அப் புரட்சிக்கான காரணங்கள் :-
(1) 87 வருடகாலத்துக்குள் பசி என்றால் என்ன என்று தெரியாத இந்தியத் திருநாட்டில் 12 பெரிய பஞ்சங்கள் ஏற்பட்டு. பலா ஆயிரம் மக்கள் பட்டினியால் செத்தனர். அதற்கு காரணம் ஆங்கிலேயர்கள் கொண்ட வந்த நிலச் சட்டங்கள், அநியாய வரிகள், ஜமிந்தார் முறைகள் போன்றவை .
(2) நன்றாக படித்து இந்தியர்கள் பெரிய உயர்பதவிக்கே போனாலும், அவர்களால் அடிப்படை ஆங்கிலேய ஊழியன் வாங்கும் சம்பளத்தைக் கூட நினைத்துப் பார்க்க முடியாது.
(3) மத நம்பிக்கை மீது பெரும் அடிகள் விழுந்தன. ராணுவத்தின் பாதுகாப்போடு கிறிஸ்துவ மதம் பரப்பப் பட்டது. இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மாறும் பிள்ளைகளுக்கு தந்தையின் சொத்துக்களில் உரிமை உண்டு என்று கொண்டு வரப்பட்ட சட்டம், பெரும்பான்மையான இந்துக்களை கொதிப்படைய செய்தது.
(4) ஆங்கிலேயரின் துணை படை திட்டம் மன்னர்களிடையே வெறுப்புணர்ச்சி உண்டாக்கியது. இரண்டாவது முகலாய அரசர் பகதூர் ஷாவை டெல்லியை விட்டு விரட்டி. அவரது அரச பட்டத்தையும் பறித்துக் கொண்டது ஆங்கிலேயே அரசு.
(5) இது தவிர, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டு வகை துப்பாக்கிகள் உடனடிக் காரணமாக அமைந்தன. அவ்வகை துப்பாக்கிகளுக்கு வழங்கப்பட்டதோட்டாக்கள் ஒரு வகை உறையால் மூடப்பட்டிருந்தன. இவற்றை வாயால் கடித்து உறைகளை அகற்ற வேண்டியிருந்தது. இந்த உறைகள் மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பினால் ஆனவை என்று தகவல் பரவியது. இது இந்து மற்றும் முஸ்லிம் சமயத்தைச் சார்ந்த ராணுவ வீரர்களின் சமய உணர்வை புண்படுத்துவதாக ராணுவ வீரர்கள் எண்ணினர். இதன் காரணமாக ராணுவ வீரர்கள் அவ்வகை உறைகளை வாயால் கடித்து நீக்க மறுத்து உயர் அதிகாரிகளை எதிர்த்தனர். இதன் தொடர்ச்சியாக 1857 மார்ச் 29 ஆம் நாளில் மங்கல் பாண்டே என்ற ராணுவ வீரர் ஒருவர் பாரக்பூரில் தனது உயரதிகாரியை தாக்கி தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இது ஆங்கிலேய ராணுவத்தில் பணிபுரிந்த இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட ஒரு ஆரம்பமாக அமைந்தது.
