இரவலாச்சு

அவளுக்கு மணமானது, மிக்க மகிழ்ச்சியுடன் கணவனுடன் வாழ்க்கை நடத்துகிறாள். இனி புருஷன் வீடு தான் சொந்தம். பிறந்த வீடு சொந்தமில்லை என எண்ணி இறுமாந்திருந்தாள். ஆனால் புருஷன் காலமானவுடன் புருஷன் வீடும் இரவலாகப் போனதை எண்ணி எண்ணி புலம்புகிறாள். புருஷன் போனவுடன் அவருடைய சொந்தமும் போய்விட்டது.
தங்க செவரு வச்சி
தட்டோடு போத்தனிங்கோ
தட்டோடு சொந்த மில்லே-எனக்கு
தாவு எரவலாச்சு
பொன்னு செவரு வச்சி
புது ஓடு போத்தனிங்கோ
புது ஓடு சொந்தமில்லே-எனக்கு
பூமி எரவலாச்சு
வட்டார வழக்கு:போத்தனிங்கோ-போற்றினீர்கள்;தாவு(தெலுங்கு வார்த்தை)-இடம்.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: சேலம் மாவட்டம்.
-------------