நகர் நீங்கு படலம் - 1779

1779.
‘ “கண்ணுள் மணிபோல் மகவை
இழந்தும் உயிர் காதலியா,
உண்ண எண்ணி இருந்தால்,
உலகோர் என் என்று உரையார்?
விண்ணின்தலை சேருதும் யாம்;
எம்போல், விடலை பிரிய,
பண்ணும் பரி மா உடையாய்;
அடைவாய், படர் வான்” என்னா.
‘கண் உள் மணி போல் மகவை இழந்தும் - கண்ணிற்குள்ளே
உள்ள கருமணிப் பாவைபோன்ற சிறந்த மகனை இழந்த பிறகும்; உயிர்
காதலியா - உயிர்மேல் ஆசை வைத்து; உண்ண எண்ணி இருந்தால் -
உண்பதற்கு நினைத்து (உலகில் வாழ்ந்து) இருந்தால்; உலகோர் என்
என்று உரையார்? - உலகில் உள்ளவர்கள் (எங்களை) என்னவென்று
பழியார்; யாம் விண்ணின்தலை சேருதும் - நாங்களும் (இறந்து) மேல்
உலகம் சேர்கிறோம்; பண்ணும் பரிமா உடையாய் - அலங்கரிக்கப்
பெற்ற குதிரையை உடைய மன்னனே; எம்போல் - எங்களைப் போல;
விடலை பிரிய - மகன் பிரிந்து செல்ல; படர்வான் அடைவாய்’ -
அகன்ற வானுலகை அடைவாயாக; என்னா - என்று சொல்லி.
உலகோரது பழிமொழிக்கு அஞ்சி யாங்கள் வானுலகு சேர்வோம்
என்று மனைவியையும்,உளப்படுத்தி முனிவன் கூறினான் - ‘கண்ணிற்
கருமணி’ என்றான் மகனை; இதுவரை இவர்களுக்குப்பார்வையாக
இருந்தவன் ஆதலின். 85