எழுச்சிப் படலம் - 848

bookmark

848.    

துணைத்த தாமரை நோவத் தொடர்ந்து. அடர்
கணைக் கருங் கணினாளை ஒர் காளைதான்.
‘பணைத்த வெம் முலைப் பாய் மத யானையை
அணைக்க. நங்கைக்கு. அகல் இடம் இல்’ என்றான்.
 
துணைத்த தாமரை- இரண்டான தாமரை போன்ற கால்கள்; நோவ
-  வருந்தும்படி;  தொடர்ந்து  -  தொடர்ந்து  நடந்து வந்து; அடர்-
(தன்னை)  வருத்துகின்ற;  கணைக்  கருங்கணினாளை  -   அம்பைப்
போன்று  கூரிய  கருங்கண்களையுடைய  ஒரு பெண்ணைப்   (பார்த்து);
ஒர் காளை - ஒரு வீரன்; நங்கைக்கு- இந்தப் பெண்ணின்;  பணைத்த
வெம்முலை  -  பருத்த  விரும்பத்தக்க  முலைகளாகிய;   மதம் பாய்
யானையை  -  மதநீர்  ஒழுகும்  யானையை;  அணைக்க  - தழுவிக்
கொள்ள; அகல் இடம் - (மார்பாகிய) விரிந்த இடம்; இல் என்றான் -
இல்லை என்று கூறினான்.

(வி.ரை)     ஒருவனது மார்பில் அடங்காதவாறு  இப்   பெண்ணின்
தனங்கள்  பருத்துள்ளன  என்பது.  கணைக்   கணினாள்  - உவமைத்
தொகை - உருவக அணி.                                   32