எழுச்சிப் படலம் - 851

bookmark

851.    

கூற்றம் போலும் கொலைக் கணினால் அன்றி.
மாற்றம் பேசுகிலாளை. ஒர் மைந்தன்தான்.
‘ஆற்று நீரிடை. அம் கைகளால் எடுத்து
ஏற்றுவார் உமை. யாவர் கொலோ?’ என்றான்.
 
கூற்றம்     போலும்- இராமனைப் போல; கொலை -  கொல்லும்
தன்மையுள்ள;  கணினால்  அன்றி - கண்களால் அல்லாமல்; மாற்றம்
பேசுகிலாளை  -  (வாய்  திறந்து)  மறுமொழி பேசாத ஒரு பெண்ணை
(பார்த்து);  ஒர் மைந்தன் - ஒரு காளை; ஆற்று நீரிடை - (வழியிலே)
ஆற்றின் நீரிலே; உமை - உம்மை; அம் கைகளால் எடுத்து - அழகிய
கைகளால்  தூக்கி  எடுத்து;  ஏற்றுவார் - (கரை) ஏற்றவல்லவர்; யாவர்
கொல் - யார்தாமோ?; என்றான் - என்று வினவினான்.

ஆற்றைக்     கடக்கும்போது உம்மைக்  கரை   சேர்க்க  ஆடவன்
வேண்டுமே!  அப்போது  வாய்  திறந்து   கூப்பிட்டால்  தானே  அது
முடியும்.   இந்த   மவுன  விரதம்  அப்போது  கலையாதோ’    என்று
வினவுகின்றான்.      ‘கண்ணினாலன்றி   மாற்றம்    பேசுகிலாளை’-
‘கண்ணொடு    கண்ணினை      நோக்கொக்கின்   வாய்ச்சொற்கள்.
என்ன பயனும் இல’ - குறள் 1100.                           35