உயிர்மெய் வருக்கம்

உயிர்மெய் வருக்கம்

bookmark

கண்டு ஒன்று சொல்லேல்.


கண்ணாற் கண்டதற்கு மாறாகப் (பொய் சாட்சி) சொல்லாதே.


ஙப் போல் வளை.


'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுத்துகளைத் தழுவுகிறதோ
அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களைக் காக்க வேண்டும்.

  • "ங" என்னும் எழுத்தைக் கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும்.
  • அதைப்போலப் பணிவாகப் பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

சனி நீராடு.

  • சனி(குளிர்ந்த) நீராடு.

ஞயம்பட உரை.


கேட்பவருக்கு இன்பம் உண்டாகும்படி இனிமையாகப் பேசு.


இடம்பட வீடு எடேல்.
உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாகக் கட்டாதே.


இணக்கம் அறிந்து இணங்கு.


ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு

அவருடன் நட்பு கொள்ளவும்.


தந்தை தாய்ப் பேண்.


உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.


நன்றி மறவேல்.


ஒருவர் உனக்குச் செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.


பருவத்தே பயிர் செய்.


எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.


மண் பறித்து உண்ணேல்.
பிறர் நிலத்தைத் திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது) நீதி மன்றத்தில் இருந்து கொண்டே

லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)


இயல்பு அலாதன செய்யேல்.


நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.


அரவம் ஆடேல்.


பாம்புகளைப் பிடித்து விளையாடாதே.


இலவம் பஞ்சில் துயில்.
'இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு


வஞ்சகம் பேசேல்.


கபடச்(உண்மைக்குப் புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களைப் பேசாதே


அழகு அலாதன செய்யேல்.
இழிவான செயல்களைச் செய்யாதே


 இளமையில் கல்.


இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளைத் (இலக்கணத்தையும் கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.

அரனை மறவேல்.


கடவுளை மனதில் எப்பொழுதும் நினைக்கவேண்டும்


அனந்தம் ஆடேல்.


கடல் நீரில் விளையாடுவது துன்பம் தரும்

மிகுதியாகத் தூங்காதே