நகர் நீங்கு படலம் - 1834

சுமித்திரையின் துன்பம்
இராமன் சுமித்திரை துயரை ஆற்றுதல்
1834.
கண்டாள், மகனும் மகனும்
தன கண்கள் போல்வார்,
தண்டாவனம் செல்வதற்கே
சமைந்தார்கள் தம்மை;
புண்தாங்கு நெஞ்சத்தனளாய்ப்
படிமேல் புரண்டாள்;
உண்டாய துன்பக் கடற்கு
எல்லை உணர்ந்திலாதாள்.
(சுமித்திரை) தண்டா வனம் செல்வதற்கே சமைந்தார்கள் -
தடைபடாத காட்டுக்குச்செல்வதற்கு உறுதி செய்தவர்களாகிய; மகனும்
மகனும் - இராமனும் இலக்குவனும்; ஆகிய தன கண்கள் போல்வார்
தம்மை - தன் இரண்டு கண்களையும் போன்றவர்களை; கண்டாள் -
பார்த்தாள்; புண்தாங்கு நெஞ்சத்தனளாய் - புண்பட்ட மனம்
உடையவளாய்; உண்டாய துன்பக் கடற்கு எல்லை உணர்ந்திலாதாள்-
தோன்றிய துன்பம்எனும் கடலுக்கு முடிவு காண மாட்டாது; படிமேல் -
மண்ணின் மேல்; புரன்டாள் -விழுந்து புரண்டாள்.
தண்டா வனம் - எனப் பிரிக்காது ஒன்றாக்கித் தண்டகாரணியம்
என்பதாகவும்உரைக்கலாம். சுமித்திரை இந்நிலையில் குறிப்பிட்டு ஓர்
இடத்தைச் சுட்டுவது பொருத்தமாய்இராது என்பதால் தண்டா வனம்
என்பதாகப் பிரித்துப் பொருள் உரைக்கப் பெற்றது.தண்டகாரணியம் என்பது
விந்திய மலைக்கும் சைவல மலைக்கும் இடையில் உள்ள காடு. 139