நஸ்லி வாடியா உடனான மோதல்
பாம்பே டையிங் நிறுவனத்தின் நஸ்லி வாடியா, ஒரு சமயத்தில் திருபாய் மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கான மிகப்பெரும் போட்டியாளராகத் திகழ்ந்தார். நஸ்லி வாடியா மற்றும் திருபாய் இருவருமே அரசியல் வட்டங்களில் தங்கள் செல்வாக்கிற்கும், தாராளமயமாக்கலுக்கு முந்தைய பொருளாதார காலகட்டத்தில் மிகக் கடினமான உரிமங்களையும் பெறும் திறனிற்கும் நாடறிந்தவர்களாக இருந்தனர்.
1977 - 1979 இடையிலான ஜனதா கட்சி ஆட்சியின் போது, ஆண்டுக்கு 60,000 டன்கள் டை-மெத்தில் டெரப்தலேட் (DMT) தயாரிக்கும் ஆலையை நிறுவுவதற்கான அனுமதியை நஸ்லி வாடியா வாங்கினார். எண்ணக் கடிதம் உரிமமாக மாறுவதற்கு முன்பே, பல தடைகள் அவருக்கு முன் தோன்றத் துவங்கின. இறுதியாக, 1981 ஆம் ஆண்டில், நஸ்லி வாடியாவுக்கு ஆலைக்கான உரிமம் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் இரு தரப்புக்கும் இடையே ஒரு வினையூக்கியாக செயல்பட்டு போட்டியை இன்னும் மோசமாக்கியது.
