நகர் நீங்கு படலம் - 1861
கவிக்கூற்று
மக்கள் துயரம்
1861.
சுற்றிய சீரையன், தொடரும் தம்பியன்.,
முற்றிய உவகையன், முளரிப் போதினும்
குற்றம் இல் முகத்தினன், கொள்கை கண்டவர்
உற்றதை ஒருவகை உணர்த்துவாம் அரோ.
சுற்றிய சீரையன் - இடையில் கட்டிய மரவுரி உடையனாய்;
தொடரும் தம்பியன் - தன்னைப் பின்பற்றிவரும் தம்பியோடு; முற்றிய
உவகையன் - நிரம்பியமகிழ்ச்சியுடன்; முளரிப் போதினும் - தாமரை
மலரைவிட; குற்றம் இல்முகத்தினன் - குற்றமற்ற முகமலர்ச்சி கொண்டு
செல்கின்ற இராமனின்; கொள்கை- மனக் கருத்தை; கண்டவர் -
அறிந்த அந்நகர மக்கள்; உற்றதை - அடைந்ததுன்பத்தை; ஒருவகை -
ஓரளவுக்கு; உணர்த்துவாம் - சொல்லுவோம்.
கான் புகும் இராமனது முகமலர்ச்சி தாமரை மலரினும்பொலிந்தது
என்பதால் அவனது மனத்தின் சமநிலை அறியலாறிற்று. ‘அரோ’
ஈற்றசை. 166
