நகர் நீங்கு படலம் - 1826

இராமன் கூறல்
இராமன் தணிப்புரை
1826.
ஆய்தந்து, அவன் அவ் உரை
கூறலும், ‘ஐய! நின்தன்
வாய் தந்தன கூறுதியோ,
மறை தந்த நாவால்?
நீ தந்தது, அன்றே,
நெறியோர்கண் நிலாதது? ஈன்ற
தாய் தந்தை என்றால், அவர்மேல்
சலிக்கின்றது என்னோ?’
அவன் - இலக்குவன்; ஆய்தந்து - ஆராய்ந்து; அவ் உரை
கூறலும் -அந்தச் சொற்களைச் சொன்ன அளவில் (இராமன் அவனை
நோக்கி); ‘ஐய! - தம்பி; மறை தந்த நாவால் - வேதங்களைச் சொன்ன
நாக்கினால்; நின்தன் வாய்தந்தனகூறுதியோ? - உன் வாயில்
வந்தவைகளைக் கூறுகின்றாயோ, நீ தந்தது - நீஇப்பொழுது (உன் வாயால்)
தந்த சொல்; நெறியோர்கண் நிலாதது அன்றே? -நல்நெறியில்
நடப்பவர்கள் இடத்தில் நிற்கத்தகாத சொல் அல்லவா; ஈன்ற தாய் தந்தை
என்றால் - (உன் கருத்திற்கு மாயாக நடப்பவர்) பெற்ற தாயும் தந்தையும்
ஆனால்; அவர் மேல் சலிக்கின்றது - அவரிடத்தில் கோபிப்பது;
என்னோ?’ - எப்படிப்பொருந்தும்.
வேதத்தைக் கற்றுணர்ந்த இலக்குமணன் ‘அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வம்’ என்றுஅறிந்துள்ளவன். ஆகவே, அன்னைக்கும்
தந்தைக்கும் மாறாக வாய்தந்த வார்த்தைகளைப் பேசுதல்நெறியற்றோர்
செயலாகும் என்பது இராமன் சொல்லியதாகும். 131