திருமால் அவதாரம்

சோமுகா சுரனை முன் வதைத்தமரர் துயர்கெடச்
சுருதிதந் ததுமச் சம்ஆம்;
சுரர்தமக் கமுதுஈந்த தாமையாம்; பாய்போற்
சுருட்டிமா நிலம்எ டுத்தே
போமிரணி யாக்கதனை உயிருண்ட தேனமாம்;
பொல்லாத கனகன் உயிரைப்
போக்கியது நரசிங்கம்; உலகளந் தோங்கியது
புனிதவா மனமூர்த் திஆம்;
ஏமுறும் இராவணனை வென்றவன் இராகவன்;
இரவிகுலம் வேர றுத்தோன்
ஏர்பர சிராமன்; வரு கண்ணனொடு பலராமன்
இப்புவி பயந்த விர்த்தோர்
ஆமினிய கற்கிஇனி மேல்வருவ திவைபத்தும்
அரிவடிவம்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!