுல கனைத்து நன்மை தீமை
யானவை நின்செய லாதலி
னானே யமையு நலமில் வழிக்கே.
---
[25] நின்னருள் சுரந்து பொன்னடி பணிந்து எனவும் பாடம்.
[26] எண்ணிறந் தோரே - யனையோர் நிற்க என்றும் பாடம்.
28
நேரிசைவெண்பா
வழிபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்து
பழிபிழைத்த பாவங்க ளெல்லாம் - பொழில்சூழ்
மருதிடத்தா னென்றொருகால் வாய்கூப்ப வேண்டா
கருதிடத்தா நில்லா கரந்து.
29
கட்டளைக்கலித் துறை
கரத்தினன் மாலவன் கண்கொண்டு நின்கழல் போற்றநல்ல
வரத்தினை யீயு மருதவப்பா மதியொன்று மில்லேன்
சிரத்திலுமா யென்றன் சிந்தையுளாகி வெண் காடனென்னு
தரத்திலு மாயது நின்னடியாந் தெய்வத் தாமரையே.
30
15. திருக்கழுமல மும்மணிக்கோவை
இணைக்குறளாசிரியப்பா
திருவளர்பவளப் பெருவரைமணந்த
மரகதவல்லி போலொருகூற்றின்
இமயச்செல்வி பிரியாதுவிளங்கப்
பாய்திரைப்பரவை மீமிசைமுகிழ்த்த
அலைகதிர்ப்பரிதி யாயிரந்தொகுத்த
வரன்முரைதிரியாது மலர்மிசையிருந்தெனக்
கதிர்விடுநின்முகங் காண்டொறுங் காண்டொறும்
முதிராவிளமுலை முற்றாக்கொழுந்தின்
திருமுகத்தாமரைச் செவ்வியின்மலரநின்
றையல்வாணுதற் றெய்வச்சிறுபிறை
இளநிலாக்காண்டொறு மொளியொடும்புணர்ந்தநின்
செவ்வாய்க்குமுதஞ் செவ்விசெய்யநின்
செங்கைக்கமல மங்கைவனமுலை
யமிர்தகலச மமைவினேந்த
மலைமகடனாது நயனக்குவளைநின்
பொலிவினோடுமலர
மறையோர்கழுமல நெறிநின்றுபொலிய
நாகர்நாடு மீமிசைமிதந்து
மீமிசையுலகங் கீழ்முதற்றா அழ்ந்
தொன்றாவந்த குன்றாவெள்ளத்
துலகமூன்றுக்குங் களைகணாகி
முதலில்கால மினிதுவீற்றிருந்துழித்
தாதையொடுவந்த வேதியச்சிறுவன்
தளர்நடைப்பருவத்து வளர்பசிவருத்த
அன்னாயோவென் றழைப்பமுன்னின்று
ஞான போனகத்தரு ளட்டிக்குழைத்த
ஆனாத்திரளை யவன்வயினருள
அந்தணன்முனிந்து தந்தார்யாரென
அவனைக்காட்டுவ னப்பவானார்
தோஒடுடைய செவியனென்றும்
பீஇடுடைய பெம்மானென்றும்
கையிற் சுட்டிக்காட்ட
ஐயநீவெளிப்பட் டருளினையாங்கே.
1
வெண்பா
அருளின் கடலடியே னன்பென்னு மாறு
பொருளின்றிரள்புகலி நாதன் - இருள்புகுதுங்
கண்டத்தானென்பாரைக் காதலித்துக்கைதொழுவார்க்
கண்டத்தார்தாமா ரதற்கு.
2
கட்டளைக்கலித்துறை
ஆரணநான்கிற்கு மப்பாலவனறி யத்துணிந்த
நாரணனான்முக னுக்கரியானடு வாய்நிறைந்த
பூரணனெந்தை புகலிப்பிரான் பொழிலத்தனைக்குங்
காரணனந்தக் கரணங்கடந்த கருப்பொருளே.
3
இணைக்குறளாசிரியப்பா
கருமுதற்றொடங்கிப் பெருநாளெல்லாம்
காமம்வெகுளி கழிபெரும்பொய்யெனும்
தூய்மையில்குப்பை தொலைவின்றிக்கிடந்ததை
அரிதினிகழ்ந்து போக்கிப்பொருதிறன்
மையிருணிறத்து மதமுடையடுசினத்
தைவகைக்கடாவும் யாப்பவிழ்த்தகற்றி
யன்புகொடுமெழுகி யருள்விளக்கேற்றித்
துன்பவிருளைத் துறந்துமுன்புற
மெய்யெனும்விதானம் விரித்துநொய்ய
கீழ்மையிற்றொடர்ந்து கிடந்தவென்சிந்தைப்
பாழறையுனக்குப் பள்ளியறையாக்கிச்
சிந்தைத்தாமரைச் செழுமலர்ப்பூந்தவி
செந்தைநீயிருக்க விட்டனனிந்த
நெடுநிலவளாகமு மடுகதிர்வானமும்
அடையப்பரந்த வாதிவெள்ளத்து
நுரையெனச்சிதறி யிருசுடர்மிதப்ப
வரைபறித்தியங்கு மாருதங் கடுப்ப
மாலும்பிரமனு முதலியவானவர்
காலமிதுவெனக் கலங்காநின்றுழி
மற்றவருய்யப் பற்றியபுணையாய்
மிகநனிமிதந்த புகலிநாயக
அருணனிசுரக்கும் பிரளயவிடங்கநின்
செல்வச்சிலம்பு மெல்லெனமிழற்ற
அமையாக்காட்சியிமயக்
கொழுந்தையுமுடனே கொண்டிங்
கெழுந்தருளத்தகு மெம்பெருமானே.
4
வெண்பா
மானுமழுவுந் திருமிடற்றில் வாழுமிரு
[1]டானும்பிறையுமே தாங்கிநிற்கும்-வானவர்க்கு
வெள்ளத்தேதோன்றிக் கழுமலத்தேவீற்றிருந்தென்
னுள்ளத்தேநின்ற வொளி.
[1] டானும்பிறையுந்தரித்திருக்கும் என்றும் பாடம்.
5
கட்டளைக்கலித்துறை
ஒளிவந்தவாபொய்மனத்திருணீங்கவென்னுள்ளவெள்ளம்
தெளிவந்தவாவந்துதித்தித்தவாசிந்தியாததொரு
களிவந்தவாவன்புகைவந்தவாகடைசாரமையத்
தெளிவந்தவாநங்கழுமலவாணர்தம்மின்னருளே.
6
இணைக்குறளாசிரியப்பா
அருள்பழுத்தளிந்த கருணைவான்கனி
ஆராவின்பத் தீராக்காதல்
அடியவர்க்கமிர்த வாரிநெடுநிலை
மாடக்கோபுரத் தாடகக்குடுமி
மழைவயிறுகிழிக்குங் கழுமலவாணநின்
வழுவாக்காட்சி முதிராவிளமுலைப்
பாவையுடனிருந்த பரமயோகி
யானொன்றுணர்த்துவ னெந்தைமேனாள்
அகிலலோகமு மனந்தயோனியும்
நிகிலமுந்தோன்ற நீநினைந்தநாடொடங்கி
எனைப்பலயோனியு நினைப்பரும்பேதத்
தியாரும்யாவையு மெனக்குத்தனித்தனித்
தாயாராகியுந் தந்தையராகியும்
வந்திலாதவ ரில்லையானவர்
தந்தையராகியுந் தாயாராகியும்
வந்திராதது மில்லைமுந்து
பிறவாநிலனு மில்லையவ்வயின்
இறவாநிலனு மில்லைபிறிதில்
எனைத்தினாவுயிர்களு மில்லையானவை
தமைத்தினாதொழிந்தது மில்லையனைத்தே
காலமுஞ்சென்ற தியானிதன்மேலினி
இளைக்குமா றிலனேநாயேன்
அந்தரச்சோதிநின் னஞ்செழுத்துநவிலும்
தந்திரம்பயின்றது மிலனேதந்திரம்
பயின்றவர்ப்பயின்றது மிலனேயாயினும்
இயன்றதோர்பொழுதி னிட்டதுமலராச்
சொன்னதுமந்திர மாகவென்னையும்
இடர்ப்பிறப்பிறப்பெனு மிரண்டின்
கடற்படாவகை காத்தனின்கடனே.
7
வெண்பா
கடலானகாமத்தே காறாழ்வர்துன்பம்
அடலாமுபாயமறியாம் - உடலாம்
முழுமலத்தையோர்கியார் முக்கட்பெருமான்
கழுமலத்தைக் கைதொழாதார்.
8
கட்டளைக்கலித்துறை
தொழுவாளிவள்வளைதோற்பா ளிவளிடர்க்கேயலர்கொண்
டெழுவாளெழுகின்ற தென்செயவோவென்மனத்திருந்துங்
கழுவாமணியைக்கழுமல வாணனைக்கையினிற்கொண்
மழுவாளனைக்கண்டுவந்த தென்றாலொர் வசையில்லையே.
9
இணைக்குறளாசிரியப்பா
வசையில்காட்சி யிசைநனிவிளங்க
முன்னாணிகழ்ந்த பன்னீருகத்து
வேறுவேறுபெயரி னூறின்றியன்ற
மையறுசிறப்பிற் றெய்வத்தன்மைப்
புகலிநாயக விகல்விடைப்பாக
அமைநாண்மென்றோ ளுமையாள்கொழுந
குன்றுகுனிவித்து வன்றோளவுணர்
மூவையிலெரித்த சேவகத்தேவ
இளநிலாமுகிழ்க்கும் வளர்சடைக்கடவுணின்
நெற்றியிற்சிறந்த வொற்றைநாட்டத்துக்
காமனைவிழித்த மாமுதுதலைவ
வானவரறியா வாதியானே
[1] கல்லாவுளத்திற் புல்லறிவுதொடர
மறந்துநோக்கும் வெறுந்தண்ணாட்டத்துக்
காண்டொறுங்காண்டொறு மெல்லாமியாண்டை
யாயினும்பிறவு மென்னதும்பிறரதும்
ஆவனபலவு மழிவனபலவும்
போவதும்வருவது நிகழ்வதுமாகித்
தெண்ணீர்ஞாலத்துத் திரண்டமணலினும்
எண்ணில்கோடி யெனப்பலவாகி
இல்லனவுளவா யுள்ளனகாணாப்
பன்னாளிருள்வயிற் பட்டேனன்னதும்
அன்னதாதலி னடுக்குமதென்னெனின்
கட்புலன்றெரியாது கொட்புறுமொருவற்குக்
குழிவழியாகி வழிகுழியாகி
ஒழிவின்றொன்றி னொன்றுதடுமாறி
வந்தாற்போல வந்ததெந்தைநின்
திருவளர்நாட்டங் கருணையிற்பெறலும்
யாவையுமெனக்குப் பொய்யெனத்தோன்றி
மேவருநீயே மெய்யெனத்தோன்றினை
ஓவியப்புலவன் சாயல்பெறவெழுதிய
சிற்பவிகற்ப மெல்லாமொன்றில்
தவிராதுதடவினர் தமக்குச்
சுவராய்த்தோன்றுந் துணிவுபோன்றனவே.
[1] சடமாகிய வுடம்பெனக்கொண்டு, கல்லா வுடம்பெனவும் பாடாமோதுவர்.
10
வெண்பா
எனவேயெழுந்தாளென் செய்கிற்பாளின்னம்
சினவேறுகாட்டு திரென்னு - மினவேகப்
பாம்புகலியாநிமிரும் பன்னாச்சடைமுடிநம்
பூம்புகலியானிதழிப் போது.
11
கட்டளைக்கலித்துறை
போதும்பெறாவிடிற்பச்சிலையுண்டுபுனலுண்டெங்கும்
ஏதும்பெறாவிடினெஞ்சுண்டின்றேயிணையாகச்செப்பும்
சூதும்பெறாமுலைப்பங்கர்தென்றோணிபுரேசர்வண்டின்
தாதும்பெறாதவடித்தாமரைசென்றுசார்வதற்கே.
12
16. திருவேகம்பமுடையார் திருவந்தாதி.
கட்டளைக்கலித்துறை
மெய்த்தொண்டர்செல்லுநெறியறியேன்மிகநற்பணிசெய்
கைத்தொண்டர்தம்மிலுநற்றொண்டுவந்திலனுண்பதற்கே
பொய்த்தொண்டுபேசிப்புறம்புறமேயுன்னைப்போற்றுகின்ற
வித்தொண்டனென்பணிகொள்ளுதியோகச்சியேகம்பனே.
1
ஏகம்பனேயென்னையாள்பவனேயிமையோர்க்கிரங்கிப்
போகம்பன்னாளுங்கொடுக்கின்றநாயகபொங்குமைவாய்
நாகம்பொன்னாரமெனப்பொலிவுற்றுநன்னீறணியு
மாகம்பொன்மாமலையொப்பவனேயென்பனாதரித்தே.
2
தரித்தேன்மனத்துன்றிகழ்தருநாமந்தடம்பொழில்வாய்
வரித்தேன்முரல்கச்சியேகம்பனேயென்றன்வல்வினையை
யரித்தேனுனைப்பணியாதவரேழைமைகண்டவரைச்
சிரித்தேனுனக்கடியாரடிபூணத்தெளிந்தனனே.
3
தெளிதருகின்றதுசென்றென்மனநின்றிருவடிவ
மளிதருநின்னருட்கையமினியிலையந்திச்செக்கர்
ஒளிதருமேனியெம்மேகம்பனேயென்றுகந்தவர்தாள்
தளிதருதூளியென்றன்றலைமேல்வைத்ததன்மைபெற்றே.
4
பெற்றுகந்தேனென்றுமர்ச்சனைசெய்யப்பெருகுநின்சீர்
கற்றுகந்தேனென்கருத்தினிதாக்கச்சியேகம்பத்தின்
பற்றுகந்தேறுமுகந்தவனேபடநாகக்கச்சின்
சுற்றுகந்தேர்விடைமேல்வருவாய்நின்றுணையடியே.
5
அடிநின்றசூழலகோசரமாலுக்கயற்கலரின்
முடிநின்றசூண்முடிகாண்பரிதாயிற்றுக்கார்முகிலி
னிடிநின்றசூழ்குரலேறுடையேகம்பயாமெங்ஙனே
வடிநின்றசூலப்படையுடையாயைவணங்குவதே.
6
வணக்கந்தலைநின்றிடுவடிக்கேசெய்யுமையல்கொண்டோ
ரிணக்கன்றிமற்றோரிணக்கறிவோமல்லம்வல்லரவின்
குணக்குன்றவில்லிகுளிர்கச்சியேகம்பம்பாடினல்லாற்
கணக்கன்றுமற்றொருதேவரைப்பாடுங்கவிநலமே.
7
நலந்தரநானொன்றுசொல்லுவன்கேண்மினல்லீர்களன்பு
கலந்தரனார்கச்சியேகம்பங்கண்டுகனற்றிகிரி
சலந்தரனாகமொழிக்கவைத்தாய்தக்கன்வேள்வியெல்லா
நிரந்தரமாகச்செய்தாயென்றுபூசித்துநின்மின்களே.
8
மின்களென்றார்சடைகொண்டலென்றார்கண்டமேனிவண்ணம்
பொன்களென்றார்வெளிப்பாடுதம்பொன்னடிபூண்டுகொண்ட
வென்களென்றாலும்பிரிந்தறியார்கச்சியேகம்பத்தான்
றன்களென்றாருலகெல்லாநிலைபெற்றதன்மைகளே.
9
தன்மையிற்குன்றாத்தவத்தோரிமையவர்தாம்வணங்கும்
வன்மையிற்குன்றாமதிற்கச்சியேகம்பர்வண்கயிலைப்
பொன்மயிற்சாயலுஞ்சேயரிக்கண்ணும்புரிகுழலும்
மென்மையிற்சாயுமருங்குலுங்காதல்விளைத்தனவே.
10
தனமிட்டுமைதழுவத்தழும்புற்றவர்தம்மடியார்
மனம்விட்டுகலாமதிற்கச்சியேகம்பர்வான்கயிலைச்
சினம்விட்டகலாக்களிறுவினாவியோர்சேயனையார்
புனம்விட்டகலார்பகலாம்பொழுதுநம்பூங்கொடியே.
11
பூங்கொத்திருத்தழையார்பொழிற்கச்சியேகம்பர்பொற்பார்
கோங்கத்திருந்தகுடுமிக்கயிலையெம்பொன்னொருத்தி
பாங்கொத்திருந்தனையாரணங்கேபடர்கல்லருவி
யாங்கத்திருந்திழையாடிவந்தாற்கண்டடிவருத்தே.
12
வருத்தந்தருமெய்யுங்கையிற்றழையும்வன்மாவினவுங்
கருத்தந்தரிக்குநடக்கவின்றையகழனினையத்
திருத்தந்தருளுந்திகழ்கச்சியேகம்பர்சீர்க்கயிலைத்
[1] துருத்தந்திருப்பதன்றிப்புனங்காக்குந்தொழிலெமக்கே.
1. துரு=ஆராய்ச்சி, ஈறுகுறைந்த முதனிலைத் தொழிற்பெயர்.
13
எம்மையுமெம்மைப்பணிகொள்ளுங்கம்பரெழிற்கயிலை
யும்மையுமானிடமிப்புனத்தேவிட்டுவந்தமைந்தர்
தம்மையுமானையுஞ்சிந்தையுநோக்கங்கவர்வவென்றோ
வம்மையுமம்மலர்க்கண்ணும்பெரியீரருளுமினே.
14
அருளைத்தருகம்பரம்பொற்கயிலையுளெம்மையரம்
பிருளைக்கரிமறிக்கும்மிவரையருறுத்தியெய்ய
வெருளக் கலைகணை தன்னொடும்போயினவில்லிமைக்கு
மருளைத்தருசொல்லியெங்கோவிலையுண்டிவ்வையகத்தே
15
வையார்மழுப்படையேகம்பரீங்கோய்மலைப்புனத்து
ளையார்வருகலையேனங்கரிதொடர்வேட்டையெல்லாம்
பொய்யானவையர்மனத்தவெம்பூங்கொடிகொங்கைபெறாப்
பையாரரவிடையாயிற்றுவந்து பரிமணத்தே.
16
பருமுத்துதிர்த்திடுஞ்சீர்மத்தயானைநுதல்பகுந்திட்
டுருமொத்ததிண்குரற்சீயந்திரிநெறியோங்குவைவாய்ப்
பொருமுத்தலைவேற்படைக்கம்பர்பூங்கயிலைப்புனத்துட்
டருமுத்தனநகைத்தன்னசையால்வெற்பசார்வரிதே.
17
அரிதன்றிருக்கண்ணிடநிரம்பாயிரம்போதணிய
வரிதன்றிருவடிக்கர்ச்சித்தகண்ணுக்கருளுகம்ப
ரரிதன்றிருக்கங்குலியாலழிந்தகயிலையல்லிங்
கரிதென்றிருப்பதெம்பால்வெற்பவெம்மையர்க்கஞ்சுதுமே.
18
அஞ்சரத்தான்பொடியாய்விழத்தீவிழித்தன்புசெய்வோர்
நெஞ்சரத்தாழ்வுகந்தோர்கச்சியேகம்பர்நீள்கயிலைக்
குஞ்சரத்தாழ்வரைவீழநுங்கொம்புய்யக்கும்ப [1] முழ
நெஞ்சரத்தாரனவோவல்லவோவிவ்வியன்முரசே.
[1] மூழ்கும்-என்றும் பாடம்.
19
சேய்தந்தகைம்மையுமைகணவன்றிருவேகம்பத்தான்
றாய்தந்தையாயுயிர்காப்போன்கயிலைத்தயங்கிருள்வாய்
வேய்தந்ததோளிநம்மூசலொடும்விரைவேங்கைதன்னைப்
பாய்தந்துபூசலுண்டாங்கொண்டதோகைப்பகடுவந்தே.
20
வந்தும்மணம்பெறிற்பொன்னனையீர்மன்னுமேகம்பர்த
முந்துமருவிக்கயிலைமலையுயர்தேனிழிற்சித்
தந்துமலர்கொய்துந்தண்டினைமேயுங்கிளிகடிந்துஞ்
சிந்தும்புகர்மலைக்கச்சுமிச்சாரற்றிரிதவனே.
21
திரியப்புரமெய்தவேகம்பனார்திகழுங்கயிலைக்
கிரியக்குறவர்பருவத்திடுதரளம்வினையோம்
விரியச்சுருண்முதலானுமடைந்தோம்விரைவிரைந்து
பிரியக்கதிர்முத்தினீர்பெற்றதென்னங்குப்பேசுமினே.
22
பேசுகயாவருமைக்கணியாரென்றுபித்தரெங்கும்
பூசுகையார்திருநீற்றெழிலேகம்பர்பொற்கயிலைத்
தேசுகையார்சிலைவெற்பன்பிரியும்பரிசலரக்
கூசுகையாதுமில்லாக்குலவேங்கைப்பெயர் [1] நும்மையே.
[1] நுமக்கே-என்றும் பாடம்.
23
பெயராநலத்தெழிலேகம்பனார்பிறைதோய்கயிலைப்
பெயராதிருக்கப்பெறுகிளிகாள்புனமேபிரிவின்
றுயரால்வருத்திமனமுமிங்கோடித்தொழுதுசென்ற
தயாராதுறையும்வெற்பற்கடியற்கும்விடைதமினே.
24
[2] நம்மைப்பிறவிக்கடல்கடப்பிப்பவர்நாம்வணங்கு
மும்மைத்திருக்கண்முகத்தெழிலேகம்பர்மொய்கயிலை
யம்மைக்கருங்கண்ணிதன்னொடின்பந்தருந்தண்புனமே
யெம்மைக்கவலைசெயச்சொல்லியோவல்லியெய்தியதே.
[2] தம்மைப் பிறவிக்கடல் கடப்பிப்பவர்தாம்-என்றும் பாடம்.
25
இயங்குந்திரிபுரமெய்தவேகம்பரெழிற்கயிலைத்
தயங்குமலர்ப்பொழில்காடையலாடருவித்தடங்கா
முயங்குமணியறைகாண்மொழியீரொழியாதுநெஞ்ச
மயங்கும்பரிசுபொன்னாற்சென்றசூழல்வகுத்தெமக்கே.
26
வகுப்பாரிவர்போன்மணத்துக்குநாண்மணந்தன்னொடின்ப
மிகுப்பார்களாருயிரொன்றாமிருவரைவிள்ளக்கள்வாய்
நெகுப்பான்மலர்கொண்டுநின்றார்கிடக்கநிலாவுகம்பர்
தொகுப்பான்மணிசிந்தருவிக்கயிலையிச்சூழ்புனத்தே.
27
புனங்குழையாதென்றுமென்றினைகொய்ததும்போகலுற்ற
கனங்குழையாடற்பிரியநமக்குறுங்கையறவால்
மனங்குழையாவருங்கண்கனிபண்பலபாடுந்தொண்ட
ரிணங்குழையாத்தொழுமேகம்பரிக்கயிலாயத்துள்ளே.
28
உள்ளம்பெரியரல்லாச்சிறுமானிடருற்றசெல்வங்
கள்ளம்பெரியசிறுமனத்தார்க்கன்றிக்கங்கையென்னும்
வெள்ளம்பெரியசடைத்திருவேகம்பர்விண்ணரணந்
தள்ளம்பெரிகொண்டமைத்தாரடியவர்சார்வதன்றே.
29
அன்றும்பகையடர்க்கும்பரிமாவுமதவருவிக்
குன்றும்பதாதியுந்தேருங்குலவிக்குடைநிழற்கீழ்
நின்றும்பொலியினுங்கம்பர்நன்னீறுநுதற்கிலரேல்
என்றுமரசுமுரசும்பொலியாதிருநிலத்தே.
30
நிலத்திமையோரிற்றலையாப்பிறந்துமறையொடங்கம்
வலத்திமைப்போதும்பிரியாரெரிவளர்த்தாலும்வெற்பன்
குலத்துமையோர்பங்கர்கச்சியுளேகம்பங்கூடித்தொழு
நலத்தமையாதவர்வேட்டுவர்தம்மினடுப்படையே.
31
படையாலுயிர்கொன்றுதின்றுபசுக்களைப்போலச்செல்லு
நடையாலறிவின்றிநாண்சிறிதின்றிநகுங்குலத்திற்
கடையாப்பிறக்கினுங்கச்சியுளேகம்பத்தெங்களையா
ளுடையான்கழற்கன்பரேலவர்யாவர்க்குமுத்தமரே.
32
உத்துங்கயானையுரியார்விரலாலரக்கன்சென்னி
பத்துங்கையானவிருபதுஞ்சோர்தரவைத்திலமை
யொத்துங்கையாலவன்பாடக் [1] கயிலையுள்ளோர்நற்கைவா
ளெத்துங்கையானென்றுகந்தளித்தார்கச்சியேகம்பரே.
[1] கயிலைகைவாளொடு நாள் என்றும்பாடம்.
33
அம்பரங்காலனனீர்நிலந்திங்களருக்கனணு
வம்பரங்கொள்வதோர்வேழத்துரியவன்றன்னுருவா
பெம்பரன்கச்சியுளேகம்பத்தானிடையாதடைவா
னம்பரன்றன்னடியாரறிவார்க்குநறுந்துணையே.
34
துணைத்தாமரையடியும்பவளத்திரணன்குறங்கும்
பணைத்தோளகலமுங்கண்டத்துநீலமுமண்டத்துமின்
பணைத்தாலனசடையுந்திருமுக்கணும்பெண்ணொர்பக்கத்
தணைத்தாரெழிற்கம்பரெங்கள்பிரானார்க்கழகியவே.
35
அழகறிவிற்பெரிதாகியவேகம்பரத்தர்கொற்றம்
பழகறிவிற்பெரியோர்தமைப்பற்றலர்பற்றுமன்பின்
குழகறிவேற்பினுளொன்றறியாரறியாமைதெய்வங்
கிழகெறியப்பட்டுலந்தாருலகிற்கிடந்தனரே.
36
கிடக்குமொருபாலிரைக்கின்றபாம்பொருபான்மதியந்
தொடக்குண்டிலங்குமலங்குந்திரைக்கங்கைசூடுங்கொன்றை
வடக்குண்டுகட்டத்தலைமாலைவாளான்மலைந்தவெம்போர்
கடக்கும்விடைத்திருவேகம்பர்கற்றைச்சடைமுடியே.
37
கற்றைப்பவளச்சடைவலம்பூக்கமழ்கொன்றையந்தார்
முற்றுற்றிலர்மதியின்கொழுந்தேகம்பர்மொய்குழலா
மற்றைத்திசையின்மணிப்பொற்கொழுந்தத்தரங்கழுநீர்
தெற்றிப்பொலிகின்றசூட்டழகாகித்திகழ்தருமே.
38
தருமருட்டன்மைவலப்பாற்கமலக்கணெற்றியின்மேற்
றிருமலர்க்கண்பிளவின்றிகழுந்தழல்செல்வக்கம்பர்
கருமலர்க்கண்ணிடப்பாலதுநீலங்கனிமதத்து
வருநுதற்பொட்டணங்குக்குயர்ந்தோங்குமலர்க்குழலே.
39
மலர்ந்தபடத்துச்சியைந்தினுஞ்செஞ்சுடர்மாமணிவிட்
டலர்ந்தமணிக்குண்டலம்வலக்காதினிலாடிவரும்
நலந்திருநீள்வயிரம்வெயிற்பாயுநகுமணிகள்
கலந்தசெம்பொன்மகரக்குழையேகம்பர்காதிடமே.
40
காதலைக்கும்வலத்தோள்பவளக்குன்றமங்குயர்ந்து
போதலைக்கும்பனிப்பொன்மலைநீற்றின்பொலியகலந்
தாதலைக்குங்குழல்சேர்பணைத்தோணறுஞ்சாந்தணிந்து
குதலைக்கும்முலைமார்பிடமேகம்பர்சுந்தரமே.
41
தரம்பொற்பழியுமுலகட்டியெய்த்துத்தரந்தளரா
வுரம்பொற்புடையதிருவயிறாம்வலமும்பர்மும்மைப்
புரம்பொற்பழித்தகம்பர்க்குத்தரத்திடுபூண்முலையு
நிரம்பப்பொறாதுதளரிளவஞ்சியுநேருடைத்தே.
42
உடைப்புலியாடையின்மேலுரக்கச்சுவீக்கிமுஞ்சி
வடத்தொருகோவணந்தோன்றுமரைவலமற்றையல்குற்
றொடக்குறுகாஞ்சித்தொடுத்தவரசிலைதூநுண்டுகி
லடற்பொலியேறுடையேகம்பமேயவடிகளுக்கே.
43
அடிவலப்பாலதுசெந்தாமரையொத்ததிர்கழல்சூழ்ந்
திடிகுரற்கூற்றினெருத்திறவைத்ததிளந்தளிரி
னடியிடப்பாலதுபஞ்சுறவஞ்சுஞ்சிலம்பணிந்த
வடிவுடைத்தார்கச்சியேகம்பமேயவரதருக்கே.
44
தருக்கவற்றான்மிக்கமுப்புரமெய்தயன்றன்றலையை
நெருக்கவற்றோடமழுவாள்விசைத்ததுநெற்களென்றும்
பருக்கவற்றாங்கச்சியேகம்பரத்தர்தம்பாம்புகளின்
றிருக்கயிற்றாலிட்டருளுங்கடகத்திருக்கரமே.
45
கரத்தமருகத்தோசைகடுத்தண்டமீபிளப்ப
வரத்தத்தபாதநெரித்திட்டவனிதலநெரியத்
தரத்தத்திசைகளுக்கப்புரம்போர்ப்பச்ச்சடைவிரித்து
வரத்தைத்தருகம்பராடுவரெல்லியுமாநடமே.
46
நடனம்பிரானுகந்துய்யக்கொண்டானென்றுநன்மறையோ
ருடன்வந்துமூவாயிரவரிறைஞ்சிநிறைந்தவன்பின்
கடனன்றிமற்றறியாத்தில்லையம்பலங்காளத்தியா
மிடமெம்பிறான்கச்சியேகம்பமேயாற்கினியனவே.
47
இனியவரின்னாரவரையொப்பார்பிறரென்னவொன்ணாத்
தனியவர்தையலுடனாமுருவரறம்பணித்த
முனியவரென்றுமுகந்தமுக்கண்ணவர்தண்டியன்புக்
கினியவர்காய்மழுவாட்படையார்கச்சியேகம்பரே.
48
பரவித்தனைநினையக்கச்சியேகம்பர்பண்ணுமையல்
வரவித்தனையுள்ளதெங்கரிந்தேன்முன்னவர்மகனார்
புரவித்தனையடிக்கக்கொடிதாய்விடியாவிரவி
லரவித்தனையுங்கொண்டார்மடவார்முன்றிலாட்டிடவே.
49
இடவஞ்சுருக்கெனப்பாயுமஞ்சென்னிநகுதலைகண்
டிடவஞ்சுவர்மடவாரிரிகின்றனரேகம்பத்தீர்
படமஞ்சுவாயதுநாகமிரைக்குமதனுக்குமுற்
படவஞ்சுவரெங்கனேபலிவந்திடும்பாங்குகனே.
50
பாங்குடைக்கோட்புலியின்னதள்கொண்டிர்நும்பாரிடங்க
டாங்குடைகொள்ளப்பலிகொள்ளவந்தீர்தடங்கமலம்
பூங்குடைகொள்ளப்புனற்கச்சியேகம்பங்கோயில்கொண்டீ
ரீங்கிடைகொள்ளக்கலைகொள்ளவந் தீரிடைக்குமின்றே.
51
இடைக்குமின்றோர்க்குமிணைமுலையாய்முதியார்கடஞ்சொற்
கடைக்கணன்றாங்கச்சியேகம்பரையங்கொளக்கடவும்
விடைக்குமுன்றோத்தநில்லேநின்றினியிந்தமொய்குழலார்
கிடைக்குமுன்றோத்த [1] நஞ்சங்கிதுவோதன்கிறித்துவமே.
[1] நெஞ்சங்கிதுவோ - என்றும் பாடம்.
52
கிறிபலபேசிக்கதிரானடந்துவிடங்குபடக்
குறிபலபாடிக்குளிர்கச்சியேகம்பரையங்கொள்ள
நெறிபலவார்குழலார்மெலிவுற்றநெடுந்தெருவிற்
செறிபலவெள்வளைபோயினதாயர்கடேடுவரே.
53
தேடுற்றிலகள்ளநோக்கந்தெரிந்திலசொற்கண்முடி
கூடுற்றிலகுழல்கொங்கைபொடித்திலகூறுமிவண்
மாடுற்றிலமணியின்மடவல்குலுமற்றிவள்பா
னாடுற்றிலவெழிலேகம்பனார்க்குள்ளநல்கிடத்தே.
54
நல்கும்புகழ்க்கடவூர்நன்மறையவனுய்யநண்ணிக்
கொல்கின்றகூற்றைக்குமைத்தவெங்கூற்றங்குளிர்திரைகண்
மல்குந்திருமறைக்காட்டமிர்தென்றுமலைமகடான்
புல்கும்பொழிற்கச்சியேகம்பமேவியபொன்மலையே.
55
மலையத்தகத்தியனர்ச்சிக்கமன்னிவடகயிலை
நிலையத்தமரர்தொழவிருந்தானெடுமேருவென்னுஞ்
சிலையைத்தன்பைம்பொன்மதிற்றிருவேகம்பத்தான்றிகழ்நீ
ரலையத்தடம்பொன்னிசூழ்திருவையாற்றருமணியே.
56
மணியாரருவித்தடவிமயங்குடக்கொல்லிகல்லின்
றிணியாரருவியினார்த்தசிராமலையைவனங்க
ளணியாரருவிகவர்கிளியொப்புமின்சாரல்லிந்தம்
பணிவாரருவினைதீர்க்குமேகமபர்பருப்பதமே.
57
பருப்பதங்கார்தவழ்மந்தரமிந்திரநீலம்வெள்ளை
மருப்பதங்கார்கருங்குன்றியங்கும்பரங்குன்றம்வில்லார்
நெருப்பதங்காகுதிநாறுமயேந்திரமென்றிவற்றி
லிருப்பதங்காவுகந்தான்கச்சியேகம்பத்தெம்மிறையே.
58
திருவேகம்பமுடையார்
இறைத்தார்புரமெய்தவில்லிமைநல்லிமவான்மகட்கு
மறைத்தார்கருங்குன்றம்வெண்குன்றஞ்செங்குன்றமன்னற்குன்ற
நிறைத்தார்நெடுங்குன்றநீள்கழுக்குன்றமென்றீவினைகள்
குறைத்தார்முதுகுன்றமேகம்பர்குன்றென்றுகூறுமினே.
59
கூறுமின்றொண்டர்குற்றாலநெய்த்தானந்துருத்தியம்பேர்
தேறுமின்வேள்விக்குடிதிருத்தோணிபுரம்பழன
மாறுமின்போற்சடைவைத்தவனாரூரிடைமருதென்
றேறுமினீரெம்பிரான்கச்சியேகம்பமுன்னினைந்தே.
60
நினைவார்க்கருளும்பிரான்றிருச்சோற்றுத்துறைநியமம்
புனைவார்சடையோன்புகலூர்புறம்பியம்பூவணநீர்
பனைவார்பொழிற்றிருவெண்காடுபாச்சிலதிகையென்று
நினைவார்தருநெஞ்சினீர்கச்சியேகம்பநண்ணுமினே.
61
நண்ணிப்பரவுந்திருவாவடுதுறைநல்லநல்லூர்
மண்ணிற்பொலிகடம்பூர்கடம்பந்துறைமன்னுபுன்கூ
ரெண்ணற்கரியபராய்த்துறையோர்கொளெதிற்கொள்பாடிக்
கண்ணிப்பிறைச்சடையோன்கச்சியேகம்பங்காண்மின்சென்றே.
62
சென்றேறிவிண்ணுறுமண்ணாமலைதிகழ்வல்லமென்பூ
வின்றேறல்பாய்திருமாற்பேறுபாசூரெழிலழுந்தூர்
வன்றேரவன்றிருவிற்பெறும்பேறுமதிலொற்றியூர்
நின்றேர்தருகச்சியேகம்பமேயார்நிலாவியவே.
63
நிலாவுபுகழ்திருவோத்தூர்திருவாமாத்தூர்நிறைநீர்
சுலாவுசடையோன்புலிவலம்வில்வலங்கொச்சைகொண்டர்
குலாவுந்திருப்பனங்காடுநன்மாகறல்கூற்றம்வந்தா
லலாயென்றடியார்க்கருள்புரியேகம்பராலயமே.
64
ஆலையங்கார்கருகாவைகச்சூர்திருக்காரிகரை
வேலையங்கேறுதிருவான்மியூர்திருவூறன்மிக்க
சோலையங்கார்திருப்போந்தைமுக்கோணந்தொடர்கடுக்கை
மாலையன்வாழ்திருவாலங்காடேகம்பம்வாழ்த்துமினே.
65
வாழப்பெரிதெமக்கின்னருள்செய்யுமலர்க்கழலோர்
தாழைச்சடைத்திருவேகம்பர்தம்மைத்தொழாதவர்போய்
வாழ்ப்பரற்சுரமாற்றாதளிரடிபூங்குழலெம்
ஏழைக்கிடையிறுக்குங்குயபாரமியக்குறினே.
66
உறுகின்றவெவ்வழலக்கடமிக்கொடிக்குன்பின்வரப்
பெறுகின்றவண்மையினாலையபோருளேகம்பனார்
துறுகின்றமென்மலர்த்தண்பொழிற்கச்சியைச்சூழ்ந்திளையோர்
குறுகின்றபூங்குவளைக்குறுந்தண்பணையென்றுகொளே.
67
கொள்ளுங்கடுங்கதிரிற்கள்ளித்தீத்சிலவேயுலர்ந்து
விள்ளும்வெடிபடும்பாலையென்பாவைவிடலைபின்னே
தெள்ளும்புனற்கச்சியுட்டிருவேகம்பர்சேவடியை
யுள்ளுமதுமறந்தாரெனப்போவதுரைப்பரிதே.
68
பரிப்பருந்திண்மைப்படையதுகானரெனிற்சிறகு
விரிப்பருந்துக்கிரையாக்கும்வெய்யேனஞ்சலஞ்சடைமேற்
றரிப்பருந்திண்கங்கையார்திருவேகம்பமன்னபொன்னே
வரிப்பருந்திண்சிலையேயுமராயின்மறைகுவனே.
69
வனவரித்திண்புலியின்னதளேகம்பமன்னருளே
யெனவருபொன்னணங்கென்னணங்கிற்கெனெழிற்கழங்குத்
தனவரிப்பந்துங்கொடுத்தெனைப்புல்லியுமிற்பிரிந்தே
யின்வரிக்கல்லதர்செல்வதெங்கேயொல்குமேழைநெஞ்சே.
70
நெஞ்சார்தரவின்பஞ்செய்கழலேகம்பர்கச்சியன்னாள்
பஞ்சாரடிவைத்தபாங்கிவையாங்கவட்பெற்றெடுத்த
வெஞ்சார்வொழியத்தன்பின்செலமுன்செல்வெடுவெடென்ற
வஞ்சாவடுதிறற்காளைதன்போக்கிவையந்தத்திலே.
71
இலவவெங்கானுனையல்லாற்றொழுஞ்சரணேகம்பனார்
நிலவுஞ்சுடரொளிவெய்யவனேதண்மலர்மிதித்துச்
செலவும்பருக்கைகுளிரத்தளிரடிசெல்சுரத்துன்
னுலவுங்கதிர்தணிவித்தருள்செய்யுன்னுறுதுணைக்கே.
72
துணையொத்தகோவையும்போலெழிற்பேதையுந்தோன்றலுமுன்
னிணையொத்தகொங்கையொடேயொத்தகாதலொடேகினரே
யணையத்தரேறொத்தகாளையைக்கண்டனமற்றவரெற்
பிணையொத்தனோக்குடைப்பெண்ணிவடன்னொடும்பேசுமினே.
73
மின்னலிக்கும்வணக்கத்திடையாளையுமீளியையு
நென்னலிப்பாக்கைவந்தெய்தினிரேலெம்மனையிற்கண்டீர்
பின்னரிபோக்கருங்குன்றுகடந்தவரின்றுகம்பர்
மன்னரிதேர்ந்துதொழுங்கச்சிநாட்டிடைவைகுவரே.
74
உவரச்சொல்வேடுடைக்காடுகந்தாடியவேகம்பனார்
அவரக்கன்போனவிமானத்தையாயிரமுண்மைசுற்றுந்
துவரச்சிகரச்சிவாலயஞ்சூலந்துலங்குவிண்மேற்
கவரக்கொடிதிளைக்குங்கச்சிகாணினுங்கார்மயிலே.
758
கார்மிக்ககண்டத்தெழிற்றிருவேகம்பர்கச்சியின்வா
யேர்மிக்கசேற்றெழினென்னடுவோரொலிபொன்மலைபோற்
போர்மிக்கசென்னெல்குவிப்போரொலிகருப்பாலையொலி
நீர்மிக்கமாக்கடலின்னொலியேயொக்குநேரிழையே.
76
நேர்த்தமையாமைவிறற்கொடுவேடர்நெடுஞ்சுரத்தைப்
பார்த்தமையாலிமைதீர்ந்தகண்பொன்னேபகட்டுரிவை
போர்த்தமையாலுமைநோக்கருங்கம்பர்கச்சிப்பொழிலுட்
சேர்த்தமையாலிமைப்போதணிசீதஞ்சிறந்தனவே.
77
சிறைவண்டுபாடுங்கமலக்கிடங்கிவைசெம்பழுக்காய்
நிறைகொண்டபாளைக்கமுகின்பொழிலவைதீங்கனியின்
பொறைகொண்டவாழைப்பொதும்புவைபுன்சடையேகம்பனார்
நறைகொண்டபூங்கச்சிநாடெங்குமிவ்வண்ணநன்னுதலே.
78
நன்னுதலார்கருங்கண்ணுஞ்செவ்வாயுமிவ்வாறெனப்போய்
மன்னிதழார்திருநீலமுமாம்பலும்பூப்பவள்ளை
யென்னவெலாமொப்புக்காதென்றுவீறிடுமேகம்பனார்
பொன்னுதலார்விழியார்கச்சிநாட்டுளிப்பொய்கையுமே.
79
உள்வார்குளிரநெருங்கிக்கடுங்கிடங்கிட்டநன்னீர்
வள்வாளைகளொடுசெங்கயன்மேய்கின்றவெங்களையாட்
கொள்வார்பிறவிகொடாதவேகம்பர்குளிர்குவளை
கள்வார்தருகச்சிநாட்டெழிலேரிகளப்பரப்பே.
80
பரப்பார்விசும்பிற்படிந்தகருமுகிலன்னநன்னீர்
தரப்பாசிகண்மிகுபண்பொடுசேம்படர்தண்பணைவாய்ச்
சுரப்பாரெருமைமலர்தின்னத்துன்னுகராவொருத்தல்
பொரப்பார்பொலிநுதலாய்செல்வக்கம்பர்தம்பூங்கச்சியே.
81
கச்சார்முலைமலைமங்கைகண்ணாரவெண்ணான் கறமும்
வைச்சார்மகிழ்திருவேகம்பர்தேவிமகிழவிண்ணோர்
விச்சாதரர்தொழுகின்றவிமானமுந்தன்மமறா
வச்சாலையும்பரப்பாங்கணிமாடங்களோங்கினவே.
82
ஒங்கினவூரகமுள்ளகமும்பருருகிடமாம்
பாங்கினினின்றதரியுறைபாடகந்தெவ்விரிய
வாங்கினவாட்கண்ணிமற்றவர்மைத்துனிவான்கவிக
டாங்கினநாட்டிருந்தாளதுதன்மனையாயிழையே.
83
இழையாரரவணியேகம்பர்நெற்றிவிழியின்வந்த
பிழையாவருணம்பிராட்டியதின்னபிறங்கலுன்னு
நுழையாவருதிரிசூலத்தணோக்கரும்பொன்கடுக்கைத்
தழையார்பொழிலுதுபொன்னேநமக்குத்தளர்வில்லையே.
84
தளராமிகுவெள்ளங்கண்டுமையோடித்தமைத்தழுவக்
கிளையார்வளைக்கைவடுப்படுமீங்கோர்கிறிபடுத்தார்
வளமாப்பொழிற்றிருவேகம்பமற்றிதுவந்திறைஞ்சி
யுளராவதுபடைத்தோமடவாயிவ்வுலகத்துளே.
85
உலவியமின்வடம்வீசியுருமதிர்வுண்முழங்கி
வலவியமாமதம்பாய்முகில்யானைகள்வானில்வந்தாற்
சுலவியவார்குழல்பின்னரென்பாரிரெனநினைந்து
நிலவியவேகம்பர்கோயிற்கொடியன்னநீர்மையனே.
86
நீரென்னிலும்மழுங்கண்முகில்காணெஞ்சமஞ்சலையென்
றாரென்னிலுந்தமராயுரைப்பாரமராபதிக்கு
நேரென்னிலுந்தகுங்கச்சியுளேகம்பர்நீண்மதில்வாய்ச்
சேரென்னிலுந்தங்கும்வாட்கண்ணிதானன்பர்தேர்வரவே.
87
வரங்கொண்டிமையோர்நலங்கொள்ளுமேகம்பர்கச்சியன்னாய்
பரங்கொங்கைதூவன்மினீர்முத்தமன்பர்தந்தேரின்முன்னே
தரங்கொண்டுபூக்கொண்டுகொன்றைபொன்னாகத்தண்காந்தள்கொத்தின்
கரங்கொண்டுபொற்சுண்ணமேந்தவும்போந்தனகார்முகிலே.
88
கார்முகமாரவண்கைக்கொண்டகம்பர்கழற்றொழுது
போர்முகமாப்பகைவெல்லச்சென்றார்நினையார்புணரி
நீர்முகமாகவிருண்டுசுரந்ததுநேரிழைநா
மார்முகமாகவினைக்கட[1]னீந்துதும்வெய்துயிர்ப்பே.
89
உயிராயினவன்பர்தேர்வரக்கேட்டுமுன்வாட்டமுற்ற
பயிரார்புயல்பெற்றதென்னநம்பல்வளைபான்மைகளாந்
தயிரார்பானெய்யொடுமாடியவேகம்பர்தம்மருள்போற்
கயிராவளையழுந்தக்கச்சிறுத்தனகார்மயிலே.
90
கார்விடைவண்ணத்தனன்றேழ்தழுவினுமின்றுதனிப்
போர்விடைப்பெற்றெதிர்மாண்டாரெனவண்டர்போதவிட்டார்
தார்விடையேகம்பர்கச்சிப்புறவிடைத்தம்பொனன்பூண்
மார்விடைவைகல்பெறுவார்தழுவமழவிடையே.
91
விடைபாய்கொடுமையெண்ணாதுமேலாங்கன்னிவேற்கருங்கட்
கடைபாய்மனத்திளங்காளையர்புல்கொலிகம்பர்கச்சி
மடைபாய்வயலிளமுல்லையின்மான்கன்றொடான்கன்றினங்
கடைபாய்தொறும்பதிமன்றிற்கடல்போற்கலந்தெழுமே.
92
எழுமலர்த்தண்பொழிலேகம்பர்கச்சியிருங்கடல்வாய்க்
கொழுமணப்புன்னைத்துணர்மணற்குன்றிற்பரதர்கொம்பே
செழுமலர்ச்சேலல்லவாளல்லவேலல்லநீலமல்ல
முழுமலர்க்கூரம்பினோரிரண்டாலுமுகத்தெனவே.
93
முகம்பாகம்பண்டமும்பாகமென்றோதியமூதுரையை
யுகம்பார்த்திரேலென்னலமுயரேகம்பர்கச்சிமுன்னீ
ரகம்பாகவார்லினளவில்லையென்னின்பவளச்செவ்வாய்
நகம்பாற்பொழிற்பெற்றநாமுற்றவர்கொள்கநன்மயலே.
[1]நீந்துமயர்வுயிர்ப்பே - எனவும் பாடம்.
94
மயக்கத்தநல்லிருட்கொல்லுஞ்சுறவொடெறிமகர
மியக்கத்திடுசுழியோதங்கழிகிளரக்கழித்தார்
துயக்கத்தவர்க்கருளாக்கம்பர்கச்சிக்கடலபொன்னூன்
முயக்கத்தகல்வுபொறாள்கொண்கநீர்வருமூர்க்கஞ்சுமே.
95
மேயிரைவைகக்குருகுணராமதுவுண்டுபுன்னை
மீயிரைவண்டோதமர்புகடியவிரிகடல்வாய்ப்
பாயிரைநாகங்கொண்டோன்றொழுங்கம்பர்கச்சிப்பவ்வநீர்
தூயிரைகானன்மற்றாரறிவார்நந்துறைவர்பொய்யே.
96
பொய்வருநெஞ்சினர்வஞ்சனையாரையும்போகவிடா
மெய்வரும்பேரருளேகம்பர்கச்சிவிரையினவாய்க்
கைவரும்புள்ளொடுசங்கினமார்ப்பநஞ்சேர்ப்பர்திண்டே
ரவ்வருதாமங்களினம்வந்தார்ப்பவணைகின்றதே.
97
இன்றுசெய்வோமிதனிற்றிருவேகம்பர்க்கெத்தனையு
நன்றுசெய்வோம்பணிநாளையென்றுள்ளிநெஞ்சேயுடலிற்
சென்றுசெயாரைவிடுந்துணைநாளும்விடாதடிமை
நின்றுசெய்வாரவர்தங்களினீணெறிகாட்டுவரே.
98
காட்டிவைத்தார்தம்மையரங்கடிப்பூப்பெய்யக்காதல்வெள்ள
மீட்டிவைத்தார்தொழுமேகம்பரேதுமிலாதவெம்மைப்
பூட்டிவைத்தார்தமக்கன்பதுபெற்றுப்பதிற்றுப்பத்துப்
பாட்டிவைத்தார்பரவித்தொழுதாமவர்பாதங்களே.
99
பாதம்பரவியோர்பித்துப்பிதற்றிலும்பல்பணியும்
மேதம்புகுதாவகையருளேகம்பரேத்தெனவே
போதம்பொருளாற்பொலியாதபுன்சொற்பனுவல்களும்
வேதம்பொலியும்பொருளாமெனக்கொள்வர்மெய்த்தொண்டரே.
100
17. திருவொற்றியூர்த்தொகை
ஆசிரியப்பா
இருநிலமடந்தை யியல்பினினுடுத்த
பொருகடன்மேகலை முகமெனப்பொலிந்த
ஒற்றிமாநக ருடையோயுருவின்
பெற்றியொன்றாப் பெற்றோர்யாரே
[2]மின்னியமின்னின் பிறக்கநின்சடையே
மன்னியவண்டநின் சென்னியின்வடிவே
பாவகன்பரிதி பனிமதிதன்னொடு
மூவகைச்சுடருநின் னுதனேர்நாட்டம்
தன்னொளியாரந் தாராகணமே
விண்ணவர்முதலா வேறோரிடமாக்
கொண்டுறைவிசும்பே கோலநின்னாகம்
எண்டிசைதிண்டோ ளிருங்கடலுடையே
அணியுடையல்குலு மவனிமண்டலமே
மணிமுடிப்பாந்தணின் றாளினைவழக்கே
ஒழியாதோடிய மாருதமுயிர்ப்பே
வழுவாவோசை முழுதுநின்வாய்மொழி
வானவர்முதலா மன்னுயிர்பரந்த
ஊனமின்ஞானத் தொகுதிநின்னுணர்வே.
நெருங்கியவுலகினி னீர்மையுநிற்றலும்
சுருங்கலும் விரிதலுந் தோற்றநின்றொழிலே
அமைத்தலுமழித்தலு மாங்கதன்முயற்சியும்
இமைத்தலுவிழித்தலு மாகுநின்னியல்பே
என்றிவைமுதலா வியல்புடைவடிவினோ
டொன்றியதுப்புரு விருவகையாகி
முத்திறக்குணத்து நால்வகைப்பிறவி
அத்திறத்தைம்பொறி யறுவகைச்சமயமோ
டேழுலகாகி யெண்வகைமூர்த்தியோ
டுழிதோறுழி யெண்ணிறந்தோங்கி
எவ்வகையளவினிற் கூடிநின்
றவ்வகைப்பொருளுநீ யாகியவிடத்தே.
[1] ஒருபா வொருபதெனவுங் கூறுவர்
[2] மின்னினியங்கு நின்சடை எனவும் பாடம்.
1
இடத்துறைமாதரோ டீறுடம்பென்றும்
நடத்தினைநள்ளிரு ணவிற்றினையென்றும்
புலியதளென்பொடு புனைந்தோயென்றும்
பலிதிரிவாழ்க்கை பயின்றோயென்றும்
திருவமர்மாலொடு திசைமுகனென்றும்
அருவமுமுருவமு மானாயென்றும்
உளனேயென்று மிலனேயென்றும்
தளரானென்றுந் தளர்வோனென்றிம்
ஆதியென்று மசோகினனென்றும்
போதியிற்பொலிந்த புராணனென்றும்
இன்னவைமுதலாத் தாமறியளவையின்
மன்னியநூலுடன் பன்மையுண்மயங்கிப்
பிணங்குமாந்தர் பெற்றிமைநோக்கி
அணங்கியவவ்வவர்க்கவ் வவையாகியடை
பற்றிய பளிங்குப்போலும்
ஒற்றிமாநகருடை யோயுருவே.
2
உருவாமுலகுக் கொருவனாகிய
பெரியோய்வடிவின் பிறிதிங்கின்மையின்
எப்பொருளாயினு மீங்குளதாமெனின்
அப்பொருளுனக்கே யவயவமாதலின்
முன்னியமூவெயின் முழங்கெரியூட்டித்
தொன்னீர்வையகந் துயர்கெடச்சூழ்ந்ததும்
வேள்விமூர்த்திதன் றலையினைவிடுத்ததும்
நீள்விசும்பாளிதன் றோளினை நெரித்ததும்
ஓங்கியமறையோர் கொருமுகமொழித்ததும்
பூங்கணைவேளைப் பொடிபடவிழித்ததும்
திறல்கெடவரக்கனைத் திருவிரலுறுத்ததும்
குறைபடக்கூற்றினைக் குறிப்பினிலடர்த்ததும்
என்றிவைமுதலா வாள்வினையெல்லாம்
நின்றுழிச்செறிந்தவை நின்செயலாதலின்
உலவாத்தொல்புக ழொற்றியூர
பகர்வோர்நினக்கு வேறின்மைகண்டவர்
நிகழ்ச்சியினிகழி னல்லது
புகழ்ச்சியிற்படுப்பரோ பொருளுணர்ந்தோரே.
3
பொருளுணர்ந்தோங்கிய பூமகன்முதலா
இருடுணையாக்கையி லியங்குமன்னுயிர்
உருவினுமுணர்வினு முயர்வினும்பணியினும்
திருவினுந்திறலினுஞ் செய்தொழில்வகையினும்
வெவ்வேறாகி வினையொடும்பிரியா
தொவ்வாப்பன்மையுண் மற்றவரொழுக்கம்
மன்னியவேலையுள் வான்றிரைபோல
நின்னிடையெழுந்து நின்னிடையாகியும்
பெருகியுஞ்சுருங்கியும் பெயர்ந்துந்தோன்றியும்
விரவியும்வேறாய் நின்றனைவிளக்கம்
ஒவாத்தொல்புக ழொற்றியுர
மூவாமேனி மூதல்வநின்னருள்
பெற்றவரறியி னல்லது
மற்றவரறிவரோ நின்னிடைமயக்கே.
4
மயக்கமில்சொன்னீ யாயினுமற்றவை
துயக்கநின்றிற மறியாச்சூழலும்
உறையிடமுள்ள மாயினுமற்றது
கறைபடவாங்கே கரந்தகள்ளமும்
செய்வினையுலகினிற் செய்வோயெனினும்
அவ்வினைப்பயனீ யணுகாவணிமையும்
இனத்திடையின்பம் வேண்டினிற்பணிவோர்
மனத்திடைவாரி யாகி வனப்பும்
அன்பினடைந்தவர்க் கணிமையுமல்லவர்ச்
சேய்மையு நாடொறும்
என்பினையுருக்கு மியற்கையவாதலில்
கண்டவர்தமக்கே யுனுடல்கழிதல்
உண்டெனவுணர்ந்தென மொற்றியூர
மன்னியபெரும்புகழ் மாதவ
துன்னியசெஞ்சடைத் தூமதியோயே.
5
தூமதிசடைமிசைச் சூடுதறூநெறி
ஆமதியானென வமைத்தவாறே
அறனுருவாகிய வானேறேறுதல்
இறைவன்யானென வியற்றுமாறே
அதுவவளவனென நின்றமையார்க்கும்
பொதுநிலையானென வுணர்த்தியபொருளே
முக்கணனென்பது முத்தீவேள்வியில்
தொக்கதென்னிடை யென்பதோர்சுருக்கே
வேதமான்மறி யேந்துதன்மற்றதன்
நாதனானென நவிற்றுமாறே
மூவிலையொருதாட் சூலமேந்துதன்
மூவரும்யானென மொழிந்தவாறே
எண்வகைமூர்த்தி யென்பதிவ்வுலகினில்
உண்மையானென வுணர்த்தியவாறே
நிலநீர்தீவளி யகல்வானென்ரும்
உலவாத்தொல்புக ழுடையோயென்றும்
பொருளுநற்பூதப் படையோயென்றும்
தெருளநின்ருலகினிற் றெருட்டுமாறே
ஈங்கிவைமுதலா வண்ணமும்வடிவும்
ஓங்குநின்பெருமை யுணர்த்தவுமுணராத்
தற்கொலிமாந்தர் தம்மிடைப்பிறந்த
சொற்பொருள்வண்மையிற் சுழலுமாந்தர்க்
காதியாகிய வறுதொழிலாளர்
ஓதலோவா வொற்றியூர
சிறுவர்தஞ்செய்கையிற் படுத்து
முறுவலித்திருத்திநீ முகப்படுமளவே.
6
அளவினிலிறந்த பெருமையையாயினும்
எனதுளமகலா வொடுங்கிரிநின்றுளையே
மெய்யினையிறந்த மெய்யினையாயினும்
வையகமுழுதுநின் வடிவெனப்படுமே
கைவலத்திலைநீ யெனினுங்காதல்
செய்வோர்வேண்டுஞ் சிறப்பொழியாயே
சொல்லியவகையாற் றுணையலையாயினும்
நல்லுயிர்கூட்ட நாயகனீயே
எங்குமுள்ளோ யெனினும்வஞ்சனை
தங்கியவரைச் சார்விலைநீயே
அஃதான்று
பிறவாப்பிறவியை பெருகாப்பெருமையை
துறவாத்துறவியை தொடராத்தொடர்ச்சியை
நுகராநுகர்ச்சியை நுணுகாநுணுக்கினை
அகலாவகற்சியை யணுகாவணிமையை
செய்யாச்செய்கையை சிறவாச்சிறப்பினை
வெய்யைதணியை விழுமியைநொய்யை
செய்யைபசியை வெளியைகரியை
ஆக்குதியழித்தி யானபல்பொருள்
நீக்குதிதொகுத்தி நீங்குதியடைதி
ஏனையவாகிய வெண்ணில்பல்குணம்
நினைதொறுமயக்கு நீர்மையவாதலின்
ஒங்குகடலுடுத்த வொற்றியூர
ஈங்கிதுமொழிவார் தம்
சொன்னிலைசுருங்கினல்லது
நின்னியலறிவோர் யாரிருநிலத்தே.
7
நிலத்திடைப்பொறையா யவாவினினீண்டு
சொலத்தகுபெருமைத் தூராவாக்கை
மெய்வளியையொடு பித்தொன்றாக
ஐவகைனெடுங்காற் றாங்குடனடிப்ப
நரையெனுநுரையே நாடொறும்வெளுப்பத்
திரையுடைத்தோலே செழுந்திரையாகக்
கூடியகுருதி நீரினுணிறைந்து
மூடியவிரும லோசையின்முழங்கிச்
சுடுபசிவெகுளிச் சுறலினமெறியக்
குடரெனு[3] மாலாக் கூட்டம்வந்தொலிப்ப
ஊன்றடியெலும்பி னுட்டிடலடைந்து
தோன்றியபல்பிணிப் பின்னகஞ்சுழலக்
கால்கையினரம்பே கண்டமாக
மேதகுநிணமே மெய்ச்சாலாக
முழக்குடைத்துளையே முகங்களாக
வழுக்குடைமூக்கா றோதம்வந்தொலிப்ப
இப்பரிசியற்றிய வுடலிருங்கடலுட்
டுப்புரவென்னுஞ் சுழித்தலைப்பட்டிங்
காவாவென்னுநின் னருளினைப்பெற்றவர்
நாவாயாகிய நாதநின்பாத
முந்திச்சென்று முறைமையின்வணங்கிச்
சிந்தைக்கூம்பினைச் செவ்வியலிருத்தி
உருகிய்வார்வப் பாய்பூரித்துப்
பெருகியநிறையெனுங் கயிற்றிடைப்பிணித்துத்
துன்னியசுற்றச் சுடர்க்கயிறறுத்து
மன்னியவொருமைப்f பொறியினைமுறுக்கிக்
காமப்பாரெனுங் கடுவெளியற்ற
தூம்ச்சோதிச் சுடர்க்குற நிறுத்திச்
சுருங்காவுணர்ச்சித் துடுப்பினைத்துழாவி
நெருங்காவளவி னீள்கரையேற்ற
வாங்கயாத்திரை போக்குதிபோலும்
ஓங்குகடலுடுத்த வொற்றியூரோயே.
[3] ஆலா - ஓர்வகை நீர்ப்பறவை.
8
ஒற்றியூர வுலவாநின்குணம்
பற்றியாரப் பரவுதல்பொருட்டா
என்னிடைப்பிறந்த வின்னாப்புன்மொழி
நின்னிடையணுகா நீர்மையவாதலின்
ஆவலித்தழுதலி லகன்றதம்மனைக்
கேவலஞ்சேய்மையிற் கேளாளாயினும்
பிறித்தற்கரிய பெற்றியதாகிக்
குறைவினிலார்த்துங் குழவியதியல்வினை
யறியாதெண்ணி லூழிப்பிறவியின்
மயங்கிக்கண்ணிலர் கண்பெற்றாங்கே
தாய்தலைப்படநின் றாளிணைவணக்கம்
வாய்தலையறியா மயக்குறும்வினையேன்
மல்கியவின்பத் தோடுடன்கூடிய
வெல்லையிலவாவினி லியற்றியவாகக்
கட்டியநீயே யவிழ்க்கினல்ல
தெட்டனையாயினும் யானிதற்கறியேன்
றுன்னிடையிருளெனுந் தூற்றிடையொதுங்கி
வெள்ளிடைகாண விருப்புறுவினையேன்
றந்தையுந்தாயுஞ் சாதியுமறிவுநஞ்
சிந்தையுந்திருவுஞ் செல்கதித்திறனுந்
துன்பமுந்துறவுந் தூய்மையுமறிவு
மின்பமும்புகழு மிவைபலபிறவுஞ்
சுவையொளியூரோசை நாற்றந்தோற்ற
மென்றிவைமுதலா விளங்குவவெல்லா
மொன்றநின்னடிக்கே யொருங்குடன்வைத்து
நின்றனன்றனியே நின்னடியல்லது
சார்வுமற்றின்மையிற் றளர்ந்தோர்காட்சிச்
சேர்விடமதனைத் திறப்படநாடி
யெய்துதற்கரியோ யானினிச்
செய்வதுமறிவனோ தெரியுங்காலே
9
காலற்சீறிய கழலோய்போற்றி
மூலத்தொகுதி முதல்வ போற்றி
ஒற்றிமாநக ருடையோய்போற்றி
முற்றுமாகிய முதல்வபோற்றி
யணைதொறுஞ்சிறக்கு மமிர்தேபோற்றி
யிணைபிறிதில்லா வீசபோற்றி
யார்வஞ்செய்பவர்க் கணியோய்போற்றி
தீர்விலின்சுவைத் தேனேபோற்றி
வஞ்சனைமாந்தரை மறந்தோய்போற்றி
நஞ்சினையமிர்தா நயந்தோய்போற்றி
விரிகடல்வையக வித்தேபோற்றி
புரிவுடைவனமாப் புணர்ந்தோய்போற்றி
காணமுன்பொருள் கருத்துறைசெம்மைக்
காணியாகிய வரனேபோற்றி
வெம்மைதண்மையென் றிவைகுணமுடைமையிற்
பெண்ணோடாணெனும் பெயரோய்போற்றி
மேவியவவர்தமை வீட்டினிற்படுக்குந்
தீபமாகிய சிவனே போற்றி.
மாலோய்போற்றி மறையோய்போற்றி
மேலாய்போற்றி வேதியபோற்றி
சந்திரபோற்றி தழலோய்போற்றி
யிந்திரபோற்றி யிறைவபோற்றி
யமராபோற்றி யழகாபோற்றி
குமராபோற்றி கூத்தாபோற்றி
பொருளேபோற்றி போற்றியென்றுனை
நாத்தழும்பிருக்க நவிற்றினல்ல
தேற்றுதற்குரியோர் யாரிருநிலத்தே.
10
18. திருப்பாடற்றிரட்டு
திருவெண்காட்டுத் திருவிசைப்பா
பூதமுங்கரணம் பொறிகளைம்புலனும் பொருந்திய குணங்க
ளோர்மூன்றும், நாதமுங்கடந்தவெளியிலேநீயுநானுமாய்நிற்குநாளு
ளதோ, வாதமுஞ்சமயபேதமுங்கடந்த மனோலய வின்பசாகரனே,
ஏதுமொன்றறியேன்யாதுநின்செயலே யிறைவனேயேகநாயகனே.
1
யாவரேயிருந்தும் யாவரேவாழ்ந்தும் யாவரேயெமக்குறவாயும்,
தேவரீரல்லாற் றிசைமுகமெனக்குத் திருவுளமறிய வேறுளதோ,
பாவலானொருவன் செந்தமிழ்க்கிரங்கிப் பரவையாருடலைமாற்ற,
ஏவலாளாகியிரவெலாமுழன்றவிறைவனே யேகநாயகனே.
2
உண்டதேயுண்டு முடுத்ததேயுடுத்து மடுத்தடுத்துரைத்த யுரைத்தும்,
கண்டதேகண்டுங் கேட்டதேகேட்டுங் கழிந்தனக நாளெல்லாம்,
விண்டதா மரைமேலன்னம் வீற்றிருக்கும்விழ வீதிவெண்காடா,
அண்டரேபோற்ற வம்பலத்தாடுமையனேயு மாறருளே.
3
வேறு
மத்தளையிருண்டானுமலர்மிசைமன்னினானும்
நித்தமுந்தேடிக்காணாநிமலனே யமலமூர்த்தி
செய்த்தளைக்கயல்பாய்நாங்கூர்ச்சேந்தனைவேந்தனிட்ட
கைத்தளைநீக்கியென்முன் காட்டுவெண்காட்டுளானே.
திருச்செங்காடு
நெருப்பானமேனியர்செங்காட்டிலாத்திநிழலருகே
யிருப்பார்திருவுளமெப்படி யோவின்னமென்னையன்னைக்
கருப்பாசயக்குழிக்கேதள்ளுமோகண்ணன்காணரிய
திருப்பாதமேதருமோதெரியாதுசிவன்செயலே.
திருவொற்றியூர்
ஐயுந்தொடர்ந்துவிழியுஞ்செருகியறிவழிந்து
மெய்யும்பொய்யாகிவிடுகின்றபோதொன்று வேண்டுவன்யான்
செய்யுந்திருவொற்றியூருடையீர்திருநீறுமிட்டுக்
கையுந்தொழப்பண்ணியைந்தெழுத்தோதவுங்கற்பியுமே.
சுடப்படுவாரறியார்புரமூன்றையுஞ்சுட்டபிரான்
றிடப்படுமாமதிற்றென்னொற்றியூரன்றெருப்பரப்பி
னடப்பவர்பொற்பதநந்தலைமேற்படநன்குருண்டு
கிடப்பதுகாண்மனமேவிதியேட்டைக்கிழிப்பதுவே.
திருவிடைமருதூர்
காடேதிரிந்தென்னகாற்றேபுசித்தென்னகந்தைசுற்றி
யோடேயெடுத்தென்னவுள்ளன்பிலாதவரோங்குவிண்ணோர்
நாடேயிடைமருதீசர்க்குமெய்யன்பர்நாரியர்பால்
வீடேயிருப்பினுமெய்ஞ்ஞானவீட்டின்பமேவுவரே.
1
தாயும்பகைகொண்டபெண்டீர்பெரும்பகைதன்னுடைய
சேயும்பகையுறவோரும்பகையிச்செகமும்பகை
யாயும்பொழுதிலருஞ்செல்வநீங்கிலிங்காதலினாற்
றோயுநெஞ்சேமருதீசர்பொற்பாதஞ்சுதந்திரமே.
2
திருக்கழுக்குன்றம்
காடோசெடி யோகடற்புறமோகனமேமிகுந்த
நாடோநகரோநகர்நடுவோநலமேமிகுந்த
வீடோபுறந்திண்ணையோதமியேனுடல்வீழுமிட
நீடோய்கழுக்குன்றிலீசாவுயிர்த்துணைநின்பதமே.
திருக்காளத்தி
பத்தும்புகுந்துபிறந்துவளர்ந்துபட்டாடைசுற்றி
முத்தும்பவளமும்பூண்டோடியாடிமுடிந்தபின்பு
செத்துக்கிடக்கும்பிணத்தருகேயினிச்சாம்பிணங்கள்
நத்துங்கணக்கென்னகாண்கயிலாபுரிக்காளத்தியே.
1
பொன்னாற்பிரயோசனம் பொன்படைத்தாற்குண்டு பொன்ப
டைத்தோன், றன்னாற்பிரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டத்
தன்மையைப்போ, லுன்னாற்பிரயோசனம் வேணதெல்லாமுண்டு
னைப்பணியு, மெண்ணாற்பிரயோசனமேதுண்டு காளத்தியீசுரனே.
2
வாளான்மகவரிந்தூட்டவல்லேநல்லன்மாதுசொன்ன
சூளாலிளமைதுறக்கவல்லேனல்லன்றொண்டுசெய்து
நாளாறிற்கண்ணிடந்தப்பவல்லேனல்லனானினிச்சென்
றாளாவதெப்படியோதிருக்காளத்தியப்பருக்கே.
3
முப்போதுமன்னம்புசிக்கவுந்தூங்கவுமோகத்தினாற்
செப்போதிளமுலையாருடன்சேரவுஞ்சீவன்விடு
மப்போதுகண்கலக்கப்படவும்மமைத்தாயையனே
யெப்போதுகாணவல்லேன்றிருக்காளத்தியீசுரனே.
4
இரைக்கேயிரவும்பகலுந்திரிந்திங்கிளைத்துமின்னா
ரரைக்கேயவலக்குழியருகேயசும்பார்ந்தொழுகும்
புரைக்கேயுழலுந்தமியேனையாண்டருள்பொன்முகலிக்
கரைக்கேகல்லாலநிழற்கீழமர்ந்தருள்காளத்தியே.
5
நாறுங்குருதிச்சலதாரைதோற்புரைநாடொறுஞ்சீ
யூறுமலக்குழிகாமத்துவாரமொளித்திடும்புண்
டேறுந்தசைப்பிளப்பந்தரங்கத்துளசிற்றின்பம்விட்
டேறும்பதந்தருவாய்திருக்காளத்தியீசுரனே.
6
கைலாயம்
கான்சாயும்வெள்ளிமலைக்கரசேநின்கழனம்பினே
னூன்சாயுஞ்சென்மமொழித்திடுவாய்கரவூரனுக்காய்
மான்சாயச்செங்கைமழுவலஞ்சாயவனைந்தகொன்றைத்
தேன்சாயநல்லதிருமேனிசாய்த்தசிவக்கொழுந்தே.
1
இல்லந்துறந்துபசிவந்தபோதங்கிரந்துதின்று
பல்லுங்கறையற்றுவெள்வாயுமாயொன்றிற்பற்றுமின்றிச்
சொல்லும்பொருளுமிழந்துசுகானந்தத்தூக்கத்திலே
யல்லும்பகலுமிருப்பதென்றோகயிலாயத்தனே.
2
சினந்தனையற்றுப்பிரியமுந்தானற்றுச்செய்கையற்று
நினைந்ததுமற்றுநினையாமையுமற்றுநிர்ச்சிந்தனாய்த்
தனந்தனியேயிருந்தானந்தநித்திரைதங்குகின்ற
வனந்தலிலென்றிருப்பேனத்தனேகயிலாயத்தனே.
3
கையாரவேற்றுநின்றங்ஙனத்தின்றுகரித்துணியைத்
தையாதுடுத்துநின்சன்னிதிக்கேவந்துசந்ததமு
மெய்யாரநிற்பணிந்துள்ளேயுரோமம்விதிர்விதிர்ப்ப
வையாவென்றோலமிடுவதென்றோகயிலாயத்தனே.
4
நீறார்த்தமேனியுரோமஞ்சிலிர்த்துளநெக்குநெக்குச்
சேறாய்க்கசிந்துகசிந்தேயுருகிநின்சீரடிக்கே
மாறாத்தியானமுற்றானந்தமேற்கொண்டுமார்பிற்கண்ணீ
ராறாய்ப்பெருகக்கிடப்பதென்றோகயிலாயத்தனே.
5
செல்வரைப்பின்சென்றுசங்கடம்பேசித்தினந்தினமும்
பல்லினைக்காட்டிப்பரிதவியாமற்பரானந்தத்தி
னெல்லையிற்புக்கிடவேகாந்தமாயெனக்காமிடத்தே
யல்லலற்றென்றிருப்பேனத்தனேகயிலாயத்தனே.
6
மந்திக்குருளையொத்தேனில்லைநாயேன்வழக்கறிந்துஞ்
சிந்திக்குஞ்சிந்தையையனென்செய்வேனெனைத்தீதகற்றிப்
புந்திப்பரிவிற்குருளையையேந்தியபூசையைப்போ
லெந்தைக்குரியவன்காணத்தனேகயிலாயத்தனே.
7
வருந்தேன்பிறந்துமிறந்துமயக்கும்புலன்வழிபோய்ப்
பொருந்தேனரகிற்புகுகின்றிலேன்புகழ்வாரிடத்தி
லிருந்தேனினியவர்கூட்டம்விடேனியலஞ்செழுத்தா
மருந்தேனருந்துவனின்னருளாற்கயிலாயத்தனே.
8
மதுரை
விடப்படுமோ விப்பிரவஞ்சவாழ்க்கையை விட்டுமனந்
திடப்படுமோ நின்னருளின்றியே தினமேயலையக்
கடப்படுமோ வற்பர்வாயிலிற்சென்று கண்ணீர்ததும்பிப்
படப்படுமோ சொக்கநாதாசௌந்தரபாண்டியனே.
பொது
உடைகோவணமுண்டுறங்கப்புறந்திண்ணையுண்டுணவிங்
கடைகாயிலையுண்டருந்தத்தண்ணீருண்டருந்துணைக்கே
விடையேறுமீசர்திருநாமமுண்டிந்தமேதினியில்
வடகோடுயர்ந்தென்னதென்கோடுசாய்ந்தென்னவான்பிறைக்கே.
1
வீடுநமக்குத்திருவாலங்காடுவிமலர்தந்த
வோடுநமக்குண்டுவற்றாதபாத்திரமோங்குசெல்வ
நாடுநமக்குண்டுகேட்டதெல்லாந்தரநன்னெஞ்சமே
யீடுநமக்குச்சொலவோயொருவருமிங்கில்லையே.
2
நாடிக்கொண்டீசரைநாட்டமுற்றாயிலைநாதரடி
தேடிக்கொண்டாடித்தெளிந்தாயிலைசெகமாயைவந்து
மூடிக்கொண்டோமென்றுங்காமாயுதங்கண்முனிந்தவென்றும்
பீடிப்பையோநெஞ்சமேயுனைப்போலிலைப்பித்தர்களே.
3
கையொன்றுசெய்யவிழியொன்றுநாடக்கருத்தொன்றெண்ணப்
பொய்யொன்றுவஞ்சகநாவொன்றுபேசப்புலால்கமழு
மெய்யொன்றுசாரச்செவியொன்றுகேட்கவிரும்புமியான்
செய்கின்றபூசையெவ்வாறுகொள்வாய்வினைதீர்த்தவனே.
4
கண்ணுண்டுகாணக்கருத்துண்டுநோக்கக்கசிந்துருகிப்
பண்ணுண்டுபாடச்செவியுண்டுகேட்கப்பல்பச்சிலையா
லெண்ணுண்டுசாத்தவெதிர்நிற்கவீசனிருக்கையிலே
மண்ணுண்டுபோகுதையோகெடுவீரிந்தமாநுடமே.
5
சொல்லிலுஞ்சொல்லின்முடிவிலும்வேதச்சுருதியிலு
மல்லிலுமாசற்றவாகாயந்தன்னிலுமாய்ந்துவிட்டோ
ரில்லிலுமன்பரிடத்திலுமீசனிருக்குமிடங்
கல்லிலுஞ்செம்பிலுமோவிருப்பானெங்கள்கண்ணுதலே.
6
வினைப்போகமேயொருதேகங்கண்டாய்வினைதானொழிந்தாற்
றினைப்போதளவுநில்லாதுகண்டாய்சிவன்பாதநினை
நினைப்போரைமேவுநினையாரைநீங்கிந்நெறியினின்றா
லுனைப்போலொருவருண்டோமனமேயெனக்குற்றவரே.
7
பட்டைக்கிழித்துப்பருவூசிதன்னைப்பரிந்தெடுத்து
முட்டச்சுருட்டியென்மொய்குழலாள்கையின்முன்கொடுத்துக்
கட்டியிருந்தகனமாயக்காரிதன்காமமெல்லாம்
விட்டுப்பிரியவென்றோவிங்ஙனேசிவன்மீண்டதுவே.
8
சூதுற்றகொங்கையும்மானார்கலவியுஞ்சூழ்பொருளும்
போதுற்றபூசலுக்கென்செயலாஞ்செய்தபுண்ணியத்தால்
தீதற்றமன்னவன்சிந்தையினின்றுதெளிவதற்கோ
காதற்றவூசியைத்தந்துவிட்டானேன்றன்கைதனிலே.
9
வாதுற்றதிண்புயரண்ணாமலையர்மலர்ப்பதத்தைப்
போதுற்றெப்போதும்புகலுநெஞ்சேயிந்தப்பூதலத்திற்
றீறுற்றசெல்வமென்றேடிப்புதைத்ததிரவியமென்
காதற்றவூசியும்வாராதுகாணுங்கடைவழிக்கே.
10
வேதத்தினுட்பொருண்மண்ணாசைமங்கையைவிட்டுவிடப்
போதித்தவன்மொழிகேட்டிலையோசெய்தபுண்ணியத்தா
லாதித்தன்சந்திரன்போலேவெளிச்சமதாம்பொழுது
காதற்றவூசியும்வாராதுகாணுங்கடைவழிக்கே.
11
மனையாளுமக்களும்வாழ்வுந்தனமுந்தன்வாயின்மட்டே
யினமானசுற்றமயானமட்டேவழிக்கேதுதுணை
தினையாமளவெள்ளளவாகினுமுன்புசெய்ததவந்
தனையாளவென்றும்பாலோகஞ்சித்திக்குஞ்சத்தியமே.
12
அத்தமும்வாழ்வுமகத்துமட்டேவிழியம்பொழுக
மெத்தியமாதரும்வீதிமட்டேவிம்மிவிம்மியிரு
கைத்தலமேல்வைத்தழுமைந்தருஞ்சுடுகாடுமட்டே
பற்றிற்தொடருமிருவினைப்புண்ணியபாவமுமே.
13
சீயுங்குருதிச்செழுநீர்வழும்புஞ்செறிந்தெழுந்து
பாயும்புடைவையொன்றில்லாதபோதுபகலிரவா
யீயுமெறும்பும்புகுகின்றயோனிக்கிரவுபகன்
மாயுமனிதரைமாயாமல்வைக்கமருந்தில்லையே.
14
சீதப்பனிக்குண்டுசிக்கெனக்கந்தைதினம்பசித்தால்
நீதுய்க்கச்சோறுமனைதோறுமுண்டுநினைவெழுந்தால்
வீதிக்குணல்லவிலைமாதருண்டிந்தமேதினியி
லேதுக்குநீசலித்தாய்மனமேயென்றும்புண்படவே.
15
ஆறுண்டுதோப்புண்டணிவீதியம்பலந்தானுமுண்டு
நீருண்டுகந்தைநெடுங்கோவணமுண்டுநித்தநித்த
மாறுண்டுலாவிமயங்குநெஞ்சேமனைதோறுஞ்சென்று
சோறுண்டுதூங்கிப்பின்சும்மாவிருக்கச்சுகமுமுண்டே.
16
உடுக்கக்கவிக்கக்குளிர்காற்றுவெய்யிலெரடுங்கிவந்தாற்
றடுக்கப்பழையவொருவேட்டியுண்டுசகமுழுதும்
படுக்கப்புறந்திண்ணையெங்கெங்குமுண்டுபசித்துவந்தாற்
கொடுக்கச்சிவனுண்டுநெஞ்சேநமக்குக்குறைவில்லையே.
17
மாடுண்டுகன்றுண்டுமக்களுண்டென்றுமகிழ்வதெல்லாம்
கேடுண்டெனும்படிகேட்டுவிட்டோமினிக்கேண்மனமே
யோடுண்டுகந்தையுண்டுள்ளேயெழுத்தைந்துமோதவுண்டு
தோடுண்டகண்டனடியார்நமக்குத்துணையுமுண்டே.
18
மாத்தானவத்தையுமாயாபுரியின்மயக்கத்தையு
நீத்தார்தமக்கொருநிஷ்டையுண்டோநித்தனன்புகொண்டு
வேர்த்தார்குளித்துப்பசித்தாற்புசித்துவிழிதுயின்று
பார்த்தாலுலகத்தவர்போலிருப்பர்பற்றற்றவரே.
19
ஒன்றென்றிருதெய்வமுண்டென்றிருவுயர்செல்வமெல்லா
மன்றென்றிருபசித்தோர்முகம்பார்நல்லறமுநட்பு
நன்றென்றிருநடுநீங்காமலேநமக்கிட்டபடி
யென்றென்றிருமனமேயுனக்கேயுபதேசமிதே.
20
நாட்டமென்றேயிருசற்குருபாதத்தைநம்புபொம்ம
லாட்டமென்றேயிருபொல்லாவுடலையடர்ந்தகந்தைக்
கூட்டமென்றேயிருசுற்றத்தைவாழ்வைக்குடங்கவிழ்நீ
ரோட்டமென்றேயிருநெஞ்சேயுனக்குபதேசமிதே.
21
என்செயலாவதியாதொன்றுமில்லையினித்தெய்வமே
யுன்செயலேயென்றுணரப்பெற்றேனிந்தவூனெடுத்த
பின்செய்ததீவினையாதொன்றுமில்லைப்பிறப்பதற்கு
முன்செய்ததீவினையோவிங்ஙனேவந்துமூண்டதுவே.
22
திருவேடமாகித்தெருவிற்பயின்றெனைத்தேடிவந்து
பரிவாகப்பிச்சைபகருமென்றானைப்பதம்பணிந்தேன்
கருவாகுமேதக்கடற்கரைமேவக்கருதுமென்னை
யுருவாக்கிக்கொள்ளவல்லோவிங்ஙனேசிவனுற்றதுவே.
23
விட்டேனுலகம்விரும்பேனிருவினைவீணருடன்
கிட்டேனவருரைகேடுமிரேன்மெய்கெடாதநிலை
தொட்டேன்சுகதுக்கமற்றுவிட்டேன்றொல்லைநான்மறைக்கு
மெட்டேனெனும்பரமென்னிடத்தேவந்திங்கெய்தியதே.
24
அட்டாங்கயோகமுமாதாரமாறுமவத்தையைந்தும்
விட்டேறிப்போனவெளிதனிலேவியப்பொன்றுகண்டேன்
வட்டாகிச்செம்மதிப்பாலூறலுண்டுமகிழ்ந்திருக்க
வெட்டாதபேரின்பமென்னைவிழுங்கியிருக்கின்றதே.
25
எரியெனக்கென்னும்புழுவோவெனக்கென்னுமிந்தமண்ணுஞ்
சரியெனக்கென்னும்பருந்தோவெனக்கெனுந்தான்புசிக்க
நரியெனக்கென்னும்புன்னாயெனக்கென்னுமிந்நாறுடலைப்
பிரியமுடன்வளர்த்தேனிதனாலென்னபேறெனக்கே.
26
அண்ணறன்வீதியரசிருப்பாகுமணிபடையோர்
நண்ணொருநாலொன்பதாமவரேவலுநண்ணூமிவ்வூர்
துண்ணென்பசிக்குமடைப்பள்ளியானசுகமுமெல்லா
மெண்ணிலிகாலமவமேவிடுத்தனமெண்ணரிதே.
27
என்பெற்றதாயருமென்னைப்பிணமென்றிகழ்ந்துவிட்டார்
பொன்பெற்றமாதரும்போவென்றுசொல்லிப்புலம்பிவிட்டார்
கொன்பெற்றமைந்தரும்பின்வலம்வந்துகுடமுடைத்தா
றான்பற்றொழியவொருபற்றுமில்லையுடையவனே.
28
கறையற்றபல்லுங்கரித்துணியாடையுங்கள்ளமின்றிப்
பொறையுற்றநெஞ்சமும்பொல்லாதவூணும்புறந்திண்ணையுந்
தறையிற்கிடப்புமிரந்துண்ணுமோடுஞ்சகமறியக்
குறைவற்றசெல்வமென்றேகோலமாமறைகூப்பிடுமே.
29
எட்டுத்திசையும்பதினாறுகோணமுமெங்குமொன்றாய்
முட்டித்ததும்பிமுளைத்தோங்குசோதியைமூடரெல்லாங்
கட்டிச்சுருட்டித்தங்கக்கக்கத்தில்வைப்பர்கருத்தில்வையார்
பட்டப்பகலையிரவென்றுகூறிடும்பாதகரே.
30
வாய்நாறுமூழன்மயிர்ச்சிக்குநாறிடுமையிடுங்கண்
பீநாறுமங்கம்பிணவெடிநாறும்பெருங்குழிவாய்ச்
சீநாறும்யோனியழனாறுமிந்தியச்சேறுசிந்திப்
பாய்நாறுமங்கையர்க்கோவிங்ஙனேமனம்பற்றியதே.
31
உரைக்கைக்குநல்லதிருவெழுத்தைந்துண்டுரைப்படியே
செருக்கித்தரிக்கத்திருநீறுமுண்டுதெருக்குப்பையிற்
றரிக்கக்கரித்துணியாடையுமுண்டெந்தச்சாதியிலு
மிரக்கத்துணிந்துகொண்டேன்குறைவேதுமெனக்கில்லையே.
32
ஏதப்பட்டாயினிமேற்படும்பாட்டையிதென்றறிந்து
போதப்பட்டாயில்லைநல்லோரிடஞ்சென்றுபுல்லறிவால்
வாதைப்பட்டாய்மடமானார்கல்விமயக்கத்திலே
பேதைப்பட்டாய்நெஞ்சமேயுனைப்போலில்லைபித்தருமே.
33
சுரப்பற்றுவல்வினைசுற்றமுமற்றுத்தொழில்களற்றுக்
கரப்பற்றுமங்கையர்கையிணக்கற்றுக்கவலையற்று
வரப்பற்றுநாதனைவாயாரவாழ்த்திமனமடங்கப்
பரப்பற்றிருப்பதன்றோபரமாபரமானந்தமே.
34
பேய்போற்றிரிந்துபிணம்போற்கிடந்திட்டபிச்சையெல்லா
நாய்போலருந்திநரிபோலுழன்றுநன்மங்கையரைத்
தாய்போற்கருதித்தமர்போலனைவர்க்குந்தாழ்மைசொல்லிச்
சேய்போலிருப்பர்கண்டீருண்மைஞானந்தெளிந்தவரே.
35
விடக்கேபருந்தின்விருந்தேகமண்டலவீணனிட்ட
முடக்கேபுழுவந்துறையிடமேநலமுற்றுமிலாச்
சடக்கேகருவிதளர்ந்துவிட்டாற்பெற்றதாயுந்தொடாத்
தொடக்கேயுனைச்சுமந்தேனின்னினேதுசுகமெனக்கே.
36
அழுதாற்பயனென்னநொந்தாற்பயனென்னவாவதில்லை
தொழுதாற்பயனென்னநின்னையொருவர்சுடவுரைத்த
பழுதாற்பயனென்னநன்மையுந்தீமையும்பங்கயத்தோ
னெழுதாப்படிவருமோசலியாதிரென்னேழைநெஞ்சே.
37
செல்வரைப்பின்சென்றுபசாரம்பேசித்தினந்தினமும்
பல்லினைக்காட்டிப்பரிதவியாமற்பரானந்தத்தி
னெல்லையிற்புக்குநல்லேகாந்தமாயெனக்காமிடத்தே
யல்லலற்றென்றிருபேனாலநீழலரும்பொருளே.
38
ஊரீருமக்கோருபதேசங்கேளுமுடம்படங்கப்
போரீர்சமணைக்கழுவேற்றுநீற்றைப்புறந்திண்ணையிற்
சாரீரனந்தலைச்சுற்றத்தைநீங்கிச்சகநகைக்க
வேரீருமக்கவர்தாமேதருவரிணையடியே.
39
நீற்றைப்புனைந்தென்னநீராடப்போயென்னநீமனமே
மாற்றிப்பிறக்கவகையறிந்தாயில்லைமாமறைநூ
லேற்றிக்கிடக்குமெழுகோடிமந்திரமென்னகண்டா
யாற்றிற்கிடந்துந்துறையறியாமலலைகின்றையே.
40
ஓங்காரமாய்நின்றவந்துவிலேயொருவித்துவந்து
பாங்காய்முளைத்தபயனறிந்தாற்பதினாலுலகு
நீங்காமனீங்கிநிறையாநிறைத்துநிறையுருவா
யாங்காரமானவர்க்கெட்டர்க்கனிவந்தமர்ந்திடுமே.
41
விதியார்படைப்புமரியாரளிப்பும்வியன்கயிலைப்
பதியார்தொடைப்புநம்பாலணுகாதுபரானந்தமே
கதியாகக்கொண்டுமற்றெல்லாந்துயிலிற்கனவெனநீ
மதியாதிருமனமேவிதுகாணன்மருந்துனக்கே.
42
நாய்க்குண்டுதெண்டுநமக்குண்டுபிச்சைநமனைவெல்ல
வாய்க்குண்டுமந்திரபஞ்சாட்சரமதியாமல்வரும்
பேய்க்குண்டுநீறுதிகைப்புண்டுநின்றபிறவிப்பிணி
நோய்க்குண்டுதேசிகன்றன்னருணோக்கங்கணோக்குதற்கே.
43
நேமங்கணிட்டைகள்வேதங்களாகமநீதிநெறி
யோமங்கடர்ப்பணஞ்சந்திசெபமந்த்ரயோகநிலை
நாமங்கள்சந்தனம்வெண்ணீருபூசிநலமுடனே
சாமங்கடோறுமிவர்செய்யும்பூசைகள்சர்ப்பனையே.
44
நானெத்தனைபுத்திசொன்னாலுங்கேட்டிலைநன்னெஞ்சமே
யேனிப்படிக்கெட்டுழலுகின்றாயினியேதுமிலா
வானத்தின்மீனுக்குவன்றூண்டிவிட்டவகயைதுபோற்
போனத்தைமீளநினைக்கின்றனையென்னபுத்தியிதே.
45
அஞ்சக்கரமெனுங்கோடாலிகொண்டிந்தவைம்புலனாம்
வஞ்சப்புலக்கட்டைவேரறவெட்டிவளங்கள்செய்து
விஞ்சத்திருத்திச்சதாசிவமென்கின்றவித்தையிட்டுப்
புஞ்சக்களைபறித்தேன்வளர்த்தேன்சிவபோகத்தையே.
46
தாயாருஞ்சுற்றமும்பெண்டிருங்கைவிட்டுத்தாழ்ந்திடுநா
ணீயாருநானாரெனப்பகர்வாரந்தநேரத்திலே
நோயாரும்வந்துகுடிகொள்வரேகொண்டநோயுமொரு
பாயாருநீயுமல்லாற்பின்னையேதுநட்பாமுடலே.
47
ஆயும்பொழுதுமயிர்க்கால்கடோறுமருங்கிருமி
தோயுமலக்குட்டையாகியகாயத்தைச்சுட்டுவிட்டாற்
பேயுநடனமிடுங்கடமாமென்றுபேசுவதை
நீயுமறிந்திலையோபொருடேடநினைந்தனையே.
48
பூணும்படிக்கல்லபொன்னுக்குத்தானல்லபூமிதனைக்
காணும்படிக்கல்லமங்கையர்க்கல்லநற்காட்சிக்கல்ல
சேணுங்கடந்தசிவனடிக்கல்லவென்சிந்தைகெட்டுச்
சாணும்வளர்க்கவடியேன்படுந்துயர்சற்றல்லவே.
49
வெட்டாதசக்கரம்பேசாதமந்திரம்வேறொருவர்க்
கெட்டாதபுட்பமிறையாததீர்த்தமினிமுடிந்து
கட்டாதலிங்கங்கருதாதநெஞ்சங்கருத்தினுள்ளே
முட்டாதபூசையன்றோகுருநாதன்மொழிந்ததுவே.
50
எருமுட்டைபிட்கினுதிர்ந்திடுஞ்செல்லுக்கெவரழுவார்
கருமுட்டைபுக்குக்கழலகன்றாய்கனதுக்கமதாய்ப்
பெருமுட்டுப்பட்டவர்போலழும்பேதையிர்பேத்துகிறீ
ரொருமுட்டும்வீட்டுமரனாமமென்றைக்குமோதுமினே.
51
மையாடுகண்ணியுமைந்தரும்வாழ்வுமனையுஞ்செந்தீ
யையாநின்மாயையுருவெளித்தோற்றமகிலத்துள்ளே
மெய்யாயிருந்ததுநாட்செலநாட்செலவெட்டவெறும்
பொய்யாய்ப்பழங்கதையாய்க்கனவாய்மெல்லபோனதுவே.
52
ஆயாய்பலகலையாய்ந்திடுந்தூயவருந்தவர்பாற்
போயாகிலுமுண்மையைத்தெரிந்தாயில்லைபூதலத்தில்
வேயார்ந்ததோளியர்காமவிகாரத்தில்வீழ்ந்தழுந்திப்
பேயாய்விழிக்கின்றனைமனமேயென்னபித்துனக்கே.
53
அடியாருறவுமரன்பூசைநேசமுமன்புமன்றிப்
படிமீதில்வேறுபயனுளதோபங்கயன்வகுத்த
குடியானசுற்றமுந்தாரமும்வாழ்வுங்குயக்கலங்கள்
தடியாலடியுண்டவாறொக்குமென்றினஞ்சார்ந்திலரே.
54
ஆங்காரபொக்கசங்கோபக்களஞ்சியமாணவந்தா
னீங்காவரண்மனைபொய்வைத்தகூடம்விண்ணீடிவளர்
தேங்காற்பெருமதிற்காமவிலாசமித்தேகங்கந்தல்
பாங்காயுனைப்பணிந்தெப்படிஞானம்பலிப்பதுவே.
55
ஒழியாப்பிறவியெடுத்தேங்கியேங்கியுழன்றநெஞ்சே
யழியாப்பதவிக்கவுடதங்கேட்டியனாதியனை
மழுமான்கரத்தனைமால்விடையானைமனத்திலுன்னி
விழியாற்புனல்சிந்திவிம்மியழுநன்மைவேண்டுமென்றே.
56
நாய்க்கொருசூலுமதற்கோர்மருத்துவநாட்டிலுண்டோ
பேய்க்கொருஞானம்பிடிபடுமோபெருங்காஞ்சிரங்கா
யாக்குவராரதருந்துவராரதுபோலுடம்பு
தீக்கிரையாவதல்லாலேதுக்காமிதைச்செப்புமினே.
57
கச்சிற்கிடக்குங்கனதனத்திற்கடைக்கண்கள்பட்டே
யிச்சித்திருக்கின்றவேழைநெஞ்சேயிமவான்பயந்த
பச்சைப்பசுங்கொடியுண்ணாமுலைபங்கர்பாதத்திலே
தைச்சுக்கிடமனமேயொருகாலுந்தவறில்லையே.
58
மானார்விழியைக்கடந்தேறிவந்தனன்வாழ்குருவுங்
கோனாகியென்னைக்குடியேற்றிக்கொண்டனன்குற்றமில்லை
போனாலும்பேறிருந்தாலுநற்பேறிதுபொய்யன்றுகா
னானாலுமிந்தவுடம்போடிருப்பதருவருப்பே.
59
சற்றாகினுந்தன்னைத்தானறியாய்தனையாய்ந்தவரை
யுற்றாகிலுமுரைக்கப்பொருந்தாயுனக்கானநிலை
பற்றாய்குருவைப்பணியாய்பரத்தையர்பாலிற்சென்றேன்
பெற்றாய்மடநெஞ்சமேயுனைப்போலில்லைபித்தனுமே.
60
உளியிட்டகல்லையுமொப்பிட்டசாந்தையுமூத்தையறப்
புளியிட்டசெம்பையும்போற்றுகிலேனுயர்பொன்னெனவே
யொளியிட்டதாளிரண்டுள்ளேயிருத்துவதுண்மையென்று
வெளியிட்டடைத்துவைத்தேனினிமேலொன்றும்வேண்டிலனே.
61
தாயாருக்குத்தகனகிரியை செய்கையிற்பாடிய வெண்பா
ஐயிரண்டுதிங்களாவங்கமெலாநொந்துபெற்றுப்
பையலென்றபோதேபரிந்தெடுத்துச் -செய்யவிரு
கைப்புறத்திலேந்திக்கனகமுலைதந்தாளை
யெப்பிறப்பிற்காண்பேனினி.
1
முந்தித்தவங்கிடந்துமுந்நூறுநாட்சுமந்தே
யந்திபகலாச்சிவனையாதரித்துத் -தொந்தி
சரியச்சுமந்துபெற்றதாயார்தமக்கோ
வெரியத்தழன்மூட்டுவேன்.
2
வட்டிலிலுந்தொட்டிலிலுமார்மேலுந்தோண்மேலுங்
கட்டிலிலும்வைத்தென்னைக்காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக்காப்பாற்றிச்சீராட்டுந்தாய்க்கோ
விறகிலிட்டுத்தீமூட்டுவேன்.
3
நொந்துசுமந்துபெற்றுநோவாமலேந்திமுலை
தந்துவளர்ந்தெடுத்துத்தாழாமே - யந்திபகல்
கையிலேகொண்டென்னைக்காப்பாற்றுந்தாய்தனக்கோ
மெய்யிலேதீமூட்டுவேன்.
4
அரிசியோநானிடுவேனாத்தாடனக்கு
வரிசையிட்டுப்பாத்துமகிழாம - லுருசியுள்ள
தேனேயமிர்தமேசெல்வத்திரவியபு
மானேயனவழைத்தவாய்க்கு.
5
அள்ளியிடுவதரிசியோதாய்தலைமேற்
கொள்ளிதனைவைப்பேனோகூசாமன் - மெள்ள
முகமேன்முகம்வைத்துமுத்தாடியென்றன்
மகனேயெனவழைத்தவாய்க்கு.
6
விருத்தம்
முன்னையிட்டதீமுப்புரத்திலே
பின்னையிட்டதீதென்னிலங்கையி
லன்னையிட்டதீயடிவயிற்றிலே
யானுமிட்டதீமூள்கமூள்கவே.
7
வெண்பா
வேகுதேதீயதனில்வெந்துபொடிசாம்ப
லாகுதேபாவியேனையகோ - மாகக் குருவிபறவாமற்கோதாட்டியென்னைக்
கருதிவளர்த்தெடுத்தகை.
8
வெந்தாளோசோணகிரிவித்தகாநின்பதத்தில்
வந்தாளோவென்னைமறந்தாளோ - சந்ததமு
முன்னையேநோக்கியுகந்துவரங்கிடந்தென்
றன்னையயீன்றெடுத்ததாய்.
9
வீற்றிருந்தாளன்னைவீதிதனிலிருந்தாள்
நேற்றிருந்தாளின்றுவெந்துநீறானாள் - பாற்றெளிக்க
வெல்லீரும்வாருங்களேதென்றிரங்காமல்
எல்லாஞ் சிவமயமே யாம்.
10
தனிவெண்பா
இடைமருது
மென்றுவிழுங்கிவிடாய்கழிக்கநீர்தேட
லென்றுவிடியுமெனக்கென்கோவே - நன்றி
கருதார்புரமூன்றுங்கட்டழலாற்செற்ற
மருதாவுன்சந்நிதிக்கேவந்து.
1
ஒற்றி
கண்டங்கரியதாங்கண்மூன்றுடையதா
மண்டத்தைப்போலவழகியதாந் - தொண்ட
ருடலுருகத்தித்திக்குமோங்குபுகழொற்றிக்
கடலருகேநிற்குங்கரும்பு.
2
ஒடுவிழுந்துசீப்பாயுமொன்பதுவாய்ப்புண்ணுக்
கிடுமருந்தையானறிந்துகொண்டேன் - கடுவருந்துந்
தேவாதிதேவன்றிருவொற்றியூர்த்தெருவிற்
பெ*ரு*வாரடியிற்பொடி.
3
வாவியெல்லாந்தீர்த்தமணலெல்லாம்வெண்ணீறு
காவனங்களெல்லாங்கணநாதர் - பூவுலகி
லீதுசிவலோகமென்றென்றேமெய்த்தவத்தோ
ரோதுந்திருவொற்றியூர்.
4
திருவாரூர்
ஆரூரரிங்கிருக்கவவ்வூர்த்திருநாளென்
றூரூர்கடோறுமுழலுவீர் - நேரே
யுளக்குறிப்பைநாடாதவூமர்காணீவிர்
விளக்கிருக்கத்தீத்தேடுவீர்.
5
எருவாய்க்கிருவிரன்மேலேறுண்டிருக்குங்
கருவாய்க்கோகண்கலக்கப்பட்டாய் - திருவாரூர்த்
தேரோடும்வீதியிலேசெத்துக்கிடக்கின்றாய்
நீரோடுந்தாரைக்காநீ.
6
திருக்காஞ்சி
எத்தனையூரெத்தனைவீடெத்தனைதாய்பெற்றவர்க
ளெத்தனைபேரிட்டழைக்கவேனென்றே - னித்த
மெனக்குக்களையாற்றாயேகம்பாகம்பா
வுனக்குத்திருவிளையாட்டோ.
7
கச்சிக்காரோணம்
அத்திமுதலெறும்பீறானவுயிரத்தனைக்குஞ்
சித்தமகிழ்ந்தளிக்குந்தேசிகா - மெத்தப்
பசிக்குதையாபாவியேன்பாழ்வயிற்றைப்பற்றி
யிசிக்குதையாகாரோணரே.
8
திருக்காளத்தி
பொய்யையொழியாய்புலாலைவிடாய்காளத்தி
யையரையெண்ணாயறஞ்செய்யாய் - வெய்ய
சினமேயொழியாய்திருவெழுத்தைந்தோதாய்
மனமேயுனக்கென்னமாண்பு.
9
திருவிருப்பையூர்
மாதாவுடல்சலித்தாள்வல்லினையேன்கால்சலித்தேன்
வேதாவுங்கைசலித்துவிட்டானே - நாதா
விருப்பையூர்வாழ்சிவனேயின்னமோரன்னை
கருப்பையூர்வாராமற்கா.
10
திருவையாறு
மண்ணுந்தணலாறவானும்புகையாற
வெண்ணரியதாயுமிளைப்பாறப் - பண்ணுமயன்
கையாறவுமடியேன்காலாறவுங்கண்பா
ரையாதிருவையாறா.
11
குற்றாலம்
காலன்வருமுன்னேகண்பஞ்சடைமுன்னே
பாலுண்கடைவாய்படுமுன்னே - மேல்விழுந்தே
யுற்றாரழுமுன்னேயூரார்சுடுமுன்னே
குற்றாலத்தானையேகூறு.
12
பொதுவெண்பா
சிற்றம்பலமுஞ்சிவனுமருகிருக்க
வெற்றம்பலந்தேடிவிட்டோமே - நித்தம்
பிறந்திடத்தைத்தேடுதேபேதைமடநெஞ்சங்
கறந்திடத்தைநாடுதேகண்.
1
தோடவிழும்பூங்கோதைத்தோகையுனையிப்போது
தேடினவர்போய்விட்டார்தேறியிரு - நாடிநீ
யென்னைநினைத்தாலிடுப்பிலுதைப்பேனா
னுன்னைநினைத்தாலுதை.
2
வாசற்படிகடந்துவாராதபிச்சைக்கிங்
காசைப்படுவதில்லையண்ணலே - யாசைதனைப்
பட்டிறந்தகாலமெலாம்போதும்பரமேட்டி
சுட்டிறந்தஞானத்தைச்சொல்.
3
நச்சரவம்பூண்டானைநன்றாத்தொழுவதுவு
மிச்சையிலேதானங்கிருப்பதுவும் - பிச்சைதனை
வாங்குவதுமுண்பதுவும்வந்துதிருவாயிலிலே
தூங்குவதுந்தானேசுகம்.
4
இருக்குமிடந்தேடியென்பசிக்கேயன்ன
முருக்கமுடன்கொண்டுவந்தாலுண்பேன் - பெருக்க
வழைத்தாலும்போகேனரனேயென்றேக
மிளைத்தாலும்போகேனினி.
5
விட்டுவிடப்போகுதுயர்விட்டவுடனேயுடலைச்
சுட்டுவிடப்போகின்றார்சுற்றத்தார் - பட்டதுபட் டெந்நேரமுஞ்சிவனையேத்துங்கள்போற்றுங்கள்
சொன்னேனதுவேசுகம்.
6
ஆவியொடுகாயமழிந்தாலுமேதினியிற்
பாவியென்றுநாமம்படையாதே - மேவியசீர்
வித்தாரமுங்கடம்பும்வேண்டாமடநெஞ்சே
செத்தாரைப்போலேதிரி.
7
வெட்டவெளியானவெளிக்குந்தெரியாது
கட்டளையுங்கைப்பணமுங்காணாதே - இட்டமுடன்
பற்றென்றார்பற்றாதுபாவியேனெஞ்சிலவன்
இற்றெனவேவைத்தவினிப்பு.
8
பின்முடுகு வெண்பா.
இப்பிறப்பைநம்பியிருப்பரோநெஞ்சகமே
வைப்பிருக்கவாயின்மனையிருக்கச் - சொப்பனம்போல்
விக்கிப்பற்கிட்டக்கண்மெத்தப்பஞ்சிட்டப்பைக்
கச்சிச்செத்துக்கொட்டக்கண்டு.
9
மேலுமிருக்கவிரும்பினையேவெள்விடையோன்
சீலமறிந்திலையேசிந்தையே - கால்கைக்குக்
கொட்டையிட்டுமெத்தையிட்டுக்குத்திமொத்தப்பட்டவுடல்
கட்டையிட்டுச்சுட்டுவிடக்கண்டு.
10
ஒன்பதுவாய்த்தோற்பைக்கொருநாளைப்போலவே
யன்புவைத்துநெஞ்சேயலைந்தாயே - வன்கழுக்க
டத்தித்தத்திச்சட்டைதட்டிக்கட்டிப்புட்டுக்
கத்திக்குத்தித்தின்னக்கண்டு.
11
இன்னம்பிறக்கவிசைவையோநெஞ்சமே
மன்னரிவரென்றிருந்துவாழ்ந்தவரை - முன்ன
மெரிந்தகட்டைமீதிலிணைக்கோவணத்தை
யுரிந்துருட்டிப்போட்டதுகண்டு.
12
முதற்சங்கமூதூட்டுமொய்குழலார்தம்மை
நடுச்சங்கநல்விலங்குபூட்டுங் - கடைச்சங்க
மாம்போதனவூதுமம்மட்டோவிம்மட்டோ
நாம்பூமிவாழ்ந்தநலம்.
13
எத்தனைநாள்கூடியெடுத்தசரீரமிவை
யத்தனையுமண்டின்பதல்லவோ - வித்தகனார்
காலைப்பிடித்துமெள்ளக்கங்குல்பகலற்றிடத்தே
மேலைக்குடியிருப்போமே.
14
எச்சிலென்றுசொல்லியிதமகிதம்பெசாதே
யெச்சிலிருக்குமிடமறியீ - ரெச்சிறனை
யுய்த்திருந்துபார்த்தாலொருமைவெளிப்படும்பின்
சித்தநிராமயமாமே.
15
எத்தனைபேர்நட்டகுழியெத்தனைபேர்தொட்டமுலை
யெத்தனைபேர்பற்றியிழுத்தவிதழ் - நித்தநித்தம்
பொய்யடாபேசும்புவியின்மடமாதரைவிட்
டுய்யடாவுய்யடாவுய்.
16
இருப்பதுபொய்போவதுமெயென்றெண்ணிநெஞ்சே
யொருத்தருக்குந்தீங்கினைநீயுன்னாதே - பருத்தொந்தி
நம்மதென்றுநாமிருப்பநாய்நரிகள்பேய்கழுகு
தம்மதென்றுதாமிருக்குந்தான்.
17
எந்தொழிலைச்செய்தாலுமேதவத்தைபட்டாலு
முத்தர்மனமிருக்குமோனத்தே - வித்தகமாய்க்
காதிவிளையாடியிருகைவீசிவந்தாலுந்
தாதிமனநீர்க்குடத்தேதான்.
18
மாலைப்பொழுதினறுமஞ்சளரைத்தேகுளித்து
வேலைமினக்கிட்டுவிழித்திருந்து - சூலாகிப்
பெற்றாள்வளர்த்தாள்பெயரிட்டாள்பெற்றபிள்ளை
பித்தானலென்செய்வாள்பின்.
19
விருத்தம்
நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியந்தேடி
நலனொன்றுமறியாதநாரியரைக்கூடிப்
பூப்பிளக்கப்பொய்யுரைத்துப் புற்றீசல்போலப்
புலபுலெனக்கலகலெனப் புதல்வர்களைப்பெறுவீர்
காப்பதற்கும்வகையறியீர்கைவிடவுமாட்டீர்
கவர்பிளந்தமரத்துளையிற்கானுழைத்துக்கொண்டீர்
ஆப்பதனையசைத்துவிட்டகுரங்கதனைப்போல
அகப்பட்டீர்கிடந்துழலவகப்பட்டீரே.
20
இதுவுமதுவேறு
வடிவந்தானும்வாலிபம்மகளுந்தாயுமாமியும்
படிகொண்டாருமூரிலேபழிகொண்டாடனீதியோ
குடிவந்தானுமேழையேகுயவன்றானுங்கூழையோ
நடுநின்றானும்வீணானோநகரஞ்சூறையானதே.
21
மண்ணுமுருகுமரமுருகுமாயையுருகுமாலுருகும்
பெண்ணுமுருகுமாணுருகும்பேதாபேதவகையுருகும்
அண்ணலுருகுமிடத்தமர்ந்தவாத்தாளுருகுமரவணையான்
எண்ணியுருகுங்குருநாதனென்பாலுரைத்தவோர்மொழியே.
22
திருச்சிற்றம்பலம்