உண்டாட்டுப் படலம் - 1056
மடந்தையொருத்தி தன் நிழலைத் தோழி என மயங்குதல்
கள் மயக்கத்தால் நிகழ்ந்த தடுமாற்றங்கள்
அறுசீர் ஆசிரிய விருத்தம்
1056.
விடன் ஒக்கும் நெடிய நோக்கின்
அமிழ்து ஒக்கும் இன்சொலார்தம்
மடன் ஒக்கும் மடனும் உண்டே? -
வாள் நுதல் ஒருத்தி காணா.
தடன் ஒக்கும் நிழலை. ‘பொன் செய்
தண் நறுந் தேறல் வள்ளத்து
உடன் ஒக்க உவந்து நீயே
உண்ணுதி. தோழி!’ என்றாள்.
வாள் நுதல் ஒருத்தி - ஒளி நிறைந்த நெற்றியுடையாள் ஒருத்தி;
தடன் ஒக்கும் நிழலை - (தன்னைப் போன்றே அழகின்) பெருமையில்
ஒத்திருக்கும் தனது நிழலை; பொன்செய் தண்நறும் தேறல்
வள்ளத்துக் காணா - பொன்னால் செய்யப்பட்ட குளிர்ந்த மணமுள்ள
மதுவின் கிண்ணத்தில் கண்டு; தோழி. உடன் ஒக்க உவந்து நீயும்
உண்ணுதி என்றாள் - “தோழியே! நீயும் என்னோடு இணைந்து
மகிழ்ந்து (இம்மதுவினை) உண்ணுவாய்!’ என்று வேண்டினாள்; விடன்
ஒக்கும் நெடியநோக்கின் - (விரும்பாதார்க்கு) நஞ்சனைய
நீண்டவிழிகளையும்; அமிழ்து ஒக்கும் இன்சொலார்தம் - (உண்பாரை
நீண்டு வாழ்விக்கும்) அமிழ்தம் போல. கேட்டார் செவிக்கு நெடுநாள்
இனிக்கும் இன் மொழியும் உடைய மகளிருடைய; மடன் ஒக்கும்
மடனும் உண்டே? - அறியாமை போன்ற அறியாமை வேறு
எவரிடத்தும் உண்டோ? (இல்லை என்க)
அச்சம். மடம். நாணம். பயிர்ப்பு என்னும் மகளிர்
நாற்குணங்களுள் ஒன்றான இம் மடம் பெண் இயல்புக்கு மேலும்
அழகு சேர்ப்பதனை இப்பாடலாலும் காண்க.
வேற்றுப் பொருள் வைப்பணி. காணா - கண்டு ; செய்யா என்னும்
எச்சம். “இருநோக்கு இவள் உண்கண் உள்ளது; ஒரு நோக்கு நோய்
நோக்கு” (திருக். 1091) என்பராதலின். “விடன் ஒக்கும் நோக்கு”
என்றார். கேட் பார்க்குப் பேரின்பம் தருதலின்.” அமிழ்தொக்கும்
இன்சொல்” என்றார். “அமிழ்து படுதீஞ்சொல்” (பெருங் 1:43:35) 10
