கணிதமேதை ராமானுஜம் - 3
சென்னைப் பல்கலைக்கழகமும் அதன் சார்பில் ராமானுஜனுக்காக ஒரு நிலையான ஏற்பாட்டைச்செய்தது. அவர் அதுவரை பெற்றுக்கொண்டிருந்த வெளிநாட்டு உபகாரச்சம்பளம் முடியும் நாளான ஏப்ரல் 1, 1919 இலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு அவருக்கு ஆண்டுக்கு £250 நிபந்தனையற்ற சலுகை தருவதாக ஏற்பாடு செய்தது. புதிதாக கல்வி இயக்குனராகப் பதவியேற்றிருந்த பேரா. லிட்டில்ஹெய்ல்ஸ் அப்பொழுதுதான் மும்பையில் நடந்திருந்த இந்திய கணிதக்கழகத்தின் ஆண்டு மகாநாட்டிலிருந்து திரும்பி வந்திருந்தார். அம்மகாநாட்டில் இராமானுஜனுடைய சாதனைகளைப் போற்றித் தீர்மானங்கள் நிறைவேறியிருந்தன. பேரா. லிட்டில்ஹெய்ல்ஸும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியர் பதவி ஒன்று உண்டாக்குவதற்காகவும் அந்தப் பதவிக்கு இராமானுஜனுக்கு அழைப்பு விடுப்பதற்கும் பல்கலைக் கழகத்தை கேட்டுக்கொள்ளப் போவதாகவும் அறிவித்தார். ஆனால் காலச்சக்கரம் வேறு விதமாகச் சுழன்றது.ஆம்,இங்கிலாந்தின் குளிர் இராமனுஜத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லை.அது தவிர, இரவு பகல் கடின வேலை.அவர் அப்படியே தூங்கினாலும் அவரது மூளை எதைப் பற்றியாவது சுறுசுறுப்புடன் சிந்தித்துக் கொண்டு தான் இருக்கும்.ஒரு கட்டத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்ட இந்தியா திரும்பினார் இராமானுஜர்.அவரது உடல் 1920 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதற்க் கொண்டு மிகவும் மோசமான நிலையை அடையத் தொடங்கியது.படுத்த, படுக்கையாக இருந்த அவர் 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் நாள் தனது 33 ஆவது வயதில் மறைந்தார்.அவர் மறைந்தாலும்,அவருக்கு மணி மகுடம் சூட்டுவது போல, அவர் கண்டு பிடித்த கணிதக் கோட்பாடுகள் அனைத்தும் இன்றும் விஞ்ஞானிகள் பலருக்கு உதவிகரமாகத் தான் உள்ளது.
