குழந்தையில்லாப் பாவி

அவளுக்குக் கோடி போடக் குழந்தையோ, அண்ணனோ இல்லை. அனாதை போலப் பரிதவிக்கிறாள்.
குச்சடி மேல் பலகை
குதிரை வால் முந்தாணி
கொண்டு வந்து கோடி போட-நான்
குழந்தை யில்லாப் பாவியானேன்
அச்சடி மேல் பலகை
ஆனைவாய் முந்தாணி
அழச்சி வந்து கோடி போட-நான்
அண்ணனில்லாப் பாவியானேன்
சேகரித்தவர் :
கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர்,சேலம் மாவட்டம்.
-------------