எழுச்சிப் படலம் - 847
847.
சுழி கொள் வாம் பரி துள்ள. ஒர் தோகையாள்
வழுவி வீழலுற்றாளை. ஒர் வள்ளல்தான்.
எழுவின் நீள் புயத்தால் எடுத்து ஏந்தினான்;
தழுவி நின்று ஒழியான்; தரைமேல் வையான்.
சுழிகொள்- நற்சுழிகளையுடைய; வாம்பரி - தாவும் குதிரையானது;
துள்ள - துள்ளிப் பாய; ஒர் தோகையாள் - (அஞ்சிய) மயிலைப்
போன்ற சாயலையுடையவளாகி; வழுவி வீழலுற்றாளை -
(குதிரையிலிருந்து நழுவி விழுந்தவளை; ஒர் வள்ளல் தான் - இரக்கப்
பண்புள்ள ஒரு வீரன்; எழுவின்- கணைய மரம் போன்ற; நீள்
புயத்தால்- நீண்ட கையால்; எடுத்து ஏந்தினான் - வாரி எடுத்துத்
தாங்கியவனாக; தரைமேல் வையான் - தரைமேல் வையாதவனாய்;
தழுவி நின்று ஒழியான் - (அவளை) தழுவியபடியே நின்றுவிட்டான்.
குதிரை துள்ளிப் பாய. அதன்மேல் இருந்த ஒருத்தி தவறிக் கீழே
விழ அப்போது பக்கத்திலிருந்த வீரன் அவளைத் தன் கைகளால்
தழுவிக் கொண்டு நின்றான். அவளை நிலத்தின்மேல் விடவில்லை
என்பது. 31
