நகர் நீங்கு படலம் - 1798

1798.
‘ஆதி அரசன், அருங்
கேகயன் மகள்மேல்
காதல் முதிர, கருத்து
அழிந்தான் ஆம்’ என்பார்;
‘சீதை மணவாளன்
தன்னோடும் தீக் கானம்
போதும்; அது அன்றேல்,
புகுதும் எரி’ என்பார்.
‘ஆதி அரசன் - மூல முதல் வேந்தனான தயரதன்; அருங்கேகயன்
மகள்மேல் -அரிய கைகேயிமாட்டு; காதல்முதிர - அன்பு முற்றுதலால்;
கருத்து அழிந்தான் ஆம்- மனம் மயங்கிஅறிவு
தடுமாறிவிட்டான்போலும்;’ என்பார்-; ‘சீதை மணவாளன்தன்னோடும்
தீக்கானம் போதும் - (நாம்) சீதைக்கு நாயகனான இராமனோடு கொடிய
காட்டிற்குப் போவோம்; அது அன்றேல் -அது முடியாமற் போகுமானால்;
எரி புகுதும் - நெருப்பில் வீழ்ந்து உயிர்விடுவோம்;’ என்பார் - .
ஆதி அரசன் - தசரதன், பிரதான மன்னன் என்பதாம். “ஆதி
மன்னனை ஆற்றுமின்நீர்” என்று (1837.) வருதல் காண்க. 103