திருமால் அவதாரம்

bookmark

சோமுகா சுரனை முன் வதைத்தமரர் துயர்கெடச் 
      சுருதிதந் ததுமச் சம்ஆம்; 
சுரர்தமக் கமுதுஈந்த தாமையாம்; பாய்போற் 
      சுருட்டிமா நிலம்எ டுத்தே 
போமிரணி யாக்கதனை உயிருண்ட தேனமாம்; 
      பொல்லாத கனகன் உயிரைப் 
போக்கியது நரசிங்கம்; உலகளந் தோங்கியது 
      புனிதவா மனமூர்த் திஆம்;
ஏமுறும் இராவணனை வென்றவன் இராகவன்; 
      இரவிகுலம் வேர றுத்தோன் 
ஏர்பர சிராமன்; வரு கண்ணனொடு பலராமன் 
      இப்புவி பயந்த விர்த்தோர் 
ஆமினிய கற்கிஇனி மேல்வருவ திவைபத்தும் 
      அரிவடிவம்; அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!