நகர் நீங்கு படலம் - 1846
இலக்குவன் மறுமொழி (1846-1850)
1846.
ஆண்தகை அம் மொழி பகர, அன்பனும்,
தூண் தகு திரள் புயம் துளங்க, துண்ணெனா,
மீண்டது ஒர் உயிர் இடை விம்ம விம்முவான்,
‘ஈண்டு, உனக்கு அடியனேன் பிழைத்தது யாது?’
என்றான்,
ஆண் தகை அம்மொழி பகர - ஆடவருள் சிறந்தோனாகிய
இராமன் அந்த வார்த்தைசொல்ல; அன்பனும் -இலக்குவனும்; தூண்தரு
திரள் புயம்-தூணுக்கு ஒப்பாகியதிரண்ட தோள்; துளங்க- நடுங்கும்படி;
துண் எனா - திடுக்கென்று அஞ்சி; மீண்டது ஒர் உயிர் இடைவிம்ம
விம்முவான் - திரும்பிவந்ததாகிய ஓர் உயிர் இடையில் மீண்டும்
கலங்குமாறு துடிப்பவனாய் (இராமனை நோக்கி); ‘உனக்கு-;
அடியனேன் - யான்; ஈண்டுப் பிழைத்தது யாது?’-இங்கே செய்த தவறு
என்ன; என்றான் -
இராமனுடன் சீரை சாத்திய போது உயிர் திரும்பியது இலக்குவனுக்கு.
இப்போதுஅயோத்தியில் பெற்றோர்க்கு உதவியாக இரு என்று இராமன்
தனன்னோடு வராதபடி தடுத்தபோது இடையே இருப்பதா. போவதா என்று
துடிக்கிறது எனக் கொள்க. 151
